Tuesday, 27 May 2025

மரணமாஸ் - சுராத்து'ஸ் day out!

 படம் நம்மை ஈர்த்ததில் முக்கிய பங்கு பசில் ஜோசப்பின் கெட்டப்புக்கே.அசல் சுராத்தை படத்தில் இரு ரூபங்களில் காணலாம்.

   தோற்றத்தில் மட்டுமல்லாது ; காலி பெருங்காய டப்பாவாக இருந்தாலும் ஓவர் பில்டப் & பந்தா ,தன்னை சுற்றி ஒரு துதி பாடும் கூட்டத்தை தயார் செய்து வைத்திருத்தல்,ஏடாகூடமாக ஏதாவது செய்து ஊரை அலற விடுதல் என்று லூக் (பசில் ஜோசப்) நடத்தையிலும் அசல் சுராத்துதான்.

 

 
    
தனது தந்தையைக்காணோம் என்றதும் பெண்கள் கழிப்பிடத்தில் மகன் தேடும் காட்சி,பட்டாயா தொடர்பான உரையாடல்,அந்த கண்டக்டர் அருவி கேசவ குரூப் மார்பில் குத்தப்பட்ட பச்சை போலவே தனது மார்பில் இருக்க "யப்பா!" என்று உணர்ச்சிவசப்படுதல் அதகளம்!             
           பார்க்கும் எல்லோருக்கும் அதேமாதிரி பச்சை குத்திவிட்ட குரு சோமசுந்தரத்தை ஜோசியராக காட்டியதும் வந்த பீதி ஒரே ஷாட்டோடு அவரை அனுப்பி வைத்து இயக்குனர்  பால் வார்த்தார்! ஒரு பஃப் கிங்ஸ் லெவன் மற்றொரு பஃப் ஆஸ்த்துமா இன்ஹேலர் என்று கேசவ குரூப் இழுப்பதாக காட்டி கீழே எச்சரிக்கை வாசகம் போடும்  சென்சாருக்கே சவால் விட்டுள்ளார்கள் ! 😃
  சீரியல் கொலையாளி வேடம் செய்த ஶ்ரீகுமார்(ராஜேஷ் மாதவன்) மற்றும் கேசவ குரூப்( புலியனம் பௌலோஸ்) ஆகிய இருவருமே பார்க்க ஏதோ  AI உருவாக்கிய உருவம் உயிர்பெற்று வந்ததுபோல இருக்கிறார்கள். குறிப்பாக நேரு உடை அணிந்து வரும் SK   surreal அனுபவத்தை உண்டாக்குகிறார்!
      நமதபிமான சைத்ரா ஆச்சார் நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம்  Happy Birthday to me .கிட்டத்தட்ட அந்தப்படம் தந்த அனுபவம் இதிலும் கிடைத்தது.பல இடங்களில் விடாது சிரிப்பு தான் 😃 ( உதயா சீரியஸ் காட்சிகளைக்காணும் போதே சிரிப்பான்.இப்ப சிரிப்புக்கு கேட்கணுமா? - கும்மாங்கோ).

     சீரியல் கொலையாளி சுற்றி வளைப்பு என்றதும் வரும் சுராத்து அறிமுக காட்சி அட்டகாசம்! சுராத்து அண்ணாயிஸ்ட்டாக காட்டப்படுகிறார்.அறிமுக காட்சியும் மெர்சல் அண்ணா ஸ்டைல் தான் 😃 . தியேட்டராக இருந்திருந்தால் ஃபயர் விட்டிருக்கலாம்! 



 

    கிராமபஞ்சாயத்து தலைவரின் கூகுள் சர்ச் ஹிஸ்டரியை  பிரிண்ட் போட்டு பஞ்சாயத்து அலுவலகம் வாயிலிலேயே ஒட்டியது,சர்ச் பாவ மன்னிப்பு உரையாடல்களை ரகசிய மைக் மூலம் ஸ்பீக்கரில் ஒலிபரப்பியது,சுராத்து கைது செய்யப்பட்டதும் ஊர் மக்கள் திரண்டு கண்டிப்பது,நீச்சல் வீரர் இறந்ததும் நீச்சலை தடை செய் என்று போராடுதல்,பேப்பர் ஸ்ப்ரே அடித்து கொன்றதாக காதலி சொல்ல "என்ன ஃபிளேவர்?" என்று கூலாக கேட்பது,இடுகாட்டில் "டென்சனா இருக்கு ஒரு பீடி பத்த வச்சிக்கிறேன்" என்று கேசவ குரூப் பையில் இருந்த [(கிங்ஸ் லெவன்)^n] கலந்த பீடியை இழுத்து அடுத்த நொடியே 'விண்வெளி நாயக்கடு'வாக மாறி பேசுதல் என்று சின்ன சின்ன கிறுக்குத்தனங்கள் அட்டகாசம். 



   சீரியல் கொலையாளி (SK) சிறுவர் சிறுமிகள் மத்தியில் நின்றபடி வெட்டு குத்து என்று கதை சொல்லும்போது எல்லோரும் அலறி அழ ஒரு சிறுவன்(அவன் அட்டகாசமாக நடித்துள்ளான்) "மிச்ச கதையை சொல்லு!" என்று கேட்பது( ஒருவேளை அவன் உதயா உள்வட்ட வாசகனாக இருப்பானோ?  - கும்மாங்கோ) என்று வகைதொகை இல்லாது புகுந்து விளையாடி விட்டார்கள். 

 

     கதாநாயகித்தனம் இல்லாத கதாநாயகி என்ற பெருமையை நஸ்ரியாவுக்கு அடுத்து அனிஷ்மா பெறுகிறார்.ஏற்கெனவே இவர் ஐ ஆம் காதலன் படத்தில் நடித்தவர்.அதற்காக இவர் அடுத்த நஸ்ரியா என்றெல்லாம் அடித்து விட மாட்டோம்.கடைசியில்  எல்லாரும் எஸ்கேவிடம் அடிவாங்கி விழுந்து கிடக்கும்போது ஜெஸ்ஸி ஆவேசமாக வந்து நின்றபோது "இவர் புரட்டி எடுப்பதாக காட்டினால் சாதாரண run of the mill காட்சியாகி விடுமே!" என்று வருத்தப்பட்டதை புரிந்துகொண்டதை போல "கலாய்ப்பதில் ஆண் பெண் பேதமே இல்லை" என்று டாப் கியரில் அடித்து தூக்கி விட்டனர்!

  


   வினீத் ஶ்ரீனிவாசன் நடித்த ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் இறுதியில் மிக சீரியஸாக ஒரு அடக்கம் செய்யும் காட்சி வரும்.அதாவது டபுள் அடக்கம்.ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட ஒரு சவப்பெட்டியின் மேலேயே கொல்லப்பட்டவர்(யாரென்று சொல்ல மாட்டோம்.படம் பார்க்காதவர்கள் கடுப்பாகி விடுவார்கள்) பிரேதத்தை போட்டு மூடி விடுவார்கள்.

 

  இந்தப்படத்திலும் அப்படியான ஒரு முயற்சி வருகிறது.ஆனால் இனி எப்போதாவது அந்த செகண்ட் கிளாஸ் யாத்ரா பட அடக்க காட்சியை பார்த்தால் இந்தப்பட காட்சி நினைவுக்கு வந்து சிரிப்புதான் வரும்!
   சூர்யா தனக்கு கேரளாவில் வாசகர்கள் அதிகம் என்பார்.அது உண்மையோ பொய்யோ ஆனால் சூர்யா, சுராத்து ஆகியோர் குறித்து சூர்யாவின் எழுத்து மூலமாக பரிச்சயம் ஆனவர் யாரோ அவர்களை வில்லங்கமாக சித்தரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் நமக்கு இப்போதும் உண்டு 🤪 சுராத்து - லூக்
சூர்யா - படம் பார்த்தாலே புரியும்! 😜



ஒரே குறை அந்த கேரக்டர் ஆன்லைனில் கில்மா சாட்டிங் செய்வதாக காட்டியிருந்தால் முழுமை பெற்றிருக்கும்!


    இந்தமாதிரி அவல நகைச்சுவை படங்களாக பார்த்து சிரித்து பழகிவிட்டதால் சாதாரண நகைச்சுவை காட்சிகள் அவ்வளவு சிரிப்பை உண்டாக்குவதில்லை!

     ஒலக விமர்சகர்கள் இப்படம் குறித்து எழுதும்போது அலுத்தபடி "இன்னும் எத்தனை murder mystery படங்களைத்தான் மலையாளத்தில் எடுப்பார்கள்" என்பதாக எழுதியதை படித்ததும் தலை சுற்றியது.
        அடங்கப்பா ஒரு சிபிஐ டயரி குறிப்பு மாதிரியான படமா இது??இது ஒரு அவல நகைச்சுவை படம்.கொலையாளி இவர்தான் என்று ஆரம்பத்திலேயே காட்டி விடுகிறார்கள்.இருந்தும் இப்படியாக எழுதுகிறார்கள்.இவர்களே தமிழில் வரும் மிகை உணர்ச்சி படங்களை உச்சிமுகர்ந்து "இந்த படமெல்லாம் மலையாளத்தில் வந்திருந்தால் கொண்டாடப்பட்டிருக்கும்" என்று மூக்கு சிந்துவார்கள்!
   இன்னொரு க்ரூப் cringe என்று வருகிறது.எல்லாரும் cringe என்ற அனிமல் பார்க் படத்தையே ரசித்தோம்! ஆக cringe சான்றிதழ் வழங்கும் கோஷ்டி மொத்தமாக அத்தகைய படங்களின் பட்டியலை வெளியிடவும்! நீங்கள் பாராட்டும் படங்களை விட cringe ஆகும் படங்கள் அட்டகாசமாக இருக்கிறது!
   நாம் சுராத்துக்காக ரிப்பீட் ஆடியன்சாக படத்தை மீண்டும் பார்ப்போம்!(அப்போ சூர்யாவுக்காக இன்னொருக்கா பாக்க மாட்டியா?- கும்மாங்கோ)
   
 

No comments:

Post a Comment