Showing posts with label திராவிட அரசியல். Show all posts
Showing posts with label திராவிட அரசியல். Show all posts

Thursday, 12 July 2012

அரசு கேபிள் யாருக்கு லாபம்?

கேபிள் ஒளிபரப்பில் தனியார்(குறிப்பாக பிரதர்ஸ்)monopoly ஐ குறைப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது அரசு கேபிள்.தடல் புடலான அறிவிப்பு.சென்ற ஆட்சியில் இது ஒரு மிரட்டல் ஆயுதமாகவே பயன்பட்டது(குடும்ப சச்சரவை சமாளிக்க).பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது
பின்னர் ஆட்சி மாற்றம் வந்தபின் நினைத்தது போலவே இது கொண்டுவரப்பட்டது
பொதுவாக  ஒரு நிறுவனம் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு காரணம் என்ன?லாப நோக்கின்றி மக்கள் சேவை ஆற்ற,அதில் வரும் லாபம்(ஒருவேளை இருக்குமானால்) அரசுக்கு சேர்வதன் மூலம் அந்த பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தலாம் போன்றவை சில..
ஆனால் இந்த கேபிள் தொழில் அரசுடைமை  ஆக்கபட்டதன் காரணம் என்ன?மக்கள் நலன் நிச்சயமாக இருக்க முடியாது(கேபிள் ஒளிபரப்பு தரத்தை பார்த்தாலே இது தெரியும்) லாபம் எப்படியும் வராது.முக்கிய காரணம் கேபிள் தொழில் ஒரு "பிரதர்ஸ்" கைப்பிடியில் இருந்ததால் அதை விடுவிக்க செய்யப்பட்டது என சிலர் சொல்லலாம்...நான் அதை மறுக்கிறேன்..
கேபிள் மூலம் நிரந்தரம் இல்லாத ஏன் நிரந்தரம் இல்லாத என சொல்கிறேன் என்றால் எல் சி டி பிளாஸ்மா போன்ற தொலைகாட்சி பெட்டிகளில் சாதாரண தரத்தில் (standard definiton) பார்த்தால் மிக கேவலமாக இருக்கும்.அதனால் இது போன்ற உயர் தொழில்நுட்ப டிவி பெட்டிகளை வாங்கும்போதே கண்டிப்பாக டிஷ் (குறிப்பாக High Definiton என்று சொல்லப்படும் உயர் துல்லிய ஒளிபரப்பு ) தேவை.அந்த மக்களை விட்டு விடுவோம்..சாதாரண CRT வகை டிவி பார்ப்போருக்கு எந்த ஒளிபரப்பி பார்த்தாலும் ஓகே.ஆனாலும் ஓரளவுக்கு தரம் இருந்தால்தான் அந்த வகை டிவி பெட்டிகளிலும் பார்க்க முடியும்.
இது  வரை ஒற்றை ஆதிக்கம் கேபிள்தொழிலில் செலுத்தி வந்தனர் பிரதர்ஸ்.அது தற்காலிக வருமானம்தான்.ஏனெனில் விலை குறையும் எல் சி டி டிவிக்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என ஆகி விட்ட நிலையில் மக்கள் அதை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமில்லை...மிக்கப்பெரிய திரை துல்லியமான ஒலி ஒளி இவற்றுக்கு நான் முன்னமே சொன்னது போல டிஷ்இருப்பதே சரி என மக்கள் நினைப்பர்.
 அதனால் நிரந்தர வருமானம் என சொன்னால் அது டிஷ் வாடிக்கையாளர் மூலம் வரும் வருமானமாகவே இருக்க இயலும்.
அதிலும்  குறிப்பாக "பிரதர்சின்" டிஷை ஏன் வாங்குவார்கள்?ஏனெனில் நம் மக்கள் கேபிள் வருதா என கேட்க மாட்டார்கள்...சன்டிவி வருதா என்றுதான் கேட்பார்கள் என்று ஒரு முதுபெரும் மொழி ஒன்று உண்டு.அதன்படி அனைத்து சன் குழும சேனல்களும் வருவது சன் டைரக்ட் திட்டத்தில்தான்.ஆக கேபிள் அவுட்டு சன் டைரக்ட் இன்....பிரதர்சுக்கு நிரந்தர வருமானம் செய்து தந்த கழக அரசு வாழ்க
மேலும்  அரசு கேபிளை சென்னைக்கு கொண்டு வர போகிறார்களாம்...பெரு  நகரங்களில் டிஜிடல் ஒளிபரப்பு மட்டுமே இருக்க வேண்டும் என கேடு விதிக்கப்பட்ட நிலையில் கேபிலாக இருந்தாலும் செட டாப் பாக்ஸ் வாங்க வேண்டும்.இதை மக்கள் விரும்புவார்களா?இந்த காசில் டிஷ் வாங்கிடலாம் என நினைப்பர்.பிரதர்சுக்கு செம கல்லா..ஹ்ம்ம்...என்னமோ போடா மாதவா

Monday, 5 September 2011

அரசு கேபிளும் சமச்சீர் கல்வியும்

 அரசு கேபிளும் சமச்சீர் கல்வியும்---ரெண்டுத்துக்கும் என்னைய்யா சம்மந்தம்னு கேட்டீங்கன்னா ரெண்டும் ஒப்புக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதுதான்!!அரசு
அரசு கேபிள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமென்ன?நிதி சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன் செலுத்திய ஒற்றை ஆதிக்கம்.கேபிள் தொழில் செய்வோரை மிரட்டியது உள்ளிட்ட இன்ன பிற குற்றச்சாட்டுகள்.சரி அரசு கேபிள் ஆரம்பிச்சீங்க அது ஒழுங்கா இருக்கான்னா இதுக்கு பழைய கேபிளே  தேவல என புலம்பல் எழுந்ததுதான் மிச்சம்!!பின்ன ஜெயா+கலைஞர் குழும டி.விக்கள்  மட்டுமே தெரிகிறது(இதைதான் காமராஜர் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றாரோ?).ஆக என் முதுகை நீ சொறி உன் முதுகை நான் சொறிவேன் கதைதான்!!ஆட்சி மாறினால் நீ ஜெயா டி.வி குழுமத்தை நிறுத்தாதே வேறு எதை வேண்டுமானாலும் நிறுத்திகொள் என்பதுதான் இதில் சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி!!இதுதான் திராவிட அரசியல்!இதை நான் கண்டித்தால் உடனே மேலே ஏற வருகின்றனர்.
   மேலும் அரசு கேபிளின் நோக்கம் பொது எதிரி(மாறன் பிரதர்ஸ்) சன் குழுமத்தை ஒழிப்பதா என கேட்டால் அதையும் மறுக்க முடியாது!சன் குழுமம் இருட்டடிப்பு செய்யப்பட்டதில் ஜெயலிதா கருணாநிதி இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும் என்பதை மறுக்க இயலாது!மேலும் அரசின் நோக்கம் அரசுக்கு வருமானத்தை பெருக்குவதா அல்லது தனியார டிஷ் டி.வி(டி.டி.ஹெச்) வியாபாரத்தை பெருக்குவதற்கா  என சந்தேகம் எழுகிறது.ஏன்னா நாலு சேனல் மட்டுமே தெரியுது.இதுல 70   சேனல் தெரியுதுன்னு பத்திரிகைகள் எழுதுவது கேலிகூத்து!!இப்படி நாலு சேனலுக்கு 70     ரூவா வாங்குனா மக்கள் டிஷ டி.விக்கள்(இது பிராண்ட் நேம் இல்லை.பொதுவா டி.டி.ஹெச். ஐ சொல்றேன்) பக்கம் போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?அரசின் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தினால் நன்று!