Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, 15 January 2021

கோலிவுட் ரவுண்டப் 5.0

 Pituitary warning: சிகரெட் பிடித்தல் உயிரை கொல்லும்.புடிக்காம இருந்தாலும் வேற எதாச்சும் காற்றில் பரவி கொல்லும்!

.
டுமீல்.....டிஷ்.......டமால்.....dispararle a la muerte...

 டப்.....டுப்....

...............

.Shoot...Shoot.....
.
அமேசான் அடர்ந்த காட்டின் நடுவே...
மம்பு  ஓடிக்கொண்டிருக்க பின்னால் அமேசான் வன பாதுகாப்புப்படை....
.
ஐயோ!இந்த குகீந்திரன் பேச்சை கேட்டது தப்பா போச்சே...
.
டுமீல்...
..பின்னாலிருந்து வந்த புல்லட் ஒன்று மம்புவின் முன் மண்டையின் கற்றை முடியை கழட்டிக்கொண்டு போகிறது....
.
போச்சா!இனி "அவரு" மாதிரி பேட்ச் விக் வச்சித்தான் நடிச்சாகணும்!ஏற்கெனவே அக்ரமை போட்டு  காஜராட்டைன்னு வச்சு செஞ்சதை பாத்தப்பவே நா உசார் ஆகியிருக்கணும்!இப்ப பாரு முன்னாடி க்ளார் அடிக்கும்படி ஆகிப்போச்சே.....
.
லோக்கல்ல அழகா என்னோட வீட்டு பாத்ரூம்ல  டீசருக்கான சீனை எடுக்கலாம்னு சொன்னதை வேணாம்னுட்டு அமேசான் காட்டில் அனகோண்டாவை உசுரோட கையில புடிக்குறமாதிரி காட்டுனாத்தான் த்ரில்லுன்னு சொன்ன அந்த டைரக்டர் எங்கடா....என்றபடி புதருக்குள் மறைந்து ஓடுகிறார்....
.
நாம் அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆனோம்.
.
******************************************************************************
அடுத்து அடுத்து சென்றது பல்பேட்டா ஷூட்டிங் ஸ்பாட்.... கொருக்குபேட்டை ஜிம்...

.
பஞ்சித்: ம்...அப்டிதான் மாம்ஸ்....உன்னும் வெறும் ஆயிரம் ஸ்குவாட்தான் மிச்சம்.....
.
 கார்யா: .....நுரை தள்ளியபடி......  "அய்யய்யோ.......ஜாலியா நொந்தானத்தோட காலேஜ் வாசல்ல கிரவுண்ட்நட்  போட்டுக்கிட்டு இருந்தவனை  இப்படி பெண்டு நிமித்துறியே மச்சி...இது நாயமா?


.
பஞ்சித்: இன்னா தல மெர்சல் ஆவாத பண்ணு.நெக்ஷ்ட்  இயர் கீட் எக்ஜாம்ல "நீ எத்தினி வாட்டி தண்டால் எட்த்த" ....அத்தான் கொஷின் ஆ வரப்போவுது...
.
கார்யா: ஆமா ஒரு சிங்கிள் க்வெஸ்டின்....அதுக்காக மொத்தமா ஆல்  பாடி பார்ட்ஸும் டேமேஜ் ஆகிடும் போலயே!....அய்யய்யோ என்று அலறியபடி மீண்டும் ஸ்க்வாட்ஸ்!
.


***********************************************************************************************************
அடுத்து நாம் சென்ற இடத்தில் தேய்ந்து போன ரெகார்டாக ஒரு வருடமாக  ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..

 

..லை....ப்.....இ....கர்ர்...ர்ர்ர்ரர்.....ஸ்....வெ....கர்ர்ர்ர்.....ரி....ஷா....ர்ர்ர்...ட்....ந....கர்ர்ர்ர்....ண்பா..........
.
கவுண்டர்: எந்த நேரத்துல வாய வச்சாங்களோ!ஒலகத்துல பாதி பேர் மேல டிக்கட் வாங்கிட்டான்....சரி இங்கேர்ந்து மொதல்ல ஜூட் விடுவோம்...
.
********************************************************************அடுத்து அஜய் கேதுபதி வீடு...கணசிங்கம் என்ற கிங்கள பெயர் தலைப்பை மாற்றக்கோரி வீட்டின் முன்பு நூறு பேர் மல்லாக்க படுத்து மறியல் செய்துகொண்டிருக்க இடையில் இருந்த கேப்பில் கால் வைத்து ஜம்ப் பண்ணி நாம் உள்ளே சென்றோம்....
.
அஜய் கேதுபதி முகமூடி அணிந்து நம்மை வரவேற்கிறார்...
.
கவுண்டர்: ...ண்ணா ......ஒரு டவுட்டு...
.
அ.கே: சொல்லுங்கஜி..
.
கவுண்டர்: போன வருசம் பாஸ்டர் ஆடியோ ரிலீஸ் பங்க்சன்ல ஒண்ணு சொன்னீங்களே நியாபகம் இருக்கா?
.
அ.கே:ஜி....சாரிஜி.....நியாபகமில்ல...
.
கவுண்டர் :(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒரு வாரத்துக்கு பத்து படம்னு கால்ஷீட் குடுத்துட்டு இருந்தா எப்படி நியாபகம் இருக்கும்....ஆ...அது வந்துங்ணா...."நம்ம மனசு சுத்தமா இருந்தா எதுக்கும் நாம பயப்பட வேண்டியதில்லைன்னு சொன்னீங்க.ஆனா நீங்க ஏனுங்ணா முகமூடி போட்டிருக்கீங்க?உங்க மனசு சுத்தமில்லையா?
.
அ.கே:...து...அது...வந்துஜி......
.
கவுண்டர்:க்கும்...தமிழ்நாட்ல மைக்கும் மேடையும் கெடச்சிட கூடாது!சகட்டுமேனிக்கு அடிச்சி விடவேண்டியது...என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டா பம்ம வேண்டியது!அவனவனுக்கு தெரிஞ்சத செய்ங்க!உனக்கு என்ன தெரியும்?
.
அ.கே:து....வந்து......
.
கவுண்டர்: கேக்கக்கூடாத கேள்விய கேட்டுட்டேன் போல!சரிங்ணா நீங்க வழக்கம் போல மேடைல மைக்க புடிச்சு ஆட்டையாம்பட்டி அரசியல்லேர்ந்து ஆப்ரிக்க அரசியல் வரைக்கும் சகட்டுமேனிக்கு அடிச்சி உடுங்க!இப்ப என்ன ஆளை உடுங்க!
.

*******************************************************************************
அடுத்து கலிமை ஷூட்டிங் ஸ்பாட்....
.
எந்த வருசம் ஷூட்டிங் ஆரம்பித்தது என்பதையே மறந்துபோய் காலமற்ற ஒரு வெளியை உள்ளே செல்லும்போதே நாம் உணர்ந்தோம்.
.
நுழைவாயிலில் ஒருவர் தலையை பிய்த்துக்கொண்டு உக்காந்திருக்க...என்ன என்று கேட்டதில் தான் கன்டின்யுவிட்டி பாக்கும் ஆசாமி என்றுசொல்ல விவரம் புரிந்து உள்ளே சென்றோம்.
.
பத்து பைக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக பாய்ந்துகொண்டிருக்க நமக்கு எந்த சேதாரமும் வந்துடக்கூடாது என்ற சுயநலத்தில் எஸ்கேப் ஆனோம்!
.

**********************************************************************************
அடுத்து ரெண்டாயிரத்தில் ஒருவன்  பட ஸ்பாட்.

வழிநெடுக கும்மிருட்டு.ஆங்காங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் தொங்க ரத்தவாடை....


யார்னா இருக்கீங்களா?


ஊ ஊ ஊ என்று ஊதக்காத்து......

 
யார்லாம் இருக்கீங்க?
கும்மிருட்டில் இரண்டு கண்கள் மட்டும்.....
நெல்லாடிய நிலமெங்கே .....
கவுண்டர்: அதெல்லாம் பிளாட்டு போட்டு வித்தாச்சுங்ணா
சொல்லாடிய அவையெங்கே?
கவுண்டர்: அதெல்லாம் ஷாப்பிங் மால் ஆகிடுச்சு!
வில்லாடிய களமெங்கே?
கவுண்டர்:கேட்டட் கம்யூனிட்டி!ஆ நெக்ஸ்ட்...
கல்லாடிய சிலையெங்கே
கவுண்டர்: இதுக்கு கவுன்டர் அடிச்சா வீண் வம்பு!கப்சிப்!
தாய் தின்ற மண்ணே.. தாய் தின்ற மண்ணே....
கவுண்டர்:(கனுசுவின் தலையை பிடித்து ஆட்டியபடி) ஏன்டா பெத்த தாய்க்கு சோறுபோடாம மண்ணை திங்க வச்சிட்டு பெருமையா பாட்டு வேறையா?
. தா தீம்த.. திகு தக..
தா.. திரனன தா.. ஜிகு தக தா..

.
கவுண்டர்: ஓ!தமிழ்ல பாடுனா கலாய்க்கிறோம்னுட்டு துளு மொழில அளக்குறான்.....அடங்கப்பா முடியலடா!எஸ்கேப்!
.

*********************************************************************************
அடுத்து கூர்யா எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்...எது டிராப் ஆச்சு என்று எதுவுமே புரியாதநிலையில் அவர் வீட்டுக்கே சென்றோம்.வாசலில் பிவக்குமார் " செல்போனை எங்கிட்டே குடுத்துட்டு உள்ள போ ராஜா..ஆ ஆ " என்றுசொல்ல  கீழே விழுந்தால் பிக்ஸல் தெரிச்சிடும் என்ற முன்யோசனை பயத்தில் பவ்யமாக அவரிடம் மொபைலை குடுத்துவிட்டு உள்ளே செல்கிறோம்..நூறு காலர் வச்ச ரவிக்கையும் நூறு காட்டன் புடவையும் பண்டலாக வந்து இறங்க...ஓ!ககுந்தலா தேவி ரீமேக் என்று புரிந்து அதை கடந்து சென்றோம்

தகச்சிக்கு தகச்சின் ....தகச்சிக்கு தகச்சின்....தகச்சிக்கு தகச்சின்....ரட்டட்ட....தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...ரட்டட்டட்

.
என்னாதிது?போதிகாதான் சோலோ படத்துல மட்டும்தான நடிக்கிறாங்க?அப்புறம் எப்படி புஷி பாட்டு?என்று குழம்பியபடி உள்ளே சென்றால் அங்கே பட்டாபட்டியோடு கூர்யா சேறுபூசியபடி நிற்க ரெண்டு பக்கமும் ரெண்டு அல்லக்கைகள் பயர் எஞ்சின் ஹோஸ் வைத்து தண்ணீரை பீய்த்து அடித்துக்கொண்டிருந்தார்கள்...


.
கூர்யா:...ம்...அப்படித்தான்!நல்லா வேகமா அடிங்க!காடிவாசல் படத்துக்காக மெனக்கெட்டு ரெண்டு மாசமா சேத்துளையும் வெயில்லயும் நின்னு ரெடியானா படம் ட்ராப்புன்னுட்டாங்க!அடுத்து சிட்டி சப்ஜக்ட்!பழையபடி ஜூஸ் குடிச்சு தெளியவச்சிட்டுதான் நடிக்க போகணும்!ம்....அப்படித்தான் அப்படியே ரெண்டு இன்ச் வலது இடுப்புல ஃபோர்சா அடி....அப்பாடா...
.
கவுண்டர்: ஏனுங்கணா எதுக்கு அப்படி செய்ய சொல்றீங்க?
.
கூர்யா:காடிவாசல் கேரக்டரோட முகபாவம் எப்பவும் கல்லடைப்பு வந்தவன் மாதிரி இருக்கணும்னு டைரக்டர் சொன்னாரு!அதான் நெஜமாவே....
.
கவுண்டர்: ஆங்!புரியுதுங்!டேய் அல்லக்கை...போய் அண்ணனுக்கு பழம் வாங்கிட்டு வா!ஒண்ணு இங்க இருக்கு!இன்னொன்னு இதான்னு சொன்னான்னா நடக்குறதே வேற!ஓடு!
.
பிவக்குமார்: என்ன இங்க சத்தம்?
.
கவுண்டர்: பம்மியபடி...ஒண்ணுமில்லீங்!என்றபடி வெளியேற நாமும் அவரோடு எஸ்கேப்!
.




********************************************************************************
அடுத்து செக்கந்தராபாத்தில்  ஒரு ஷூட்டிங்  ஸ்பாட்.நுழைவாயிலில்  பெரிய பலகையில்...

ஷூட்டிங் நேற்று நடந்தது.....இன்னக்கி நடக்கல...நாளைக்கி....!!!!!

 

 

என்று எழுதியிருக்க...

.
கவுண்டர்: இஹாஹாஹா என்று நக்கலாக சிரித்தபடி கடந்துசெல்ல நாமும் பின்னால் பம்மினோம்.

**********************************************************************************

அடுத்து காசர் எழுந்தருளும் பாழ்வார்பேட்டை சென்றோம்.....

வழிநெடுக பேனர் கட்டவுட் தோரணங்கள் துண்டுசீட்டு..இத்யாதி...இத்யாதி....

.

அல்லக்கைகளை தாண்டி உள்ளே செல்லவே மூன்று மணி நேரமாகிவிட்டது!உள்ளேயும் பெருங்கூட்டம்.கூட்டத்தின் இடையே லேசாக கிடைத்த இடைவெளியில் எட்டி பார்த்ததில் காசர் டாஸ் போட்டுக்கொண்டிருந்தார்...

...கிண்டியன் 2 ஷூட்டிங் போகணுமா?இல்லாட்டி அக்ரம் ஷூட்டிங்கா?

.


 

டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......

 

நாணயம் காசரின் பேச்சு போல மையமாக நிற்க.....சிறிதுநேர அமைதிக்கு பிறகு...பிரச்சாரம்!ஆரம்பிக்கலாங்களா? என்று கூறியபடி அடிப்பொடிகள் சூழ வெளியேறுகிறார்.

Tuesday, 12 May 2020

மானசரோவர்-அசோகமித்திரன்


      நட்பை மையமாக கொண்டு எத்தனையோ கதைகள் சினிமாவிலும் பிற வகையிலும் வந்துள்ளன.அவற்றில் பெரும்பாலான கதைகள் மிகையுணர்ச்சி நிரம்பித்தளும்புவதாகவே இருக்கும்.அதிலும் தமிழ் சினிமா என்றால் கேட்கவே வேண்டாம்!”குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்ல கூடாது” மாதிரியான அதீத உணர்ச்சிப்பெருக்கில் எழுதப்பட்ட வசனங்களே படம் நெடுக விரவி கிடக்கும்!
                அவ்வகையான மிகையுணர்ச்சி சுழல் எதிலும் சிக்காத ஒரு கதையாக இதை கூறலாம்.வழக்கமாகவே அசோகமித்திரன் கதைகள் என்றாலே விலகல் தொனி என்பதே பிரதானம்.
                   இது சத்யன்குமார் என்ற ஒரு ஹிந்தி ஸ்டாருக்கும்  கோபாலன் என்ற கதை இலாகாவில் பணிபுரியும் ஒரு சாமானியனுக்குமான நட்பை பற்றியது!எந்தவொரு அசோகமித்திரன் கதையிலும் அவரே ஒரு கதாபாத்திரத்தில் தனது தன்மைகளை வெளிப்படுத்துவதுண்டு.அவ்வகையில் இதில் கோபாலின் கேரக்டரில் அவரை காணலாம்.அதற்காக தனது தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இந்த கதாபாத்திரத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை(இந்தக்கதை என்றல்ல.அவரின் மற்ற கதைகளிலும் அப்படித்தான்).
   இந்த இருவரையும் நட்பு என்ற புள்ளியில்  இணைக்கும் இரு புள்ளிகளாக மெஹர் பாபா மற்றும் சித்தர் கதாபாத்திரங்களை கூறலாம்.சத்யன் குமார் கோபாலை நோக்கி நட்பு ரீதியாக ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாக  மெஹர்  பாபா இருக்கிறார்.அவரை போலவே சலனமற்ற அந்த கண்கள் கோபாலுக்கும் இருப்பதாக சத்யன் உணரும் தருணத்தில் அந்த நட்பு உருவாகிறது.
   கோபாலை பொறுத்தளவில் சத்யன் அளவு நட்பில் ஆழ்ந்து திளைக்கும் நபராக இல்லை.உண்மையில் அவன் சத்யனை மதித்து பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் சத்யன் பெரிய ஸ்டார் என்பதால் அல்ல.அதிலும் கொஞ்சம் தன்னலமுண்டு.கோபாலுக்கு அவனது  முதலாளி மூன்றுமாத சம்பள பாக்கி வைத்துள்ளார்(தமிழ் சினிமா என்றாலே கதை இலாக்கா நபர்கள்/ரைட்டர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுவார்கள் என்பதை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை).உண்மையில் தயாரிப்பாளர்  கோபாலை வேலையை விட்டே தூக்க நினைத்த  அந்த சமயத்தில்தான் சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரும் சத்யனுடனான நட்பு துவங்குகிறது.பட தயாரிப்பாளரிடம் “கோபால்ஜி எங்கே?” என்று கேட்டுக்கொண்டே இருப்பதால் முதலாளியும் வேறு வழியின்றி கோபாலை வேலையில் இருந்து நீக்காமல் விட்டுவைக்கிறார்.
    உண்மையில் கோபால் கதை இலாக்காவில் தவிர்க்க முடியாத ஆளுமை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.தமிழ் சினிமாவில் எவருமே அப்படி இல்லை!ஒருவர் இல்லாவிட்டால் வேறு ஒருவரை வைத்து ஒப்பேற்றுவார்கள்.எதுவுமே இல்லாவிட்டாலும் வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குனரின் கதைகளை களவாண்டு ஒருமாதிரி படத்தை எடுத்துவிடுவார்கள்!
    ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பலர் சென்னையில் தயாரிக்கப்படும் ஹிந்தி படத்தில் பணத்திற்காக நடிக்க ஆசைப்பட்டு பிறகு ஹிந்தியில் மார்க்கெட் போன பல உதாரணங்கள் சொல்லப்படுகின்றன.சத்யன் எந்த துணிச்சலில் அது தெரிந்தும் இங்கே படத்தில் நடிக்க வருகிறான் என்பதை ஓரளவிற்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.
    சத்யன் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவன்.குடும்பத்தை விட்டு தனியே மும்பைக்கு வந்து போராடி ஸ்டார் ஆனவன்.பெரும் பேரும் புகழும் இருந்தாலும் வேர்களை தொலைத்து, உறவுகளைத்தொலைத்து அல்லாடும் கதாபாத்திரம்.தனது பேர் புகழ் போய்விட கூடாது என்று மெனக்கெடும் ஆளல்ல.பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறான்.அவர்கள் இவனைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதுகின்றனர்.ஒருவகையில் அவன் சென்னையில் தயாரிக்கப்படும் படத்தில் நடிக்க வந்ததே மும்பையில் அந்த வெறுப்பு சூழலில் இருந்து தப்பிக்கத்தான் என்று புரிகிறது.

         ஆனால் கோபால் இதற்கு நேர்எதிர்! குடும்பம், உறவினர் என்று இருந்தாலும் அவற்றில் இருந்து தள்ளியே இருக்கிறான்!ஒரு ரயில் பயணத்தில்  தன் மனைவி மற்றும் மகனை ரயிலில் வேண்டிய தின்பண்டம் வாங்கிகொடுத்து சந்தோஷமாக என்றைக்குமே  அழைத்து சென்றதில்லை என்பதை உணர்கிறான்.
             வேர்களை தேடிக்கொண்டிருக்கும் சத்யனுக்கு நேர்மாறாய் தன் ஊர் ஆசாமிகள் பார்வையில் படாமல் இருக்கவே விரும்புகிறான் கோபால்!அப்படியே யாரேனும் இவனை அடையாளம் கண்டுகொண்டாலும் அவர் என்ன பேசினாலும் அதை உள்வாங்காது ஒப்புக்கு பதில் சொல்லிவிட்டு நழுவுகிறான்.
“அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் பேசுகிறார்கள் அவர்களுக்கு கோபம் இவர்களுக்கு வருத்தம் என்ற கட்டுகள் இல்லாமல் ஒருவன் தன் பிறந்த ஊரில் வசிக்க முடியுமா?இதுதான் காரணமோ விடுதலையை தேடி போனவர்கள் அனைவரும் தம் ஊர் தம் சுற்றுப்புறத்திலிருந்து வெகுதூரம் சென்று அனாமதேயர்களாக இருக்க முயன்றது?”

    கதையில் நிஜ வாழ்வின் கதாபாத்திரங்களும் வருகின்றன.சத்யன் குமாரின் அசல் பெயர் யூசுப்.நடிகர் திலீப் குமாரின் அசல் பெயரும் அதுவே!தேவதாஸ் மாதிரியான ஒரு படத்தில் சத்யன் நடித்தது குறித்தும் கதையில் வருகிறது!அதுபோல நௌஷாத்தும் வருகிறார்.சத்யன் தனது மனைவியோடு வந்து அழைத்தால்தான் அவனது இல்லத்திற்கு வருவேன் என்கிறார்.



நேருவின் மரணம் கதையின் ஒருபகுதியில் வருகிறது.நேருவின் மரண செய்தி நாடு முழுக்க தெரிந்த நிலையில் சென்னை சாலையில் செல்லும் ஒரு சவ ஊர்வலத்தில் சென்றுகொண்டிருக்கும் ராமச்சந்திரனை துரத்தி பிடித்து சத்யன் “கோபால் எங்கே?” என்று வினவுகிறார்.”நானே ஹோட்டலுக்கு வந்து சொல்கிறேன்” என்கிறான் ராமச்சந்திரன்.காரில் ஏறி சவ ஊர்வலத்தின் ஊடே புகுந்து முன்செல்வது குறித்து வெட்கப்படுகிறான் சத்யன்.
திலீப் குமார்
    கதைக்கு முக்கியத்துவமற்ற சிறு சிறு சம்பவங்கள் கதையில் விளக்கமாக சொல்லப்படுகிறது.அதன்மூலம் வாழ்வின் அபத்தத்தை உணர்த்துகிறார் அசோகமித்திரன்.உதாரணமாக காரில் கோபாலை தேடிக்கொண்டிருக்கும் சத்யன் சட்டென்று டிரைவரிடம் ஒரு பார்க்கில் நிறுத்துமாறு சொல்கிறான்.ஆள் அரவமற்ற பார்க்.தரையெங்கும் காய்ந்த சருகுகள்.அங்கெ ஒரு மேடையில் அமர்ந்து புகைக்கும் சத்யன் சிகரெட்டை அணைக்காமல் சருகுக்குவியலில் போட்டுவிடுகிறான்.பிறகு திடீரென்று இதனால் பெரும் காட்டுத்தீ போல பரவிவிடுமோ என்ற கவலையில் அந்த சிகரெட் துண்டை தேடுகிறான்.டிரைவர் வந்து கேட்கும்போது வெள்ளி மோதிரம் விழுந்துவிட்டதாக பொய்சொல்கிறான்.டிரைவரும் தீவிரமாக தேடி வேறு ஏதோ ஒரு மோதிரத்தை காட்டி "இதுவா சார்?" என்று கேட்க ஆமாம் என்றபடி யார் மோதிரத்தையோ அணிந்துகொண்டு காரில் ஏறி செல்கிறான்.
  
சத்யன் படப்பிடிப்பு இடைவெளியில் சினிமாவில் வரும் அபத்தக்காட்சிகள் பற்றி நினைப்பதாக பல இடங்கள் வருகிறது.உதாரணமாக...

      “இன்றும் நான் கதாநாயகியை சந்திக்கும் காட்சிதான்.அந்தக்காட்சியில் என் வயது ஐம்பத்தாறுதான் இருக்க வேண்டும்.ஆனால் சினிமாக்காரர்களுக்கு கதாநாயகனை கிழவனாக காட்ட வேண்டும் என்றால் அவனைப் படுகிழவனாகத்தான் காட்டுவார்கள்.தலையும் மீசையும் தாடியும் காட்டேரி போல இருக்க வேண்டும்.அது எப்படி சினிமா கதாநாயகர்களுக்கு என்ன வயதானாலும் தலை வழுக்கை விழுவதில்லை?”

“எனக்கு முகமெல்லாம் மயிர்.கண்ணுக்கு கீழ்  சுருக்கங்களுக்கு  பதில் கருப்பு கோடுகள்.நெற்றியிலும் அவ்வாரே.கிழிந்து போல கொட்டு பாண்ட்.எல்லாப்பணமும் போய் பிச்சைக்காரனாக வாழும் கதாநாயகனுக்கு இப்படிக்கோட்டும் பாண்ட்டும் எங்கு கிடைத்தது?”

பத்தடி உயரத்தில் நின்று ஒளிப்பதிவு செய்பவன் தன் கண் பார்வையில் இருக்கும்போது மேலே இருந்து  விழுந்து விட  கூடாது என்று பயந்து முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறான்.ஏற்கெனவே அதுபோன்ற ஒரு சமயத்தில் ஒருவர் மேலிருந்து  விழுந்து முறிந்த எலும்புகளோடு அதிர்ஷ்டவசமாக பிழைத்த சம்பவத்தையும் குறிப்பிடுகிறான்.

இன்று இரவு இந்த குட்டிச்சுவர் காட்சிகளை முடித்துவிட வேண்டும்.இது படம் பார்க்க வருபவர்களை தொண்டையடைய செய்யும் கட்டம்.படம் முடியும் பொது எல்லாரும் அழுதுகொண்டு வீட்டுக்கு கிளம்பு வேண்டும்.என்னுடைய இந்த சீன்கள் பிரபலமானவை.படத்தின் ஆரம்பத்தில் மூச்சு விடுவதெல்லாம் காதல்.இடைவெளியின்போது காதல் பறிபோதல் அல்லாது நான் தியாகம் செய்துவிடுவேன்.படத்தில் முடிவில் நான் என் காதலிக்கு நேரும் மிகப்பெரிய இக்கட்டை தீர்ப்பேன்.சில படங்களில் உயிரையும் விட்டுவிடுவேன்.நான் உயிர் விடும்போது திணறித்திணறி  பொன்மொழிகளாக உதிர்ப்பேன்.அதை கதாநாயகியும் அவளுடைய கணவனும் அவர்களுடைய பிள்ளை பெண் மாப்பிள்ளை பேரக்குழந்தைகள் கிராமத்தை சேர்ந்த  எல்லாருமாக கேட்டுக்கொண்டு கண்ணீர்விடுவார்கள்.அவர்களுடைய கண்ணீர் வெள்ளத்தில் கொப்புளித்து கொண்டு என் உயிர் சொர்க்கத்துக்கு செல்லும்.







சினிமாவுக்கு எழுதும் வேலையை விட்டால் வேறு வேலை கோபாலுக்கு கிடைப்பது சிரமம் என்பதை உணர்கிறான்.சினிமாவுக்கு எழுதி எழுதி பழகிவிட்டதால் பத்திரிக்கைகளிடம் முன்பணம் வாங்கியும் ஒருவரி எழுத முடியவில்லை.தமிழில் நூறு பக்கங்களை ஒரே மூச்சில் படிக்க முடிவதும் ஆங்கிலத்தில் பத்திருபது பக்கங்கள் படித்தாலும் எதுவும் மனதில் தங்காமல் போவதை உணர்கிறான்.


   தான் எழுதத்தொடங்கிய நாட்களை நினைத்துப்பார்க்கும் கோபால் அந்த கடுமையான நெருக்கடி மனநிலையிலும் கிண்டலாக தமிழ் சினிமா வசனங்களை கிண்டல் செய்கிறான்:
   
 “தஞ்சாவூர் ஜில்லாவில் அனேகமாக மின்சாரமே கிடையாது எனலாம்.ஆனால் நாங்கள் எங்கள் கதைகளில் மின்சாரத்தை தாராளமாகவே பயன்படுத்துவோம்.”அவளுடைய தாவணி நுனி ஒரு வினாடி அவன் மேல் பட்டது;அவனுக்கு உடலெல்லாம் ஷாக் அடித்தது””அவன் விரல்நுனி அவளுடைய கையை தீண்டியபோது அவனுக்கு தலையிலிருந்து கால்வரை மின்சாரம் பாய்வது போல இருந்தது” 

நவீன வாழ்வின் எல்லைகளை வைத்துக்கொண்டு விளக்க முடியாத சம்பவங்கள் கதையில் உண்டு.
     சித்தர் ஒரு வினோத பிறவி.கோபால் கடும் மன நெருக்கடியில் நள்ளிரவில் தெருவில் சுற்றிக்கொண்டிருக்க திடீரென்று ஒரு சந்திலிருந்து வெளிப்படும் சித்தர் “புகையிலை இருக்கா?” என்று கேட்கிறார்.இவர் "இல்லை" என்று சொல்ல ஒரு கடையை சொல்லி அங்கு வாங்கிவர சொல்கிறார்.இந்நேரத்தில் எவன் கடையை திறந்து வைத்திருப்பான்? என்ற சந்தேகத்தில் செல்லும் கோபால் அங்கு சித்தர் சொன்ன கடை திறந்திருப்பதை கண்டு துணுக்குறுகிறான்.அங்கு அவர் புகையிலை வாங்கியதுமே கடையை அடைத்துவிட்டு கடைக்காரன் சென்றுவிடுகிறான்.இப்படியாக பல வினோத சம்பவங்கள்.
                கல்லீரலில் ரத்தக்கசிவு இருந்தாலும்(தேசிய ஊடகங்கள் சத்யனுக்கு குஷ்டரோகம் என்கிறது) கோபாலை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பையில் இருந்து காரில் சென்னை வருகிறான் சத்யன்.நடுவில் கார் ப்ரேக் டவுன் ஆகி நின்றுவிட அங்கு சுகந்த மணம் வீச சித்தர் அங்கு காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவுகிறார்.
பிறகு வேறொரு இடத்தில் சத்யன் மயக்கமடைந்து கண் திறந்து பார்க்கும்போது ஒரு அறையில் படுத்திருக்க அங்கு சுகந்த மணம் வீசுகிறது.சித்தர் திரும்பவும் அவனை பார்க்கிறார்.கதையின் இறுதியில் அவன் சித்தரை சந்திக்கும் போது "உனக்கு நீண்ட ஆயுள் உண்டு.மும்பைக்கு போ" என்கிறார்.

விஞ்ஞானத்தின் போதாத தன்மை குறித்து சத்யன் சிந்திப்பதாக  கதையில் வருகிறது. 
         “விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது.என்னுடைய வாழ்நாளிலேயே எத்தனை மாறுதல்களை கண்டுவிட்டேன்!.....பத்தாண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததெல்லாம் இப்போது சாத்தியமாகிறது.இதோ இந்த பால் பாயின்ட் பேனா!ஒரு பந்தை உருளவைத்து எழுத முடியும் என்று என் அப்பா நினைத்துப்பாத்திருக்க முடியுமா?ஆனால் மனிதன் தலையில் எதை வைத்து எழுதியிருக்கிறது?என் தலையில் என்ன எழுதியிருக்கிறது?”
கோபாலின் மகளை பதினேழு வயதிலேயே ஜம்பகத்தின் நிர்பந்தத்தின் பேரில் திருமணம் செய்துகொடுக்கிறான் கோபால்.ஆனால் அவளது வாழ்க்கை அப்படியொன்றும் சுகமில்லை.ஒருநாள் தன் வீட்டிற்கு வரும் மகளைக்கண்டு
“பேய் பிசாசுகளை விட பீதி விளைவிக்கும்படி மனிதர்களால் நடந்துகொள்ள முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன்” என்கிறான் கோபால்.
       

   
               கோபாலின் மனைவி ஜம்பகம் முதலில் சிறிதளவு மனப்பிறழ்வு கொண்டவாளாக காட்டப்பட்டு பிறகு ஒரு நிலையில் மகனையே தலையணை அமுக்கி கொல்லும் நிலைக்கு செல்கிறாள்.அந்தப்பகுதி நேரடியாக விளக்கப்படாமல் அசோகமித்திரனுக்கே உரிய மொழிநடையில் சொல்லப்படுகிறது.அதாவது “மனைவி மகனை கொன்றுவிட்டு நிர்வாணமாக நின்றபடி கத்தினால்.அதை தெரு மக்கள்  வேடிக்கை பார்த்தனர்” என்று எழுதாமல்- எழுதப்படாமல் விட்ட பகுதிகளை வைத்து வாசகன அதை உணரும் வண்ணம் சொல்லியுள்ளார். சத்யன் ஏன் கோபாலை அத்தனை பிரச்சனைகள், உடல் உபாதைகளை தாண்டி சந்திக்க விரும்பினான் என்பதுகூட மேற்சொன்ன சொல்லாமல் விளங்கவைத்தல் பாணியில் கதையின் முடிவில்  சொல்லப்படுகிறது. 
                   சத்யன் குமார் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையிலும் கோபாலை சந்திக்க காரணம் அவன் மனைவி இவன் கையை பிடித்து இழுத்தது."பாபி வேண்டாம்!!!" என்று கெஞ்சியதாக கதறுகிறான் சத்யன்.ஆனால் கோபால் அந்த லௌகீக எல்லைகளை தாண்டி  வேறொரு நிலைக்கு சென்று விட்டான்.
“இந்தப்பக்கம் பத்து மைல் போனால் என் பெண்ணின் கணவரின் கிராமம்.எதிர்ப்பக்கம் இருபது மைல் போனால் என் மாமியார் மாமனார் இருக்கும் ஊர்.ஆனால் நானும் போகவில்லை .அவர்களும் வரவில்லை” என்கிறான் கோபால்.

“இந்த சாயபுவை இங்கே குளிச்சிட்டு போகச்சொல்லு.இதுதான் அவனுக்கு கிடைக்கக்கூடிய மானசரோவர்னு சொல்லு” என்றபடி சித்தர் சென்றுவிடுகிறார்.
அது என்ன மானசரோவர் என்று சத்யன் கேட்க "வடக்கே பனி சூழ்ந்த  ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி.அங்கே குளித்து வந்தால் மனம் சுத்தமாகிவிடும்.மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும்.யோகமெல்லாம் நமக்கெதற்கு?மனம் கொஞ்சமாவது சுத்தமானால் போதாதா?” என்கிறான் கோபால்.
    நவீன வாழ்க்கை -இருபத்தியோராம் நூற்றாண்டு என்கிறோம்!அதிநவீன தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த நவீன வாழ்வு உருவாக்கித்தரும் சிக்கல்களை அதே நவீன அணுகுமுறை கொண்டு தீர்க்க முடியாமல் போவதை பல தருணங்களில் காண்கிறோம்!("ஏண்டா பாபு,காலத்திலே அந்தக்காலம் இந்தக்காலம்னு ரண்டு உண்டா?காலம் ஒரே காலம்தான்" -வைத்தி,மோகமுள்) கோபால்  அத்தகைய நவீன வாழ்விற்கு வெளியே அத்தகைய ஒரு தீர்வை கண்டடைகிறான்.சத்யன் நவீன வாழ்வினுள்ளேயே சிக்கி தவிக்கிறான்.


Sunday, 1 March 2020

கோலிவுட் ரவுண்டப் 3.0


முதலில் நாம் சென்றது நெற்றிமாறன் இயக்கி கூர்யா நடிக்கும் வாடியவாசல் பட ஸ்பாட்டுக்கு.
.
நெற்றி: சேறும் சகதியுமாய் ஒரு குட்டையில் இருந்து எழுந்து வரீங்க!அப்படியே டைட் க்ளோசப்பில் கேமராவை பார்த்து “படிய்யா!படிடா டேய்!படிச்சு தொலைடா எருமை!” ன்னு ஆவசேமா அனல் தெறிக்க பேசுறீங்க!
.
கூர்யா: க்கும்!படம் பாக்க தியேட்டருக்கு வரவனே ஸ்கூல் காலேஜ் பசங்கதான்!நாம படிடா!கடிடா!ன்னு கடிச்சிட்டு இருந்தா எந்திரிச்சு ஓடிடுவான்!

நெற்றி: ஓடட்டும்லா!படம் ஓடாட்டி எனக்கென்ன?எசகுபிசகா எதையாவது ஒரு படம் எடுத்துட்டு கடைசில இப்படி ஒரு அட்வைஸ் பண்ணாத்தான் ஒலக விமர்சகன் படத்தை ஒலகசினிமாம்பான்!எனக்கும் மாசிய விருது கிடைக்கும்!

கூர்யா: அப்போ எனக்கு?

.
நெற்றி: இந்தாங்க சங்கு!டைட் க்ளோசப்பில் அட்வைஸ் பண்ணிட்டு அப்படியே இந்த சங்கை ஊதிய மேனிக்கு அப்படியே மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் ஒரு புள்ளியா மறைஞ்சு போகுற வரைக்கும் காட்டி எண்டு கார்ட் போடுறோம்!
.
கூர்யா (மைன்ட் வாய்ஸ்): க்கும்!ஏற்கெனவே என்னோட மார்க்கெட் அந்த நிலைமைலதான் இருக்கு!இதை இவன் நேரடியாவே சீனா எடுக்க போறானாம்!யப்பா மிடில!
************************************************************************************************************************.
அடுத்து கங்கட் கிரபு இயக்கி மம்பு நடிக்கும் மான்ஆடு பட ஸ்பாட்!
மாலை 6 மணி.
கங்கட் கிரபு: யப்பா ஒருவழியா தெளிஞ்சி கிளிஞ்சி நாமதான் கடைசியா ஸ்பாட்டுக்கு வந்தோம்னு நினைச்சா மம்பு நமக்கு மேல இருக்கான்!சரி அட்ஜஸ்ட் பண்ணுவோம்! டேய் மேக்கப்பு! அந்த தொப்பையும் தொந்தியுமா இருக்குற எக்ஸ்ட்ராவை புடிச்சு பெருசா தாடி ஒட்டி குல்லா மாட்டி கூட்டியா!லாங் ஷாட்ல எடுத்து மம்புன்னு ஒப்பேத்துவோம்!
.
எக்ஸ்ட்ரா வந்ததும்
கங்கட் கிரபு: ம்ம்...ஓகே!அப்படியே மேரா நாம் அப்துல் ரகுமான்!மேரா நாம் அப்துல் ரகுமான்னு பாடிகிட்டே விரலை நல்லா வளைச்சு நெளிச்சு அபிநயம் பண்ணு!
எக்ஸ்ட்ரா: மேரா நாம் அப்துல் ரகுமான்!! மேரா நாம் ஏ.ஆர்.ரகுமான்!! மேரா நாம் ஏ.ஆர்.முருகதாஸ் !!!!!
அசிஸ்டன்ட்:சார் லிப் சிங்க் ஆகல!
.
கங்கட் கிரபு:ஆகாட்டி போகட்டும்!எடுத்தவரைக்கும் எடிட்டிங் கொண்டுவா!அங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்!என்று சொல்லிவிட்டு மம்புவுக்கு போன் செய்கிறார்.யாரு மம்புவா?
.
மம்பு: ஏய்ய்ய் மம்பு இல்ல!எம்டிஆர் னு சொல்லு!
.
கங்கட் கிரபு:ஓ எம்டிஆரா?எரடு மசாலா  தோசா த்வரிதா  தரலு!
மம்பு: என்னையே கலாய்க்கிறானுங்களா!இரு வச்சிக்கிறேன்....ஹலோ கங்கட்ஜியா?நா இப்ப வெயிட் ரிடக்ஷன் ப்ரோக்ராமுக்கு மலேசியா வந்திருக்கேன்!இங்க பாத்ரூம்ல க்ரீன் மேட் தொங்கவிட்டு அப்படியே நா செல்பி கேமராவுல வசனத்த பேசிடுறேன்!நீங்க  அந்த பக்கம் பேஸ்டைம்ல அதை அப்படியே ரெகார்ட் பண்ணி யூஸ் பண்ணிக்குங்க.
.
கங்கட்: இங்க எக்ஸ்ட்ரா வாயசைச்சத லிப் சிங்க் பண்ணனும்!அதுக்கு மம்பு பாத்ரூம்ல டப்பிங் பேசி அனுப்புன ஆடியோவை அதுல ஒட்ட வக்கணும்!அது பத்தாதுன்னு க்ளோசப் ஷாட் எல்லாம் பேஸ் டைம் ரெகார்டிங் வச்சி முடிக்கணும்!ஸ்ஸ்ஸ்ஸ்....சப்பா!இன்னக்கி பேக்கப்!வழக்கம் போல மில்லி ஊத்துனாத்தான் சரியா வரும்!

கிரேம்ஜி:ஆடியன்சை எவ்வளவோ டார்ச்சர்  பண்ணிட்டோம்!இதை பண்ண மாட்டமா?


.
தயாரிப்பாளர்: (தலையில் துண்டோடு) அடேய் அவன் என்னடான்னா ஸ்பாட்டுக்கே வர மாட்றான்!இவன் என்னடான்னா ஆறு மணிக்கு வந்துட்டு ஏழு  மணிக்கு ஜூட் விட்டுட்டான்!அப்போ சாமிப்படம் முன்னாடி சத்தியம் காண்டிராக்ட் பேப்பர்ல கையெழுத்து எல்லாம் சும்மாவாச்சுகுமா!
.
*********************************************************************************
 அடுத்து பஞ்சித் இயக்கி கார்யா நடிக்கும் படத்தின் ஸ்பாட்....
.
பஞ்சித்: நீங்க இப்ப இன்னா பண்றீங்கன்னா.....
கார்யா:அன்னா மச்சி?இப்ப நா நார்த் மட்ராஸ் ஏரியாவுல வாழுற கேரக்டர்.பாக்ஸர்.லேண்ட் இஸ் அவர்ஸ்...க்ளைமேக்ஸ்ல ஒரு டுப்பாக்கி குண்டு!கரக்ட்?
.
கஞ்சித்: அதானுங்க!இன்னா நா சொல்றதுக்கு மின்னாடியே கரீட்டா சொல்றீங்கோ!அசிஸ்டன்ட் யார்னா கத சொன்னாங்களா?
.
கார்யா: இல்ல மச்சி!உன்கிட்ட இருக்குற ஒரே கத அதான?
.
கஞ்சித்: இன்னாதிது!நம்ம தொழில் ரகசியத்த அக்கூரேட்டா புரிஞ்சி வச்சிகிறாரு?இவராண்ட இனிமே உசாரா இருக்கோணும்! 
.
*******************************************************************************************************************

அடுத்து பெயரிடப்படாத ஒரு படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றோம்!
 .
இருளோ என்று இருக்க அறையின் மூலையில் ஒரு  கேமரா ஓடிக்கொண்டிருக்க லைட்பாய், கேமராமேன், டைரக்டர், நடிகர் என்று எவரையும் காணாததால் சற்று பீதியடைந்து அங்கிருந்து ஜூட் விட எத்தனித்த நிலையில் கூரையில் இருந்து ஒரு குரல்!

ஆஸ்கர்!ஆஸ்கர்!ஆஸ்கர்!

ஓ!விவரம் புரிந்தவாறு நாம் அண்ணாந்து பார்க்க அங்கு கம்பிகள் உதவியோடு மூர்த்திபன் தொங்கியபடி இன்னொரு கேமராவை கீழ்நோக்கி போகஸ் செய்தவாறு கையசைக்கிறார்!
மூர்த்திபன் :இந்த முறை என்ன வித்தியாசம்னா....
உதயா: நீங்க சொல்லாமலே தெரியுது!எந்த நடிகர் நடிகையுமே இல்லாம ஒரு படம்!
மூர்த்திபன் :அதே!ஆஸ்கர் நிச்சயம்!தங்க கரடி லட்சியம்! என்றவாறு போகசை அட்ஜஸ்ட் பண்ண நாம் வெளியேறுகிறோம்!

*************************************************************************************************************************கடைசியாக போகேஷ் ஜனகராஜ் இயக்கி அண்ணா நடிக்கும் பாஸ்டர் பட ஸ்பாட்!
அண்ணா
இன்னா நீ சொல்லு
 நா வந்தா தில்லு
காலுல முள்ளு
போவாத நீ தள்ளு
என்று முனகியபடி இருக்க...
போகேஷ்: அப்படியே உங்க மகன்..
அண்ணா: மகன் வேண்டாம்!மள்னு வய்யி!அப்பத்தான் செண்டிமெண்ட் பலமா ஒர்க்கவுட் ஆகும்!
போகேஷ்: சரிங்ணா!உங்க மகளை நீங்க பாத்து பத்து வருஷம் ஆகுது!இந்த பத்து வருஷம் நீங்க கஞ்சா கடத்தியதால் உள்ள போயிட்டீங்க!
அண்ணா: அட என்னைய்யா!சும்மா ஜெயிலு விலங்கு நொய்யின்னிட்டு!!வேணாம்!காலேஜ் அட்மாஸ்பியர் போ!
போகேஷ்:ஆங்!சரிங்!நீங்க காலேஜ் ப்ரொபசர்!ஆனா டை கட்டி ஷூ போட்ட ப்ரொபசர் இல்ல!அழுக்கா கருப்பா கலீஜா வந்து...... அப்படி டெரரா நிக்குற ப்ரொபசர்!
அண்ணா:ஆங்!இது ஓகே!அப்படியே மேல போ!

போகேஷ்: நீங்க தினம் புல்லா ஏத்திகிட்டு கிளாஸ்ல குட்டி கத சொல்றது வழக்கம்!அதுக்கு பயந்துகிட்டே எவனும் க்ளாஸுக்கு வர மாட்றான்!
அண்ணா: ஆங்!இங்க ஒரு சாங்!அது எல்லாருக்கும் தெரியும்!மேல போ!
போகேஷ்: இதனால காலேஜ் நிர்வாகம் உங்கள சஸ்பென்ட் பண்ணுது!இது தெரிஞ்சி காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கொதிச்சி எழுறாங்க!
அண்ணா: அதான் நா கிளாசே எடுக்காம அறுக்குறேன்!அப்புறம் எதுக்கு இவனுங்க கூவுறாங்க?
போகேஷ்: நீங்க கிளாசே எடுக்காம அறுக்குரதால தான் அவங்க அந்த நேரத்துல ஜாலியா கேண்டீன்ல அரட்டை இன்னும் ரெண்டு அவர் கட் பண்ணிட்டு சினிமானு  இருக்காங்க!வேற வாத்தியார் வந்து கிளாசை ஒழுங்கா எடுத்தா இதெல்லாம் முடியுமா?
அண்ணா: ஆங்!பாயின்ட்!இப்ப ஒரு பெரிய உள்ளிருப்பு போராட்டம்!எனக்காக மாணவர் தலைமையில்!இல்லையா?
போகேஷ்:ஆமாங்ணா!
அண்ணா: அப்படியே பாகிஸ்தான்ல இருக்குற நாப்பதாயிரம் தீவிரவாத முகாமில் இருக்கும் எல்லா அப்பாவிக்கும் இங்க க்ரீன் கார்டு கொடுக்கணும்னு குரல் கொடுக்குறேன்!கொடுத்த மேனிக்கு...
இருவிரல் கிருஷ்ணாராவ்!
ஆகிடுச்சே நாடு (இ)ராவ்!
உட்டுகினேன் நா ராவ்!
ப்ரோபசரில் நான் வாவ்!
இப்படி ஒரு பாட்டு அப்படியே மழை எபெக்ட்ல!ஈரோயினிக்கு வேற எந்த சீனும் இல்ல!அதனால இந்த பாட்டுல கூட ஆடுறாப்ல!
போகேஷ்: சரிங்ணா!
அண்ணா: அப்படியே அடுத்த சீன்ல டெல்லிக்கு போறோம்!அங்க நான்!எதிர்ல க்ரம்ப்!
போகேஷ்: அவரு எப்படி?
அண்ணா: அது அப்படித்தான்!ரெண்டே நிமிஷம் பேசுறேன்!க்ரீன் கார்ட் இல்ல ரேஷன் கார்ட் கூட கிடையாது  என்கிறார் க்ரம்ப்!!எல்லாரும் என்னை அமெரிக்க அதிபர் தேர்தல்ல க்ரம்ப்க்கு எதிரா  போட்டியிட சொல்றாங்க!நா மறுத்து “க்ரீன் கார்ட் கண்டிப்பா கொடுப்பேன்!தீவிரவாதிகளுக்கு மூணு வேலை பிரியாணி போட்டு கைகால் அமுக்குவேன்” என்று உறுதியளிக்கும் பர்னி பாண்டரஸ்க்கு வாய்ஸ் கொடுக்குறேன்!அவர் ஜெயிக்கிறார்!அமெரிக்காவே என்னை தலைல வச்சிக்கிட்டு கொண்டாட திரும்ப நான் கிளாஸ்ல குட்டி கத சொல்ல ஆரம்பிக்க..... அப்படியே ஃப்ரீஸ் பண்ணி முடிக்கிறோம்!