Sunday, 7 June 2026

Deva,Nelson & prejudice!

 ரெட் படத்தில் ஒரு காட்சி. மாயக்காவுக்கு செல்லூர் சீனி....சாரி...சாரி...(யோவ் கதாபாத்திரங்களின் அசல் பேரை சொல்லி சிக்கிக்காத - கும்மாங்கோ).... ரெட் மீது தீராத ஆசை.சார்லியிடம் மாயக்கா பேசிக்கொண்டிருக்கையில் கனவு....டூயட்....ஸ்டாப்...

 

   இந்த காலகட்டத்தில் இங்க ஒரு டூயட் பாட்டென்றால் எப்படி இருக்கும்?அப்படியே லோக்கல் மண்ணை குழைத்து கேட்பவன் காதில் ஊற்றுகிறேன் பேர்வழி என்று டப்பாங்குத்த கிழித்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள்!

    ஆனால் தேவா அப்படியே அதற்கு எதிர் திசையில் சிந்தித்தார்! ஏன் இவர்கள் "உலகில் உள்ள உயர்ந்ததெல்லாம் புசிக்கும் ரசிகர்களாக" இருக்கக்கூடாது? ஏன் இவர்கள் மேற்கத்திய அதிரடி beats கொண்ட பாடலுக்கு ஆடக்கூடாது?

 
    ஆத்மன் பாடியதிலேயே நமக்கு மிகவும் பிடித்த பாடலென்றால் இதுதான்.இத்தனைக்கும் அவர் ஹீரோவாக அந்தாண்டு இறுதியில் அறிமுகம் ஆகும்முன்பே அஜீத்துக்கு பாடியதெல்லாம் பெரிய சாதனை.( சரி ஆத்மன் பாசறை வேலை போதும்.வந்த விஷயத்தை சொல்லு - கும்மாங்கோ)

 
    இப்ப கட் பண்ணா ஜெயிலர் படம்.விநாயகன் சிலைகடத்தல் பேர்வழி.அடியாட்களை வைத்துக்கொண்டு ராஜ்ஜியம் செய்கிறான்.அவனுக்கு ரிலாக்ஸ் செய்ய அவ்வப்போது பாட்டு போட்டு தனது அல்லக்கைகளை ஆட விடுகிறான்.

டிக் டாக் ரமேஷ் - மறைந்துபோன ஒரு அற்புத கலைஞன் 


 

    நிற்க! வழக்கமான  முற்போக்கு இயக்குநர் யாராவது இக்காட்சியை எடுத்திருந்தால் "ஏ... ஆயி..." என்று கிழவியின் ஒப்பாரியில் ஒரு டப்பாங்குத்து இசையை சேர்த்திருப்பார்கள்.
    நெல்சனிடம் பிடித்த விஷயமே இதுதான்.சட்டென்று பார்வையாளன் யூகிக்க முடியாத ஒரு எதிர்வினையை/இசையை/வசனத்தை வைத்துவிடுவார்.

    
இப்படத்திலும் அப்படித்தான்.Taal Se Taal Mila என்று சுக்விந்தர் சிங் (பாடலை உருவாக்கியதே அவர்தான் என்றொரு சர்ச்சையும் ஓடிட்டு இருக்கு) பாட அல்லக்கைகள் ஆட...உண்மையிலேயே அக்கட்சி புதுமையாக இருந்தது.

   அதிலும் பாடல்கள் ஒலிப்பது அட்டகாசமான Bose Sound link Revolve II மாடல் ஸ்பீக்கரில்....


   பிறகு வேறொரு தருணத்தில் ஒங்க இவருக்கு செக் வைத்துவிட்டு மற்றொரு பாடல்..

கண்ணோடு காண்பதெல்லாம்....



    "பொதுமைப்படுத்துதல் என்பதே கூடாது"."இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுக்கு வருவது தவறு" என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் அதே போராளி இயக்குநர்கள் வைக்கும் காட்சிகள் கதாபாத்திர சித்தரிப்புகள் எல்லாமே அதே முன்முடிவு/ பொதுமைப்படுத்துதல் வகையறாவில் வருவதாகத்தான் இருக்கு.நாம் ஏற்கெனவே வேட்டையன் பற்றிய பதிவில் "அபிராமி கெட்ட கதாபாத்திரம் என்பதால் அவர் vaping செய்கிறார் என்று காட்டுதல் பொதுமைப்படுத்துதல் வகையறாவில் வராதா?" என்று கேட்டிருந்தோம். இயக்குநர்,வேட்டையன் படத்தை ஞானவேல் எடுத்ததே பொதுமைப்படுத்துதல் &முன்முடிவுகள் கூடாது என்று உணர்த்தவே எனும்போது இந்த ஒற்றை முரணில் அவரது மொத்த நோக்கமும் அடிபட்டு போனது!

 
     ஏன் அடித்தட்டு மக்கள் இசை ரசனை என்பது சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி தான் இருக்க வேண்டுமா?ஏன் அது மேற்கத்திய இசை சார்ந்து இருக்க கூடாதா? "அவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை" எனும் முன்முடிவால் தானே நீங்கள் அப்படி கட்சிகள் வைப்பதில்லை? அது தவறில்லையா?எதுக்கிந்த இரட்டை வேடம்?
 

   எப்படி இருந்தாலும் புரட்சி முற்போக்கு என்று ஊரை ஏமாற்றாத தேவா மற்றும் நெல்சன் ஆகியோர் தான் இந்த பொதுமைப்படுத்துதல் மற்றும் முன்முடிவுகளை தாண்டி சிந்தித்துள்ளனர்!அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்!

 

No comments:

Post a Comment