Sunday, 9 January 2022
கோலிவுட் ரவுண்டப்-6.0
Saturday, 27 February 2021
கொலைவெறி குறுங்கதைகள்-சுராத்து
எவ்வளவு?
எதுக்கு?
***ரெண்டு விரல்***சிக்னல் காட்ட...
பத்து ரூவா....பாக்கெட்டில் இருப்பதோ ஐநூறு ரூபாய் மட்டும்...அதை தயக்கத்தோடு நீட்ட..
சில்ற இல்ல என்றது முரட்டுக்குரல்...
என்கிட்டயும் இல்ல.ஆனா அவசரமா வருதே...
பரவால்ல!மிச்சம் நானூத்தி தொண்ணூறுக்கும் போய்க்கோ....***மண்டைக்குள் இடிச்சத்தம்****** .......டக்...டக்....டக்....மிழ்நாடே......டக்...டக்...வதை ....டக்....டக்...முகாம்....போல....டக்க்க்....உள்ளது... கேரளாவில்....சுண்டு..விரல்....தட்டினால்...சொர்க்கம்....க்ரக்க்....கக்கக்......கக்க....டக்....நிசப்தம்.... ...ஏய்ய்ய் என் தலைவன் லுமும்பா நாட்லேர்ந்து அனுப்புற தந்தி ஏண்டா பாதில நின்னு போச்சு?சொல்றா என்று சுராத்து தந்தி ஆபிசரின் சட்டையை உலுக்க.....யோவ்...இன்னிக்கி நைட் பன்னெண்டு மணியோட தந்தி சேவைக்கு மொத்தமா மங்கலம் பாடுறாங்க.இது தெரியாம வந்துட்ட...ஓடிடு...என்று மிரட்ட வெளியே தெறித்து ஓடுகிறான்.... ********************************************************************** *********
*தில்லி சர்வதேச எழுத்தாளர் மாநாடு... . சூர்யாவுக்கு யாரும் அழைப்பிதழ் கொடுக்காவிட்டாலும் சுராத்து சூர்யா ஓணான்டிப்புலவர் மற்றும் உத்தமமேகன் நால்வரும் வாண்டனா டில்லிக்கு ரயில் பிடித்து சென்று எப்படியோ அங்கே நுழைந்துவிட்டனர்.(நான்கு நாள் மாநாடு என்பதால் அங்கேயே தங்கும் வசதி உணவு ஏற்பாடு வாட்டர் சர்வீஸ்... எல்லாம் உண்டு என்பதை கேள்விப்பட்டுத்தான் அவர்கள் அங்கே சென்றார்கள் என்பதை தனியா வேற சொல்லணுமா?-கும்மாங்கோ)... . ஈகிள் டிவியின் அசல் தொகுப்பாளர் மாணிக் தனது தம்பியின் காதில் மாட்டிய இயர்பீஸ் மூலம் சூர்யாவை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்து ஒருவரமே ஆகியிருந்த நேரம்.... . இது குறித்து சூர்யாவுக்கு தன்னையறியாமல் கடும் கோபம் ஏற்பட்டு அவ்வப்போது கை முஷ்டியை முறுக்குதல்,டேய்ய்ய்ய் என்று தன்னையறியாமல் கத்துதல்(ஒருமுறை சினிமா தேட்டரில் படத்துக்கு நடுவே சூர்யா ஆவேசமாக டேய்ய்ய் என்று கத்தியதும் அதே தருணத்தில் ஹீரோவை வில்லன் திட்டியதால் ஹீரோவின் ரசிகர்கள் தேட்டரில் பதிலுக்கு கத்தியதும் சின்க் ஆக தப்பித்தான் சூர்யா-கும்மாங்கோ) என்று நிகழ்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல்(உண்மையில் இப்படியெல்லாம் நிகழ்வது சூர்யாவுக்கே தெரியாது என்பது மற்றொரு காமெடி) தில்லிக்கு சப்ஜாடா கிளம்பி சென்றுவிட்டனர்.எப்படியோ அழைப்பிதழ் இல்லாமலேயே உள்ளே புகுந்து ஒரு டார்மெட்டரியில் இடமும் பிடித்துவிட்டனர். இவர்கள் நான்கு பேர்.அந்தப்பக்கம் ஒரு மலையாள சாகித்யக்காரன்,அவர் பக்கத்தில் ஒரு பஞ்சாபி எழுத்தாளர்.இந்தப்பக்கம் ஒரு ஹிந்தி எழுத்தாளரும் ஒரு எஸ்பன்யோல் எழுத்தாளரும் தங்கியிருந்தனர். . நள்ளிரவு நேரம்...எல்லாரும் மட்டையாகிக்கிடக்க.... ஆரம்பித்தது கூத்து..... ஆழ்ந்த உறக்கத்தில்(உபயம்:கெமி மார்டின்+சுண்டக்கஞ்சி ) இருந்த சூர்யாவின் மண்டைக்குள் சிரிப்பு சத்தங்களும் கிண்டல் குரல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக "மன்னிப்பு கேள்" என்ற குரலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது..... . மன்னிப்பு கேள்ள்... அந்த மண்டைக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா பாயிலிருந்து எழுந்தமர்ந்து கேக்க முடியாதுடா....என்று எதிரில் யாருமே இல்லாவிட்டாலும் ஆள்காட்டி விரல்காட்டி ஆவேசமாக கத்தினான்... . பிறகு தூக்கம்.... . அரைமணிநேரம் கழித்து..... மன்னிப்பு கேள்ள்..... கைகளை பவ்யமாக கட்டியபடி "கேக்குறேன் கேக்குறேன் கேக்குறேன்"....என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சூர்யா தூங்கிவிட... . ஒருமணிநேரம் கழித்து மீண்டும்.....மன்னிப்பு கேள்.... டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று ஆவேசமாக சூர்யா கத்த சுற்றி இருந்தவர்கள் எழுந்தமர்ந்து இதை தமாஷாக கவனிக்க ஆரம்பித்தனர்...பகூத் மஜா ஆ ரஹா ஹே..என்றபடி ஹிந்தி எழுத்தாளர் ரசிக்க ஆரம்பித்தார்... . மன்னிப்பு கேள்.... .போடாங்...... . மன்னிப்பு கேள்..... கேட்டுடுடுறேன்..... . மன்னிப்பு கேள்...... பூத்தா மா** என்று சூர்யாவுக்கு தெரிந்த ஒரே எஸ்பன்யோல் வசைமொழியில் திட்ட எஸ்பன்யோல் எழுத்தாளர் சூர்யாவை ஆச்சரியமாக பார்க்கிறார். . சுராத்து வழக்கம்போல இரவு நேரங்களில் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன் மாட்டியபடி கில்மா படங்களில் வரும் பின்னணி ஒலிகளை மட்டும் தனி ஆடியோவாக மொபைலில் போட்டு கேட்டபடி ரசித்து மகிழ்ந்தபடியே உன்மத்த நிலையில் தூங்குவது வழக்கமென்பதால் வெகுநேரம் சுற்றி நடப்பவை குறித்து தெரியாமல் இருந்தவன் திடீரென்று இருட்டில் ஒரு உருவம் காற்றில் பாக்ஸிங் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்து விழிக்கிறான். சூர்யாவின் மன்னிப்பு கேட்கும் படலத்தை கண்டவன் உடனே போன் செய்து "ஆங்.....ஒரு லொபோடமி கேஸ் இருக்கு.சீக்கிரம் வாங்க" என்று துண்டிக்கிறான். இதைக்கேட்ட சூர்யா "எனக்கா லொபோட்டமி?இருடி!உனக்கு வாசெக்டமிக்கு ஏற்பாடு பண்றேன்" என்று யோசித்தபடி போன் செய்து "ஆங்.....ஒரு அரிசி ஆப்பரேஷன் பார்ஸல்.ஆமா!தில்லி எழுத்தாளர் மாநாடு.டார்மிட்டரி நாலு..வாசப்படிலேர்ந்து நாலாவது ஆசாமி.அள்ளிட்டு போங்க" என்று துண்டித்துவிட்டு சுற்றி இருந்தவர்களை பார்த்து "நத்திங்...நத்திங்" என்றபடி படுக்கையில் பம்முகிறான். ****************************************************************************** இன்றைக்கு ஈகிள் டிவியில் நரியா?நாயா? நிகழ்ச்சியில் அடியேன் கலந்துகொள்ள உள்ளேன்.டிவி ஸ்டேஷனுக்கு செல்லும் ஆட்டோ செலவு ரிட்டர்ன் செலவு+சோலா ஷெரட்டன் டின்னர் செலவு என்று வாசகர்கள் எனக்கு தாரளமாக அனுப்பலாம்.குறைந்தபட்ச தொகையாக நூறு டாலர் அனுப்பவும். ****************************************************************************** சுராத்து எழுதிய ஸ்டெப்னி நாவல் சேல்ஸ் பிய்த்துக்கொண்டு போக அதன் தொடர்ச்சியாக "தொப்புளில் ஊசி போடுவது எப்படி?" என்ற மகாமகோ காவியமும் விற்றுத்தீர(எதுதான் விக்குமென்று எவனுக்கு தெரியுது!-கும்மாங்கோ) சூர்யா கடும் வயிற்றெரிச்சலில் இருந்தான்.அவனுக்கு ஆப்படிக்கனுமே!என்றபடி க்விட்டரை ஒப்பன் செய்து "சுராத்து லமுதிகவில் சேரப்போகிறாராம்!கேள்விப்பட்டேன்" என்று ஒரு கீச்சை தட்டிவிட்டுவிட்டு..."இருடி இன்னக்கி நைட்டு உனக்கிருக்கு பூஜை!" என்று அகமகிழ்ந்து தூங்க சென்றான். ****************************************************************************** இருட்டுல யாரு அரிசி ஆப்பரேஷன் ஆசாமின்னு தெரியலையேடா!என்று இரு ஊழியர்கள் குழம்பியபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள். சூர்யா சுராத்து இருவரும் உச்சா போய்விட்டு மப்பில் வந்து படுக்கும்போது இடம்மாறிவிட்டதால் இந்த குழப்பம்.சரி ரெண்டையும் அள்ளிப்போடு!நமக்கும் எக்ஸ்ட்ரா இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்று சு,சூ ரெண்டையும் மயக்க மருந்து உதவியுடன் ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்து முடித்தார்கள்.அரிசி ஹார்லிக்ஸ் சாத்துக்குடி சுபம். நோ....ஓ...ஓ....ஓ......என்று சூர்யா கதற சுராத்தோ சேதுவாகி விட்டத்தை வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான். ************************************************************************* நாயர் கட இட்லி மட்டும்தான் சென்னைல சிறந்தது என்று தப்பா சொன்னதுக்கு மன்னிப்பு கேள்! ...இது மாணிக் தம்பி பாபி. .................................ஈகிள் டிவி ஸ்டுடியோ........................................... . ஆடியன்ஸ் புடைசூழ. ..நாயா?நரியா? ப்ரோக்ராம். . . . . . சார்...அதுவந்து.... . வந்து போயிலாம் அப்புறம்!மொதல்ல பொய் சொன்னதுக்கும் உங்களோட வாசகர்களை ஏமாத்துனதுக்கும் மன்னிப்பு கேள்.... . என்ன நடந்ததுன்னா... . மன்னிப்பு கேள்...அப்புறம்தான் எல்லாம்... . டேய்ய்ய்ய்...என்று கூட்டத்தில் இருந்து சுராத்து பொங்கி எழ..உடனே இரண்டு பவுன்சர்களின் கவனிப்பில் கப்சிப் ஆகிறான்... . சரி....ன்னிச்சிடுங்க... . இல்லையே...சரியா கேக்கல!சத்தமா என்று தும்பி பட ஆதவன் போல பாபி கேட்க..
மன்னிச்சிடுங்க!மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க!...சரி...சரி....போதும்.இத்துடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் பாபி சூர்யாவுக்கு கொடுத்த விருந்தை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவன் பிறகுதான் தன்னை பாபியும் மாணிக்கும் வச்சி செஞ்சது மண்டையில் உறைக்க...அப்போதிலிருந்து "மன்னிப்பு-கேள்-கேக்க முடியாதுடா..." ரீல் ஓடிக்கொண்டிருக்கிறது.சூர்யாவின் தளத்திலும் முன்னூற்றி இருபத்தாறு பாகங்களாக மன்னிப்பு கேள் வந்தது. ****************************************************************************** ட்ரிங்...ட்ரிங்....மகா காவிய படமொன்றை ம்யூட்டில் வைத்து ரசித்துக்கொண்டிருந்த சுராத்து போனை எடுக்கிறான்.."யாரு?" டேய் என்னமோ கட்சில செரப்போறியாமே? அண்ணா அது நா இல்லீங்ணா! பின்ன சூர்யா கவீட் பண்ணி இருக்கான்.அது பொய்யா? பொய் தானுங்க! என்னடா நீ டெராபைட் கணக்கா சேத்து வச்சிருக்கும் கில்மா படங்களை இங்கிருந்தபடியே ஒரே செகண்ட்ல டெலீட் பண்ணி காட்டவா? பேயறைந்த மாதிரி அதிர்ந்த சுராத்து அண்ணா அந்த மாதிரி ஆசைலாம் எனக்கு இல்லீங்ணா!என்று கெஞ்சி சமாதானப்படுத்தி போனை வைத்ததுமே அடுத்த ரிங்....இப்படி விடிய விடிய... ******************************************************************************
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......நள்ளிரவு நேரம். பேகம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் அரிஸ்டாட்டில் சூர்யாவை வச்சு செஞ்சது நினைவுக்கு வர...சூர்யா கத்தியபடி வழக்கம்போல் ஆவேசமாக இருட்டில் பாக்ஸிங் போடுகிறான்.
"பேகம் ஒரு வனஜாதேவி புத்தகம்!"வ ன ஜா தே வி பு.....த்.. . த...க.....ம்......வனஜாதேவி.....ஜா...ன...வ....வி....தே...... உடனே ஆவேசமாக லேப்டாப்பை ஆன் செய்து அரிஸ்டாட்டிலுக்கு முன்னூற்றியாறு கண்டன கடிதங்களை எழுதி வலையேற்றம் செய்கிறான் சூர்யா. ....அதில் இருந்து சில வரிகள்... . இந்த அரிஸ்டாட்டிலுக்கு தான் பெரிய கஷிமோட்டோ சுகிமோட்டோ என்று நினைப்பு.எடுத்தது வெறும் இரண்டு படங்கள்.முழுக்க அபத்தம்.அவரது படங்களில் க்ராப்ட் இல்லை(காதி கிராப்ட் கடையில் கேட்டிருந்தா கிடைச்சிருக்குமே?-கும்மாங்கோ).வெறும் வெற்று உலக சினிமா பாவனைகளும் அப்பட்டமான காப்பி அடித்தல்களுமே அவரது படங்கள்.... ***************************** அரிஸ்டாட்டில் என்னை அழைத்திருந்தார்.வரமுடியாது என்றேன்.சுண்டக்கஞ்சியும் கருவாடும் வாங்கி வைத்திருப்பதாக சொல்லி முடிப்பதற்குள் அங்கே ஆஜரானேன். காதில் ஹெட்போன் மாட்டிவிட்டு இந்த பின்னணி இசையில் எப்போது சகீலா அறைக்குள் நுழைகிறார் என்று சரியாக சமிக்ஞை செய்யுமாறு சொல்லிவிட்டு ஆடியோவை ஆன் செய்ய ....நான் கண்மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவன் இந்த இடமா என்று ஒரு தருணத்தை குறிப்பிட ஆமாம் என்று பாராட்டினார்!(அப்போ பேகம் நாவலை வனஜாதேவி புத்தகம் என்று சொன்னதற்கு அரிஸ்டாட்டிலை நேற்றுதானே திட்டினார்!இப்போ எப்படி பம்முறார்? என்று கேட்கும் லீனியர் பிலிஸ்டைன் குஞ்சுகள் உத்தமமேகனின் ரசவடை கதைகளை படித்தே சாகுங்கள்-எண்பதாம் நூற்றாண்டின் செத்த மூளை)... . சரி...வந்தவேலையை செய் என்று சொல்லிவிட்டு குப்புற படுத்துக்கொள்ள நான் அவருக்கு மாலீஷ் செய்துவிட்டேன்-குயில புடிச்சி கூண்டிலடைச்சி கூவ சொல்லுகிற.....ஏய்....ஸ்டாப்....ஜப்பானிய பாடல் பாடு... .....கவாசாகி மியாசகி.....மியாசாகி ஹஷிமோட்டோ......ஹ்ம்ம்...நாலாம் சீலேவுல.... ....ஏய் மூடிட்டு மசாஜ் பண்ணு..ம்...அப்படித்தான்.... **************************************************************************************************************************************************** அடுத்தநாள் இரவு... எழுத்தாளர்கள் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க இப்போது சில சத்தங்கள்.சூர்யா இல்லை.அவன் சப்தநாடியும் ஒடுங்கியவனாக அசைய முடியாது படுத்துக்கிடக்க...பக்கத்தில் ஓணாண்டிப்புலவர் தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தபடி ... என்னமாதிரியான எண்ணையில் சமோசா போடுகிறோம்? என்னமாதிரியான சிமண்டில் பில்டிங் கட்டுகிறோம்? என்னமாதிரியான அரிசி ஆப்பரேஷன்களை செய்கிறோம்? என்னமாதிரியான கட்சிக்கு ஜால்ரா தட்டுகிறோம்? ....இப்படியாக விடாது தலையை சிலுப்பியபடி ஆவேசமாக இருட்டோடு பாக்ஸிங் போட்டுக்கொண்டிருக்க..
பக்கத்தில் உத்தமமேகன் மொபைலில் அந்த அரசியல் வாரிசு கல்லூரி மாணவிகளின் எல்கேஜி கேள்விகளுக்கு ப்ரீகேஜி லெவலில் பதில் அளிக்கும் வீடியோவை அகமகிழ்ந்து பார்த்தபடி...ஆகா!என்ன தேஜஸ்!என்ன ஒரு ஆற்றல்!சிரிக்கும்போது விழும் கன்னக்குழி இருக்கே!இதுக்கே இவரை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கலாம்!என்னன்னே தெரியல !இந்த மனுசனை ரொம்ப புடிக்குதே!ஆகா ஓகோ!சரி!இந்த டாப்பிக்கை வச்சிக்கிட்டு ஒரு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு பத்தி எழுதி நம்ம சைட்ல போடுவோம்!சடலூர் பீனு இதை சிலாகிச்சி ரெண்டு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு கடிதம் அனுப்புவான்!நமக்கும் பொழுது போவும்...என்றபடி டைப் செய்யத்துவங்க... இதை ஓரக்கண்ணால் பார்த்த சூர்யா "ஆகா டாபிக் கிடைக்காம ஏதேதோ பெனாத்திட்டு இருக்குறதுக்கு இதே டாபிக்கை நாமும் யூஸ் பண்ணிக்கலாமே!"என்றபடி அந்த அரசியல் வாரிசு போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும்.நாட்டின் எஸ்டிடி பற்றி ஆனா ஆவன்னா தெரியாட்டியும் பரவால்ல!எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்று கடித்ததில் குடித்தது என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதி வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்.(இப்பவாச்சும் வாரிசின் கட்சியில் உள்ள எண்ணற்ற கோஷ்டிகளில் ஒரு கோஷ்டியின் கடைக்கண் பார்வை நம்ம மேல பட்டா ரெமி செலவுக்கு ஆகும் என்ற நப்பாசைதான் என்பதை சொல்லவும் வேண்டுமா?-கும்மாங்கோ)... . அமலாதித்த பல்லவன் எழுந்து அமர்ந்து "ஐயோ!இதுங்க மத்தில மாட்டிகிட்டு நா படுற பாடு போதும்டா!" என்றபடி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். . . ******************************************************************************************************************************* சூர்யா எழுதிய ஒரு பதிவு: .
**ஒரு கிரிமினலின் கடிதம்**எனக்கு தினமும் ஆயிரம் ஆபாச கடிதங்கள் வருகிறது(எடைக்கு போடலாம்னு பாத்தா எல்லாம் ஈமெயில்!-கும்மாங்கோ)..ங்கோ என்று நேரடியாக திட்டும் கடிதங்கள் எவ்வளவோ மேல்.ஆனால் இதுபோன்ற கடிதங்கள்தான் இந்த பிலிஸ்டைன் சமூகத்தின் புண்ணை படம் போட்டு காட்டுகிறது.இதோ கடிதம். .
எடே சாரு, எப்போ பாத்தாலும் சூபிக்கள் ரூமி என்று ஜல்லி அடிக்கிற.ஆனா அதே ரூமி எழுதுன மஸ்னவி தொகுப்பில் இனவெறியும் கொலைவெறியும் இருப்பது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?இதோ ஆதாரத்தை அட்டாச்மென்டில் கொடுத்துள்ளேன். BTW மன்னிப்பு கேள் எபிஸோட் நடந்து 11 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துக்கள். -இப்படிக்கு பறிக்கி.. * சூபிக்கள் என்று நான் சிலாகிப்பதே ஒரு பக்கெட் பிரியாணிக்குதான்.தவிர நான் வரலாறு என்று எழுதுவதெல்லாம் எனக்கு தோன்றுவது மட்டுமே.அதை நிஜத்தோடு ஒப்பிடுவது என்னை வன்கலவி செய்வதற்கு சமம்.இந்த கடிதத்தை பாலிஸ்தான்தாசன்- பனடா பிரதமர் புருடோவுக்கு அனுப்பியுள்ளேன்.அவர் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.டேய் பறிக்கி குஞ்சு உனக்கு இருக்குடா ஆப்பு! . ********************************************************************************************************************************
சீச்சீ....துத்தூ....பொப்போ......சுராத்துவின் இந்த ஸ்டேட்டசுக்கு ரெண்டாயிரம் லைக் மற்றும் ஆயிரம் ஷேர்.
Friday, 15 January 2021
கோலிவுட் ரவுண்டப் 5.0
Pituitary warning: சிகரெட் பிடித்தல் உயிரை கொல்லும்.புடிக்காம இருந்தாலும் வேற எதாச்சும் காற்றில் பரவி கொல்லும்!
.
டுமீல்.....டிஷ்.......டமால்.....dispararle a la muerte...
டப்.....டுப்....
...............
.Shoot...Shoot.....
.
அமேசான் அடர்ந்த காட்டின் நடுவே...
மம்பு ஓடிக்கொண்டிருக்க பின்னால் அமேசான் வன பாதுகாப்புப்படை....
.
ஐயோ!இந்த குகீந்திரன் பேச்சை கேட்டது தப்பா போச்சே...
.
டுமீல்...
..பின்னாலிருந்து வந்த புல்லட் ஒன்று மம்புவின் முன் மண்டையின் கற்றை முடியை கழட்டிக்கொண்டு போகிறது....
.
போச்சா!இனி "அவரு" மாதிரி பேட்ச் விக் வச்சித்தான் நடிச்சாகணும்!ஏற்கெனவே அக்ரமை போட்டு காஜராட்டைன்னு வச்சு செஞ்சதை பாத்தப்பவே நா உசார் ஆகியிருக்கணும்!இப்ப பாரு முன்னாடி க்ளார் அடிக்கும்படி ஆகிப்போச்சே.....
.
லோக்கல்ல அழகா என்னோட வீட்டு பாத்ரூம்ல டீசருக்கான சீனை எடுக்கலாம்னு சொன்னதை வேணாம்னுட்டு அமேசான் காட்டில் அனகோண்டாவை உசுரோட கையில புடிக்குறமாதிரி காட்டுனாத்தான் த்ரில்லுன்னு சொன்ன அந்த டைரக்டர் எங்கடா....என்றபடி புதருக்குள் மறைந்து ஓடுகிறார்....
.
நாம் அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆனோம்.
.
******************************************************************************
அடுத்து அடுத்து சென்றது பல்பேட்டா ஷூட்டிங் ஸ்பாட்.... கொருக்குபேட்டை ஜிம்...
.
பஞ்சித்: ம்...அப்டிதான் மாம்ஸ்....உன்னும் வெறும் ஆயிரம் ஸ்குவாட்தான் மிச்சம்.....
.
கார்யா: .....நுரை தள்ளியபடி...... "அய்யய்யோ.......ஜாலியா நொந்தானத்தோட காலேஜ் வாசல்ல கிரவுண்ட்நட் போட்டுக்கிட்டு இருந்தவனை இப்படி பெண்டு நிமித்துறியே மச்சி...இது நாயமா?
.
பஞ்சித்: இன்னா தல மெர்சல் ஆவாத பண்ணு.நெக்ஷ்ட் இயர் கீட் எக்ஜாம்ல "நீ எத்தினி வாட்டி தண்டால் எட்த்த" ....அத்தான் கொஷின் ஆ வரப்போவுது...
.
கார்யா: ஆமா ஒரு சிங்கிள் க்வெஸ்டின்....அதுக்காக மொத்தமா ஆல் பாடி பார்ட்ஸும் டேமேஜ் ஆகிடும் போலயே!....அய்யய்யோ என்று அலறியபடி மீண்டும் ஸ்க்வாட்ஸ்!
.
***********************************************************************************************************
அடுத்து நாம் சென்ற இடத்தில் தேய்ந்து போன ரெகார்டாக ஒரு வருடமாக ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..
..லை....ப்.....இ....கர்ர்...ர்ர்ர்ரர்.....ஸ்....வெ....கர்ர்ர்ர்.....ரி....ஷா....ர்ர்ர்...ட்....ந....கர்ர்ர்ர்....ண்பா..........
.
கவுண்டர்: எந்த நேரத்துல வாய வச்சாங்களோ!ஒலகத்துல பாதி பேர் மேல டிக்கட் வாங்கிட்டான்....சரி இங்கேர்ந்து மொதல்ல ஜூட் விடுவோம்...
.
********************************************************************அடுத்து அஜய் கேதுபதி வீடு...கணசிங்கம் என்ற கிங்கள பெயர் தலைப்பை மாற்றக்கோரி வீட்டின் முன்பு நூறு பேர் மல்லாக்க படுத்து மறியல் செய்துகொண்டிருக்க இடையில் இருந்த கேப்பில் கால் வைத்து ஜம்ப் பண்ணி நாம் உள்ளே சென்றோம்....
.
அஜய் கேதுபதி முகமூடி அணிந்து நம்மை வரவேற்கிறார்...
.
கவுண்டர்: ...ண்ணா ......ஒரு டவுட்டு...
.
அ.கே: சொல்லுங்கஜி..
.
கவுண்டர்: போன வருசம் பாஸ்டர் ஆடியோ ரிலீஸ் பங்க்சன்ல ஒண்ணு சொன்னீங்களே நியாபகம் இருக்கா?
.
அ.கே:ஜி....சாரிஜி.....நியாபகமில்ல...
.
கவுண்டர் :(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒரு வாரத்துக்கு பத்து படம்னு கால்ஷீட் குடுத்துட்டு இருந்தா எப்படி நியாபகம் இருக்கும்....ஆ...அது வந்துங்ணா...."நம்ம மனசு சுத்தமா இருந்தா எதுக்கும் நாம பயப்பட வேண்டியதில்லைன்னு சொன்னீங்க.ஆனா நீங்க ஏனுங்ணா முகமூடி போட்டிருக்கீங்க?உங்க மனசு சுத்தமில்லையா?
.
அ.கே:...து...அது...வந்துஜி......
.
கவுண்டர்:க்கும்...தமிழ்நாட்ல மைக்கும் மேடையும் கெடச்சிட கூடாது!சகட்டுமேனிக்கு அடிச்சி விடவேண்டியது...என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டா பம்ம வேண்டியது!அவனவனுக்கு தெரிஞ்சத செய்ங்க!உனக்கு என்ன தெரியும்?
.
அ.கே:து....வந்து......
.
கவுண்டர்: கேக்கக்கூடாத கேள்விய கேட்டுட்டேன் போல!சரிங்ணா நீங்க வழக்கம் போல மேடைல மைக்க புடிச்சு ஆட்டையாம்பட்டி அரசியல்லேர்ந்து ஆப்ரிக்க அரசியல் வரைக்கும் சகட்டுமேனிக்கு அடிச்சி உடுங்க!இப்ப என்ன ஆளை உடுங்க!
.
*******************************************************************************
அடுத்து கலிமை ஷூட்டிங் ஸ்பாட்....
.
எந்த வருசம் ஷூட்டிங் ஆரம்பித்தது என்பதையே மறந்துபோய் காலமற்ற ஒரு வெளியை உள்ளே செல்லும்போதே நாம் உணர்ந்தோம்.
.
நுழைவாயிலில் ஒருவர் தலையை பிய்த்துக்கொண்டு உக்காந்திருக்க...என்ன என்று கேட்டதில் தான் கன்டின்யுவிட்டி பாக்கும் ஆசாமி என்றுசொல்ல விவரம் புரிந்து உள்ளே சென்றோம்.
.
பத்து பைக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக பாய்ந்துகொண்டிருக்க நமக்கு எந்த சேதாரமும் வந்துடக்கூடாது என்ற சுயநலத்தில் எஸ்கேப் ஆனோம்!
.
**********************************************************************************
அடுத்து ரெண்டாயிரத்தில் ஒருவன் பட ஸ்பாட்.
வழிநெடுக கும்மிருட்டு.ஆங்காங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் தொங்க ரத்தவாடை....
யார்னா இருக்கீங்களா?
ஊ ஊ ஊ என்று ஊதக்காத்து......
யார்லாம் இருக்கீங்க?
கும்மிருட்டில் இரண்டு கண்கள் மட்டும்.....
நெல்லாடிய நிலமெங்கே .....
கவுண்டர்: அதெல்லாம் பிளாட்டு போட்டு வித்தாச்சுங்ணா
சொல்லாடிய அவையெங்கே?
கவுண்டர்: அதெல்லாம் ஷாப்பிங் மால் ஆகிடுச்சு!
வில்லாடிய களமெங்கே?
கவுண்டர்:கேட்டட் கம்யூனிட்டி!ஆ நெக்ஸ்ட்...
கல்லாடிய சிலையெங்கே
கவுண்டர்: இதுக்கு கவுன்டர் அடிச்சா வீண் வம்பு!கப்சிப்!
தாய் தின்ற மண்ணே.. தாய் தின்ற மண்ணே....
கவுண்டர்:(கனுசுவின் தலையை பிடித்து ஆட்டியபடி) ஏன்டா பெத்த தாய்க்கு சோறுபோடாம மண்ணை திங்க வச்சிட்டு பெருமையா பாட்டு வேறையா?
. தா தீம்த.. திகு தக..
தா.. திரனன தா.. ஜிகு தக தா..
.
கவுண்டர்: ஓ!தமிழ்ல பாடுனா கலாய்க்கிறோம்னுட்டு துளு மொழில அளக்குறான்.....அடங்கப்பா முடியலடா!எஸ்கேப்!
.
*********************************************************************************
அடுத்து கூர்யா எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்...எது டிராப் ஆச்சு என்று எதுவுமே புரியாதநிலையில் அவர் வீட்டுக்கே சென்றோம்.வாசலில் பிவக்குமார் " செல்போனை எங்கிட்டே குடுத்துட்டு உள்ள போ ராஜா..ஆ ஆ " என்றுசொல்ல கீழே விழுந்தால் பிக்ஸல் தெரிச்சிடும் என்ற முன்யோசனை பயத்தில் பவ்யமாக அவரிடம் மொபைலை குடுத்துவிட்டு உள்ளே செல்கிறோம்..நூறு காலர் வச்ச ரவிக்கையும் நூறு காட்டன் புடவையும் பண்டலாக வந்து இறங்க...ஓ!ககுந்தலா தேவி ரீமேக் என்று புரிந்து அதை கடந்து சென்றோம்
தகச்சிக்கு தகச்சின் ....தகச்சிக்கு தகச்சின்....தகச்சிக்கு தகச்சின்....ரட்டட்ட....தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...ரட்டட்டட்
.
என்னாதிது?போதிகாதான் சோலோ படத்துல மட்டும்தான நடிக்கிறாங்க?அப்புறம் எப்படி புஷி பாட்டு?என்று குழம்பியபடி உள்ளே சென்றால் அங்கே பட்டாபட்டியோடு கூர்யா சேறுபூசியபடி நிற்க ரெண்டு பக்கமும் ரெண்டு அல்லக்கைகள் பயர் எஞ்சின் ஹோஸ் வைத்து தண்ணீரை பீய்த்து அடித்துக்கொண்டிருந்தார்கள்...
.
கூர்யா:...ம்...அப்படித்தான்!நல்லா வேகமா அடிங்க!காடிவாசல் படத்துக்காக மெனக்கெட்டு ரெண்டு மாசமா சேத்துளையும் வெயில்லயும் நின்னு ரெடியானா படம் ட்ராப்புன்னுட்டாங்க!அடுத்து சிட்டி சப்ஜக்ட்!பழையபடி ஜூஸ் குடிச்சு தெளியவச்சிட்டுதான் நடிக்க போகணும்!ம்....அப்படித்தான் அப்படியே ரெண்டு இன்ச் வலது இடுப்புல ஃபோர்சா அடி....அப்பாடா...
.
கவுண்டர்: ஏனுங்கணா எதுக்கு அப்படி செய்ய சொல்றீங்க?
.
கூர்யா:காடிவாசல் கேரக்டரோட முகபாவம் எப்பவும் கல்லடைப்பு வந்தவன் மாதிரி இருக்கணும்னு டைரக்டர் சொன்னாரு!அதான் நெஜமாவே....
.
கவுண்டர்: ஆங்!புரியுதுங்!டேய் அல்லக்கை...போய் அண்ணனுக்கு பழம் வாங்கிட்டு வா!ஒண்ணு இங்க இருக்கு!இன்னொன்னு இதான்னு சொன்னான்னா நடக்குறதே வேற!ஓடு!
.
பிவக்குமார்: என்ன இங்க சத்தம்?
.
கவுண்டர்: பம்மியபடி...ஒண்ணுமில்லீங்!என்றபடி வெளியேற நாமும் அவரோடு எஸ்கேப்!
.
********************************************************************************
அடுத்து செக்கந்தராபாத்தில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்.நுழைவாயிலில் பெரிய பலகையில்...
ஷூட்டிங் நேற்று நடந்தது.....இன்னக்கி நடக்கல...நாளைக்கி....!!!!!
என்று எழுதியிருக்க...
.
கவுண்டர்: இஹாஹாஹா என்று நக்கலாக சிரித்தபடி கடந்துசெல்ல நாமும் பின்னால் பம்மினோம்.
**********************************************************************************
அடுத்து காசர் எழுந்தருளும் பாழ்வார்பேட்டை சென்றோம்.....
வழிநெடுக பேனர் கட்டவுட் தோரணங்கள் துண்டுசீட்டு..இத்யாதி...இத்யாதி....
.
அல்லக்கைகளை தாண்டி உள்ளே செல்லவே மூன்று மணி நேரமாகிவிட்டது!உள்ளேயும் பெருங்கூட்டம்.கூட்டத்தின் இடையே லேசாக கிடைத்த இடைவெளியில் எட்டி பார்த்ததில் காசர் டாஸ் போட்டுக்கொண்டிருந்தார்...
...கிண்டியன் 2 ஷூட்டிங் போகணுமா?இல்லாட்டி அக்ரம் ஷூட்டிங்கா?
.
டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......
நாணயம் காசரின் பேச்சு போல மையமாக நிற்க.....சிறிதுநேர அமைதிக்கு பிறகு...பிரச்சாரம்!ஆரம்பிக்கலாங்களா? என்று கூறியபடி அடிப்பொடிகள் சூழ வெளியேறுகிறார்.
Wednesday, 2 September 2020
Reflections in a Golden Eye (1967)
அசோகமித்திரன் கதைகளை வாசிக்கும்போது 'இவ்வளவு எளிமையா?' என்ற எண்ணமே முதலில் ஏற்படும்.பிறகு கதை மனவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து விரிந்து பல்வேறு புது பரிமாணங்கள் வெளிப்பட்டு வியக்க வைக்கும்.இப்படம் அப்படித்தான்.
லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் படத்தில் ஒரு இழப்பு ஏற்படுத்திய மன விரிசலை பிராண்டோ கதாபாத்திரம் புறவய ரீதியில் வெளிப்படுத்துவதாக இருந்தால் இப்படத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஒருபாலின விழைவு அகவயமாக கடும் விரிசலை ஏற்படுத்துகிறது. க்ளாஸ் எடுக்கும் காட்சியில் மேஜர் வெல்டன் (பிராண்டோ) திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டு உடைந்து அழும் காட்சி படத்தின் உச்சகட்ட காட்சிகளுள் ஒன்று!இந்த அண்டர்ப்ளே என்ற வார்த்தையை க்ளீஷே ஆக்காமல் இருந்திருந்தால் இங்கே அதை பயன்படுத்தியிருக்கலாம்!
படம் வந்த சமயத்தில் திரையரங்கில் அந்த அழும் காட்சி வந்தபோது பார்வையாளர்கள் சிரித்ததாக சொல்வார்கள்!எருமைத்தோல் போர்த்தப்பட்ட ஆசாமிகளால் செய்ய முடிந்தது அதுதான்!
ஒருபுறம் அடக்கப்பட்ட ஒருபாலின விழைவுகள் உண்டாக்கிய மன கொந்தளிப்புகள் அகவயமாக இறுக்க இன்னொருபுறம் புறவய இறுக்கங்கள் தனி.அதில் ஒருபக்கம் தனது பலவீனங்கள் முழுமையாக தெரிந்த தனது மனைவி தன்னை மிக இழிவாக நடத்துவதோடு மட்டுமல்லாமல் கணவனுக்கு தெரிந்தே வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ளுதல்.
இன்னொரு பக்கம் ப்ரைவேட் வில்லியம்ஸ் வெல்டனின் பலகீனங்களை ரகசியமாக வீட்டில் உளவு பார்த்து தெரிந்துகொண்டு தொடர்ந்து வெல்டனை கடுப்பேற்றும் விதமாக பல்வேறு வினோதமான செயல்களை செய்வது என்று இருப்பக்கமும் கடும் இறுக்கத்தில் சிக்கி தவிக்கிறார் வெல்டன்.
மார்லன் பிராண்டோவின் பகுதி ஒருபுறமிருந்தால் இன்னொரு புறம் கர்னலின் மனைவியாக வரும் அலிசன் லேங்டன் பற்றி சொல்ல வேண்டும்!In Cold Blood என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலில் வரும் ஹெர்பர்ட் கிளட்டரின் மனைவி பான்னியின் தன்மைகளை கொண்டவராக உள்ளார்.
பான்னி கிளட்டர் கணவன் இல்லாத தருணங்களில் மிகமுக்கிய முடிவுகள் எடுக்கவேண்டி இருந்தால் பதறிப்போய் அதில் இருந்து தப்பிக்க தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்பவர்.
![]() |
| Bonnie Clutter |
இந்த படத்தில் அலிசன் கதாபாத்திரம்(ஜூலி ஹாரிஸ்) வாழ்வது வேறொரு உலகில்!இந்த உலகின் சிறு சத்தங்கள் கூட அவரை மிரள வைக்கிறது!தனது தனிப்பட்ட உலகிலிருந்து இந்த நிஜ உலகிற்கு அழைத்து வரும் எதுவும் அவருக்கு கடும் பதற்றத்தை உண்டாக்குகிறது.அலிசனின் தனி உலகம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாதவராக கணவன் மாரிஸ்.அலிசனின் உலகில் நுழையக்கூடிய ஒரே நபர் பணியாள் அனக்லெடோதான்!ஒவ்வொரு முறை நிஜ உலகின் ஏதோ ஒரு கூறு அலிசனின் மிக பலகீனமான சமநிலையை குலைக்கும்போதேல்லாம் அவரை மீட்டெடுத்து ஆற்றுப்படுத்துவது அனக்லெடோதான்!
![]() |
| Alison |
அனக்லெடோவாக வரும் சோர்ரோ டேவிட் என்பவர் அசாத்தியமாக நடித்துள்ளார்!அவரின் ஒவ்வொரு உடல்மொழியும் வலிந்து திணித்ததாகவோ செயற்கையாக வரவழைத்துக்கொண்டதாகவோ ஒரு இடத்திலும் காண முடியவில்லை!ஒரு நதியின் இயல்பான நீரோட்டம் போல அவர் நடித்துள்ளார்.இப்படியான ஒரு அசாத்திய திறமைசாலி இந்த ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது சோகம்!
![]() |
| Anacleto & Alison |
படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்!கொஞ்சம் அசந்தாலும் ஒரு மேடை நாடகம் போல தெரிந்துவிடும் அபாயம் இருந்தாலும் அப்படி எதுவும் நிகழாமல் பார்த்துக்கொண்டுள்ளார் இயக்குனர்.
![]() |
| Private Williams |
ஆனால் படம் நன்றாக இருந்தும் இது மார்லன் பிராண்டோவின்/எலிசபெத்டெய்லரின் ஆகச்சிறந்த படங்களுள் ஒன்றாக சொல்லப்படுவதில்லை!காரணம் நான் முதல் பத்தியில் குறிப்பிட்டதுதான்!அந்த "கொஞ்சம் கொஞ்சமாக விரியும்தன்மை கொண்ட படைப்புகள் உடனடி நிறைவுணர்வுதேடி படம் பார்க்கவரும்/புத்தகம் வாசிக்கும் ஆசாமிகளிடம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.அவர்களுக்கு அவை மிக சுமார் ராகமாகவே தோன்றும்! அதற்காக படைப்பை குறைசொல்ல கூடாது!
படத்தின் அசாத்திய ஒளிப்பதிவையும் குறிப்பிட வேண்டும்!டிஜிட்டலில் கருப்பு/இருட்டு சாணி அடிச்சாமாதிரி படமாகும் வேளையில் இப்படத்தை பார்க்கும்போது ஃபிலிமில் படமாக்கும் மறந்துபோன அற்புத பழக்கத்தை சிலராவது நினைவு கூர்வர்!
Monday, 25 May 2020
The Tell-Tale Brain - V. S. Ramachandran
Phantom Limbs.
![]() |
| வி.எஸ்.ராமச்சந்திரன் |
![]() |
| துண்டிக்கப்பட்ட இடது கையை கண்ணாடியின் பின்பக்கம் வலது கையின் பிம்பத்தோடு ஒன்றிப்போகும் வண்ணம் வைத்திருத்தல் |
ப்ராக்ச்சர் ஆன கை.கை அசைத்தால் வலிக்கும் என்பது நிரந்தரமாக பதிவாகி கை குணமான பின்பும் கையை அசைத்தால் வலி!A-B நிரந்தரமாக பதிவாகிறது.பிறகு மேற்சொன்ன கண்ணாடி டெக்னிக் மூலம் வலது கையை அசைப்பதன் மூலம் உடைந்து சேர்ந்த இடது கை அசைவதாக மூளை உணர்ந்து வலி இல்லையா?சரி அப்போ அசைச்சிக்க! என்று கட்டளையிட பிறகு இடது கையில் வலி இல்லை!
மிரர் ந்யூரான்- மற்றவரின் வலி உணர்தல்
உதாரணமாக கீழுள்ள படத்தை பார்க்கவும்.முதல் வரிசையை நீங்கள் இட்லி தட்டு போல குழியாக கண்டால் கீழ் வரிசை புடைப்பாக தெரியும்& vice versa.இதற்கு காரணம் மூளையை பொறுத்தளவில் ஒளி என்பது நம் தலைக்கு மேலிருந்து வரும் ஒன்று!
![]() | ||
மேலும் நமது மூளையானது அதுவாகவே கோடிட்ட இடங்களை நிரப்பும் தன்மை வாய்ந்தது.உதாரணமாக கீழே உள்ள இருபடங்களை காணும்போது இரண்டிலுமே பெரிய வட்டம், இரு புள்ளிகள், இரண்டு கோடுகள் கொண்டதாக இருந்தாலும் முதல் படத்தை நமது மூளை ஒரு முகமாகவே பதிவு செய்கிறது.இரண்டாம் படத்தில் அப்படி ஒரு ஒழுங்குமுறைசட்டகத்துள் கொண்டுவர இயலாததால் தனித்தனி புள்ளிகளும் கோடுகளுமாக தெரிகிறது.
இதுபோலஒரு அடர்ந்த பச்சைப்புதர் ஓவியம்/புகைப்படத்தில் மெலிதான மஞ்சள் கீற்று தெரிந்தால் இயல்பாகவே நமது மூளை அதை ஒரு புலி/சிங்கமாக பதிவு செய்யும்!
Tuesday, 12 May 2020
மானசரோவர்-அசோகமித்திரன்
“அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் பேசுகிறார்கள் அவர்களுக்கு கோபம் இவர்களுக்கு வருத்தம் என்ற கட்டுகள் இல்லாமல் ஒருவன் தன் பிறந்த ஊரில் வசிக்க முடியுமா?இதுதான் காரணமோ விடுதலையை தேடி போனவர்கள் அனைவரும் தம் ஊர் தம் சுற்றுப்புறத்திலிருந்து வெகுதூரம் சென்று அனாமதேயர்களாக இருக்க முயன்றது?”
நேருவின் மரணம் கதையின் ஒருபகுதியில் வருகிறது.நேருவின் மரண செய்தி நாடு முழுக்க தெரிந்த நிலையில் சென்னை சாலையில் செல்லும் ஒரு சவ ஊர்வலத்தில் சென்றுகொண்டிருக்கும் ராமச்சந்திரனை துரத்தி பிடித்து சத்யன் “கோபால் எங்கே?” என்று வினவுகிறார்.”நானே ஹோட்டலுக்கு வந்து சொல்கிறேன்” என்கிறான் ராமச்சந்திரன்.காரில் ஏறி சவ ஊர்வலத்தின் ஊடே புகுந்து முன்செல்வது குறித்து வெட்கப்படுகிறான் சத்யன்.
![]() |
| திலீப் குமார் |
“இன்றும் நான் கதாநாயகியை சந்திக்கும் காட்சிதான்.அந்தக்காட்சியில் என் வயது ஐம்பத்தாறுதான் இருக்க வேண்டும்.ஆனால் சினிமாக்காரர்களுக்கு கதாநாயகனை கிழவனாக காட்ட வேண்டும் என்றால் அவனைப் படுகிழவனாகத்தான் காட்டுவார்கள்.தலையும் மீசையும் தாடியும் காட்டேரி போல இருக்க வேண்டும்.அது எப்படி சினிமா கதாநாயகர்களுக்கு என்ன வயதானாலும் தலை வழுக்கை விழுவதில்லை?”
“எனக்கு முகமெல்லாம் மயிர்.கண்ணுக்கு கீழ் சுருக்கங்களுக்கு பதில் கருப்பு கோடுகள்.நெற்றியிலும் அவ்வாரே.கிழிந்து போல கொட்டு பாண்ட்.எல்லாப்பணமும் போய் பிச்சைக்காரனாக வாழும் கதாநாயகனுக்கு இப்படிக்கோட்டும் பாண்ட்டும் எங்கு கிடைத்தது?”
இன்று இரவு இந்த குட்டிச்சுவர் காட்சிகளை முடித்துவிட வேண்டும்.இது படம் பார்க்க வருபவர்களை தொண்டையடைய செய்யும் கட்டம்.படம் முடியும் பொது எல்லாரும் அழுதுகொண்டு வீட்டுக்கு கிளம்பு வேண்டும்.என்னுடைய இந்த சீன்கள் பிரபலமானவை.படத்தின் ஆரம்பத்தில் மூச்சு விடுவதெல்லாம் காதல்.இடைவெளியின்போது காதல் பறிபோதல் அல்லாது நான் தியாகம் செய்துவிடுவேன்.படத்தில் முடிவில் நான் என் காதலிக்கு நேரும் மிகப்பெரிய இக்கட்டை தீர்ப்பேன்.சில படங்களில் உயிரையும் விட்டுவிடுவேன்.நான் உயிர் விடும்போது திணறித்திணறி பொன்மொழிகளாக உதிர்ப்பேன்.அதை கதாநாயகியும் அவளுடைய கணவனும் அவர்களுடைய பிள்ளை பெண் மாப்பிள்ளை பேரக்குழந்தைகள் கிராமத்தை சேர்ந்த எல்லாருமாக கேட்டுக்கொண்டு கண்ணீர்விடுவார்கள்.அவர்களுடைய கண்ணீர் வெள்ளத்தில் கொப்புளித்து கொண்டு என் உயிர் சொர்க்கத்துக்கு செல்லும்.
“தஞ்சாவூர் ஜில்லாவில் அனேகமாக மின்சாரமே கிடையாது எனலாம்.ஆனால் நாங்கள் எங்கள் கதைகளில் மின்சாரத்தை தாராளமாகவே பயன்படுத்துவோம்.”அவளுடைய தாவணி நுனி ஒரு வினாடி அவன் மேல் பட்டது;அவனுக்கு உடலெல்லாம் ஷாக் அடித்தது””அவன் விரல்நுனி அவளுடைய கையை தீண்டியபோது அவனுக்கு தலையிலிருந்து கால்வரை மின்சாரம் பாய்வது போல இருந்தது”
“விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது.என்னுடைய வாழ்நாளிலேயே எத்தனை மாறுதல்களை கண்டுவிட்டேன்!.....பத்தாண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததெல்லாம் இப்போது சாத்தியமாகிறது.இதோ இந்த பால் பாயின்ட் பேனா!ஒரு பந்தை உருளவைத்து எழுத முடியும் என்று என் அப்பா நினைத்துப்பாத்திருக்க முடியுமா?ஆனால் மனிதன் தலையில் எதை வைத்து எழுதியிருக்கிறது?என் தலையில் என்ன எழுதியிருக்கிறது?”
நவீன வாழ்க்கை -இருபத்தியோராம் நூற்றாண்டு என்கிறோம்!அதிநவீன தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த நவீன வாழ்வு உருவாக்கித்தரும் சிக்கல்களை அதே நவீன அணுகுமுறை கொண்டு தீர்க்க முடியாமல் போவதை பல தருணங்களில் காண்கிறோம்!("ஏண்டா பாபு,காலத்திலே அந்தக்காலம் இந்தக்காலம்னு ரண்டு உண்டா?காலம் ஒரே காலம்தான்" -வைத்தி,மோகமுள்) கோபால் அத்தகைய நவீன வாழ்விற்கு வெளியே அத்தகைய ஒரு தீர்வை கண்டடைகிறான்.சத்யன் நவீன வாழ்வினுள்ளேயே சிக்கி தவிக்கிறான்.


























