Monday, 1 April 2013

எலங்கையை கண்டித்து தமிழ் நடிகர்கள் உண்ணாவிரதம் (ஒரு கற்பனை)

  இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே..நகைச்சுவைக்காகவே கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.எந்த மனிதரையோ, வாழும் உயிரினங்களையோ, ஹிக்ஸ் போஸான்களையோ  தனிப்பட்ட விதத்தில்  புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.
************************************************************************************

கஜீத் வருகிறார்.மேடை ஏறுகிறார்.அப்போது ககாநதி பங்கர் வந்து கல நீ ஆடு கல என்கிறார்
கவுண்டர்: டேய் கிட்டத்தட்ட ஆறடி ஒசரத்தில் ஒரு மனுசன் நிக்குறாரு..நீ என்னடான்னா நக்கலா அவர ஆடுன்னு சொல்ற..மாத்தி சொல்டா
ககாநதி டெரர் ஆகி  : கல நீ மனுசன் கல
கவுண்டர்: இது...
 கஜீத் : அய்யா மெரட்றாங்கய்யா...
கவுண்டர்: அண்ணா  ஆட்சி மாறி ரெண்டு வருஷம் ஆகுதுங்ணா ..
கஜீத் : அண்ணே சாரிண்ணே...போன தடவ ஒரு டமில் டீச்சர்கிட்ட எளுதி வாங்கி வந்ததை அப்படியே படிச்சிட்டேன்..

(திருத்திக்கொண்டு பேசுகிறார்)
 அம்மா மெரட்றாங்கம்மா As I am suffering from fever அப்படின்னு லெட்டர் எழுதி கொடுத்தாலும்  மெரட்றாங்கம்மா.எனக்கு யாரை பற்றியும் கவலை இல்லைம்மா...என்னோட லட்சியமே  ஒரு டூபர் ஷ்டார் நாக்காலி வாங்கணும்..அவ்வளவுதான்.
 கவுண்டர்: யப்பா யாருப்பா அங்க?அண்ணனுக்கு ஒரு டூப்பர் ஸ்டார் நாற்காலி பார்சல் பண்ணுங்க அப்புறமாவது படங்களில் நடையா நடப்பதை நிறுத்துறாரான்னு பார்ப்போம்.
 கஜீத்: அண்ணே கிண்டல் பண்ணாதீங்கண்ணே
கவுண்டர்: சரி சுண்டல் பண்ணிடுவோம்..என சொல்ல கோதாரவி வந்து முறைத்துவிட்டு போகிறார்.
கஜீத்:(திடீரென்று பேட்டி கொடுப்பதன் நினைவில்  இங்குலீசில் பேசுகிறார்) ஹியர் ஆப்டர் சிக்ஸ் மந்த்ஸ் ரேஸ். சிக்ஸ் மந்த்ஸ் ஷூட்டிங்...ஐ ஹாவ் ஸ்டார்டட் எ வெப்சைட் இட்ஸ் கால்ட் ப்ளையிங் காடை..இட் வில் பி அப்டேட்டட் எவ்ரி ஹவர்.
கவுண்டர்: என்ன பேசுராருன்னே புரியல..யப்பா யாருன்னா பக்கத்துல நின்னு மொழிபெயர்ப்பு செய்ங்க
கஜீத்: அண்ணே பல தவுசண்ட்ஸ்  ஸ்பென்ட் பண்ணி கபிடெக்ஸ் கோர்ஸ் முடிச்சிருக்கேன்.எங்கையாவது அதை பில்டப்பா காட்டாட்டி எப்டிண்ணே?
கவுண்டர்: அது சரிங்ண்ணா நீங் தமிழே ஒழுங்கா பேசாம பல படங்களில் திண்டாடுறீங்களே? தமிழ் கோச்சிங் போய் அதை ஒழுங்கா ஏன் கத்துக்கல?
கஜீத்: அண்ணே கமிழ் நாட்டு பீப்பிள்சே டமில் பேசுறதில்ல..தென் வொய் ஆர் யூ ஆஸ்கிங் மீ?டமில் தப்பா பேசுனா புத்திசாலின்னு சொல்வாங்க. இங்க்லீஷ் தப்பா பேசுனா சிரிப்பாங்கண்ணே.
கவுண்டர்: ரொம்ப வெவரமாத்தான் பேசுறாரு...ஹ்ம்ம்...சரி நீங்க கண்டின்யூ பண்ணுங்க..
கஜீத்: இத்துடன் ஐ கம்ப்ளீட் மை ஸ்பீச்.தாங்க்ஸ்.
கவுண்டர்: சரி சரி பேசிட்டீங்க இல்ல?அடுத்தது யாருப்பா?
*********************************************************************************
 நடுவில் கசன்னா பினேகா வந்து  "உண்ணாவிரத போராட்டத்தின் இந்த பகுதியை வழங்குவோர் குரங்கு மார்க் லுங்கிகள்" அணிந்தால் சுகம் தருமே தினம்.....டிங் டிங் டிங்....என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.
கவுண்டர்: ஐயோ பாவம் யார் பெத்த புள்ளைங்களோ இப்படி விளம்பர உலகுக்கே ஒட்டு மொத்தமா தங்களை நேர்ந்து விட்டுட்டு சுத்துதுங்க.சரி அடுத்து யாருப்பா?
**********************************************************************************

கஜினிகாந்த் வருகிறார்....உய்..உய்...உய்...விசில் சத்தம் வானை பிளக்கிறது.கஜினி கையை தூக்கி வணக்கம் சொல்கிறார்.
கவுண்டர்: அட என்னப்பா நீ... கைய வேற கால வேற தனி தனியா தூக்கிட்டு இருப்பியா?
கஜினி : இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை தர மாட்டாங்கன்னு சொன்னா....(நீண்ண்ண்ட இடைவெளி விடுகிறார்)
கவுண்டர்: சொன்னா என்ன? அதான் சொல்லிகிட்டே இருக்காங்களே?
(கோதா ரவி சும்மா இருக்கும்படி சைகை செய்கிறார்)
கஜினி பேசாமல்  திடீரென்று ஏதோ ஒரு வெற்று வெளியை தொடர்ந்து பார்த்துகொண்டிருக்கிறார்.
கவுண்டர்: இவுரு என்ன ராம்கோபால் வர்மா படத்துல வர்ற  சிறுமி பேயை பாத்தா மாதிரி எங்கையோ பாக்குறாரு.அண்ணா பேசுங்க்ணா
கஜினி: ஆ!....எங்க விட்டேன்?ஆ! சம உரிமை தரமாட்டோம்னு சொன்னா..ஒர்ரே நாள்ல....நம்ம ராணுவம் அவுங்கள விரட்டி அடிக்கும்... அடிக்கணும்
கவுண்டர்: அண்ணா இது உங்க பட திரைக்கதை விவாதம் இல்லீங்க்ணா
       கன்சூர் கலி கான் அருகில் வந்து  தலையை சாய்த்து முறைக்கிறார்..
கவுண்டர்: டேய் இந்த வியாதிக்கெல்லாம் மருந்து எப்பவோ கண்டு பிடிச்சிட்டாங்கைய்யா. இன்னும் தொங்கிப்போன தலையோட சுத்துற என கன்சூரை திருப்பி அனுப்பி வைக்கிறார்.

கவுண்டர்: அட  என்னடா இது... கோதாரவி  ஒரு பக்கம் கடுவன் பூனை மாதிரி..இன்னொரு பக்கம் கன்சூர்  வேற..இம்சையா போச்சு..
கஜினி: நான் வந்து .....(யோசிக்கிறார்)...நான் வந்து.....
கவுண்டர் : அதான் வந்துட்டீங்களே..
கஜினி: நா வந்து பம்பாய் போனா கன்னடன்னு சொல்றாங்க..பெங்களூரு போனா 'தமிழன் இங்க உனக்கென்ன வேலைன்னு சொல்றாங்க... தமிழ்நாட்டுக்கு வந்தா நீ கன்னடன் இங்க என்ன பண்ற?'ன்னு கேக்குறாங்க..இப்படி எல்லாருமே கேட்டா நா எங்க போவேன்?
கவுண்டர்: காஞ்ச் போன பூமியெல்லாம் வற்றாத நதிய பாத்து ஆறுதல்படும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா??..இஹு இஹு இஹு (அழுவது போல பாவ்லா செய்கிறார்)
கோதாரவி வந்து கவுண்டர் காதில் கிசுகிசுக்கிறார்...
யோவ் உனக்கு பேச நேரம் வரும்போது பேசலாம் அதுவரைக்கும் சும்மா இருய்யா
கவுண்டர்: என்னது என்ன பேச சொல்வீங்களா?இந்த டகால்டி வேலை எல்லாம் என்கிட்டே நடக்காது..நா பேசுனா எல்லார் வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடும்னு உங்களுக்கு தெரியாதா என்ன?
கோதாரவி: உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?கொஞ்சம் சும்மா இருய்யா
கஜினி : நா வந்து தலைப்புக்கு சம்மந்தம் இல்லாம பேசுறேன்னு நினைக்கிறேன்
கவுண்டர்: யப்பா உண்மைய ஒப்புகிட்டீங்களே..
கஜினி: கஞ்சை கத் என்ற அப்பாவியை ஆறு வருஷம் சிறையில் அடைக்க போறாங்கன்னு சொன்னா...அது வந்து...நா வந்து...எப்டி சொல்றது..அது ..சரியில்ல..தப்பு..கஞ்சை கத் வாய்ல வெரல வச்சாலும் கடிக்க தெரியாத புள்ள..அவர வந்து இப்டி உள்ள தள்றது நல்லதா இல்ல.
கவுண்டர்: அண்ணா அதுக்கும் இந்த கூட்டத்துக்கும் என்னங்கணா சம்மந்தம்?
கஜினி: கண்ணா சம்மந்தம் இல்லாம பேசி குட்டையை கொழப்புறதுதான் என் வழி குழப்பும் வழி.இஹா ஹா ஹா ...
கவுண்டர்: யப்பா ஒருவழியா வாயை தொறந்து உண்மையை ஒப்புகிட்டாரு.
**********************************************************************************
அடுத்து விமலஹாசன் வருகிறார்.அவர் வரும் போதே சிலர் குறுக்கே படுத்துக்கொண்டு பேச விடாமல் தடை செய்கிறார்கள்.அவர்களைத்தாண்டி லாங் ஜம்ப் செய்து  வந்து பேச துவங்குகிறார்
கவுண்டர்: பாவம் மனுசன நடக்க கூட விடாம அதுக்கும் தடை போடுறாங்க.
விமல: வெல் ஆ....பஸ்வரூபம் பற்றி பேச கூடாதுன்னு நெனச்சேன்.இங்க குறுக்கே படுத்துக்கொண்டு செய்த ஆர்ப்பாட்டம் மீண்டும் அதையே பேச வைக்கிறது.ஏற்கெனவே எனது ஹே பாம் படத்தை சிலபேர் வெட்டணும் ஓட்டணும்னு பாத்தாங்க.நடக்கல
கவுண்டர்: நீங்க அவங்களுக்கு எடிட்டர் வேலை கொடுத்திருந்தா சும்மா போய் இருந்திருப்பாங்க.
விமல்: வெல் ஆ....ஒரு லட்சம் தமிழர்களை கொன்றுள்ளது இலங்கை.இதே  அமெரிக்கா என்றால் குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.....
கவுண்டர்: அண்ணா என்ன சுந்தர ராமசாமி புத்தக தலைப்பெல்லாம் சொல்றீங்க?
விமல்: ஓ சாரி..குழந்தைகள் பெண்களை கொல்லாது  அமெரிக்க drones.
கவுண்டர்: சரி சரி அடிச்சி விடுங்க..உங்களுக்கும் ஹாலிவுட் சான்ஸ் நெருங்கி வரும் வேளையில் இப்படி எதையாவது சொன்னாதான் உண்டு 
விமல் : இலங்கை புத்த மதம் சார்ந்த நாடு.ஆர்னால்ட் ஷ்வாஸநெக்கர் சொன்னதைத்தான் கவுதம புத்தர் சொன்னார்.If you accept pain life becomes easier.so accept pain.
கவுண்டர்: இப்போ என்ன சொல்ல வரீங்க?
விமல : ஆகாஸம்பட்டு சேஷாச்சலமும் இதையேதான் சொல்றார்.
கவுண்டர்: என்ன பேரெல்லாம் ஒரே டகால்டியா இருக்கே..
விமல்: வெல்! ஆ! நான் என்ன சொன்னாலும் அதை புரியல திருத்தணும்; தடை போடணும்னு துடிப்பது தெரியுது.அவர்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
விமல்: வெல்! எனக்கு அமெரிக்க ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு.அதனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்
கவுண்டர்: யப்பா இவுரு பேசுனதுல இது ஒண்ணுதான் ஒழுங்கா புரியுது.
அடுத்து யாருப்பா?
*********************************************************************************
நடுவில் கூர்யா போதிகா வந்து மூக்கு  பொடி விளம்பரம் செய்துவிட்டு போகிறார்கள்.பன்ரைஸ்  மூக்கு பொடி தருமே சுகம்! அதுவே நிஜம்..
கவுண்டர்: ஆமா கசன்னா பினேகாக்கு போட்டியா இந்த ஜோடியா?அட்ரா அட்ரா...விளம்பர கம்பெனிக்கு அதிர்ஷ்டம்தான்.
**********************************************************************************
கரத் குமார் வருகிறார் பச்சை வேட்டி பச்சை சட்டை  அணிந்து தலையில் பன் ரைசர்ஸ் தொப்பி போட்டுகொண்டு 
கவுண்டர்: செம கில்லாடிதான் இவுரு..ஒரு பக்கம் ஆளும்கட்சிக்கு கொ.ப.செ வேலை. இன்னொரு பக்கம் பன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம்,மனைவி பன் டிவியில் தொடர்ந்து சீரியல் தயாரிப்பு.பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
கரத்குமார்: வாட்டாள் பாகராஜ்... வற்றல் பாகராஜ்
கவுண்டர்: அண்ணா அது காவேரி பிரச்சனையில் பேச வேண்டிய டயலாக்கு.அண்ணனுக்கு பசி போல..எலே அண்ணனுக்கு ஒரு புல் மீல்ஸ் பார்சல்.பேச வேண்டிய பேப்பரை மாற்றி எடுத்து வந்ததை உணரும் கரத் ஜூட் விடுகிறார்.
**********************************************************************************
 கசன்னா பினேகா மீண்டும் வந்து உண்ணாவிரதத்தின் இந்த பகுதியை ஸ்பான்சர் செய்வோர்  உடும்பு மார்க் கைக்குட்டைகள்.உச்ச வெயிலிலும் தருமே ஏசி சில்லிப்பு...உடும்பு மார்க் கைக்குட்டைகள்...டொன்டொன்டொய்ங்...
**********************************************************************************

அடுத்து குஜயகாந்த் கூட்டத்தை விலக்கி கொண்டு மேடை நோக்கி வருகிறார்.குறுக்கே சிலர் வழிவிடாமல் நிற்க அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.மேடை ஏறி பேச துவங்கும் வேளையில்...கீ...ஈ.ஈ...ஈ ...(மைக்கில் எக்கோ கேட்கிறது)
கண்கள் சிவக்க மேடையை விட்டு இரங்கி மைக்செட் பொறுப்பாளரை அடித்து வெளுக்கிறார்.
கவுண்டர்: யப்பா இந்த உண்ணாநிலை போராட்டம் கொஞ்சம் தொய்வடைந்தது போல இருந்த நேரத்தில் ஆக்ஷன் ப்ளாக் கொடுத்தது நல்லாதான் இருந்திச்சு.
**********************************************************************************
அடுத்து குஜை ...நெற்றி பொட்டில் ஒரு விரலை வைத்துகொண்டு தலையை சாய்த்துக்கொண்டு வருகிறார்.
கவுண்டர்: அண்ணா என்னங்கணா  தலைவலியா?
குஜை: "தலையும்" இல்ல வலியும் இல்லை
கவுண்டர்: பஞ்ச டயலாக் பேசிட்டாராம்மா...முடியலீங்ணா..

குஜை : ண்ணா! என்கட்சி ஜெயிக்கணும்..ஆ...என் தங்கச்சி ஜெயிக்கணும்னு சொல்றேன்
கவுண்டர்: எலெக்ஷன் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுது.இன்னும் சூலாயுதம் வசனத்தை பேசிகிட்டு அலையுறாரு.
குஜை : அண்ணா..ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா...
கவுண்டர்: எல்லாரையும் வாட்டி எடுக்காம விட மாட்டீரு..அப்படிதானே?
குஜை: அண்ணா எகத்தாளம் பேசாதீங்ணா
கவுண்டர்: சரி நீயே பேசு
குஜை: சத்தத்தின் சத்தமே என் சனியன் குடன்பிறப்பே...
கவுண்டர்: ஐயோ முடியலடா சாமீ
குஜை : என் கட்சி ஆட்சிக்கு வர அணிலாக உதவினோம்.
கவுண்டர்: அணிலா? பெருச்சாளியா? என போக போகத்தான் தெரியும்.
குஜை: அம்மா கோபாகிட்ட பேசிகிட்டிருந்தேன்.ஒரு கொழந்த என்கிட்டே வந்து விளையாடிச்சு.அதன் தாய் அந்த குழந்தைக்கு பேரு வெக்க சொன்னாங்கமா..
கவுண்டர்: காது குத்துன புள்ளைக்கு இன்னும் பேரு வெக்கலியாம்..இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்டே நடக்காது மகனே
குஜை மைன்ட் வாய்சில் :என்ன பேசுனாலும் ரவுண்ட் கட்டுறாரே...
குஜை: இப்படிதான் பண்ணா பசாரே உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகிட்டேன்.
கவுண்டர்: ஆமா பார்லிமென்ட் எலெக்ஷன் வருதில்ல?எதையாவது செஞ்சாதானே..சரி வேணாம் நா ஏதாவது சொல்ல போய் ரகளையாகிடும்.
குஜை: போர் உச்சத்தில் இருந்தப்போ ராஜபக்சேவ கண்டிச்சு ஒரு லட்சம் தந்தி அனுப்பினார்கள்  என் ரசிகர்கள்.மத்திய அரசு மிரண்டது.
கவுண்டர்: போதும் நிறுத்திகிங்க.இனிமேலும் தந்தி அடிக்க பேப்பர் இல்லைன்னு சொல்லிட்டாங்களா?
குஜை: அண்ணா நக்கல் பண்ணாதீங்க்னா..இப்படிதான் எறா படத்தில் தமிழக் மீனவன் பத்தி ஒரு மெசேஜ் வச்சிருந்தேன்.படம்தான் ஓடாம போய்டுச்சு.
கவுண்டர்: மக்கள் உஷாராகிட்டாங்க...அதான்
குஜை: அடுத்து கலைவா படத்திலும் இப்படி ஒரு மெசேஜ் வைக்கலாமான்னு இயக்குனர் குஜை, பஸ்.ஏ.பந்த்ரசேகர் ஆகியோரிடம் விவாதித்து கொண்டிருந்தேன்.
கவுண்டர்: நடுவுல கரண்ட் போனதால இங்க வந்துட்டீங்களா?
ஆளை விடுங்க என எஸ்கேப் ஆகிறார் குஜை.
********************************************************************************
அடுத்து கார்யா வருகிறார்
கார்யா: அன்னா(என்னா) மச்சி அல்லாரும் நல்லா இர்கீங்களா?
கவுண்டர்: டேய் நீ என்ன பாஷை பேசுற?அத சொல்லு மொதல்ல..
கார்யா: அன்னா(என்னா) கவுண்டர்ணே நா டமில் தான் பேசுறேன்.
கவுண்டர்: நல்ல வேலை இதையெல்லாம் கேட்க பாரதி உயிரோட இல்ல
கார்யா: பாரதியா?அண்ணே யார்னேஅந்த பிகரு?என்னோட அடுத்த படத்தில் அந்த பிகரை வச்சு லிப்லாக் சீன் எடுத்துடலாம்
கவுண்டர்: ஒனக்கு சுட்டு போட்டாலும் நடிக்க வராது.தமிழும் பேச வரல.அதை பத்தியெல்லாம் ஒனக்கு கவலை இல்ல.எந்த பிகருக்கு லிப் லாக் கொடுக்கலாம்.யாரோட கடலை போடலாம் இதான் உனக்கு முக்கியம்.வெளங்கிடும் தமிழ் சினிமா
கார்யா: நாம பன் போற போரட்டம் ஒல்கத்தையே ஒலுக்கும்.
கவுண்டர்: அய்யய்யோ ரீல் அந்து போச்சுடா சாமீ ஆளை விடுங்க என தலை தெறிக்க  ஓடுகிறார்.

Friday, 8 February 2013

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் D1

அய்யா ஷாஜி எச விமர்சனம் என்ற பெயரில் சாருவையே மிஞ்சும் விதத்தில் அவ்வப்போது உளறி கொட்டி கொண்டிருந்தாலும் சில சமயம் உருப்படியான பதிவை எழுதுகிறார்..அது எப்பன்னா இசை தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது மட்டும்..ஏற்கெனவே ஜன.2009 ஆம் ஆண்டில் ஸ்பீக்கர்கள் பற்றி ஒரு நல்ல பதிவை எழுதினர்..அதன் பின் இம்மாத உயிர்மையில் "ஒலியா இசையா" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியுள்ளார்..அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம்தான் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது..இம்புட்டு நாளாக தெரியாம போய்டுச்சே என நினைத்தேன்..அது வினைல் ரெகார்ட் மூலம் கேட்கும் இசை ஆடியோ சிடியில் கேட்கும் தரத்தை விட உயர்ந்தது என்பதுதான்...இணையத்தில் இது குறித்து தேடிய போது அது உண்மைதான் என தெரிய வந்தது.ரிகார்ட் ப்ளேயரின் தரத்தில் ஆடியோ சிடியால் ஒலியை வழங்க முடியாது என்பது ஆச்சரியமான உண்மை 

http://jimmyred.hubpages.com/hub/Why-Vinyl-Records-Sound-Better-Than-CD

************************************************************************************
ஜெமோவை எங்கு பாத்தாலும் காறி துப்பனுமாம்...அய்யா சாரு சொல்றாரு..ஜெமோ தான் 1999 ஆண்டு முதல் எழுதிய அனைத்து பதிவுளையுமே இன்றும் அவரது தளத்தில் படிக்கலாம்..அவர் அதை டெலிட் செய்து விட்டு நான் எங்கே எப்போ எதை சொன்னேன்னு மழுப்பியதில்லை.ஆனா அய்யா சாரு இருக்காரே  யப்பா யப்பா...இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் கிளீன் ஸ்லேட் (நன்றி: டார்க் நைட் ரைசஸ்) ஆக்கிவிட்டு நான் எங்கே அப்படி சொன்னேன் ஆதாரம் காட்டுன்னு கேக்குற கில்லாடியாச்சே...இப்போ யார் முகத்தில் நியாயமாக காறி துப்பனும்னு தனியா சொல்லனுமா என்ன?
 
**********************************************************************************
 
டில்லி பாலியல் கொடுமை பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் முக்கியமான ஒன்றை பற்றி பேசாமல் விட்டுடாங்களோ என எண்ண வைக்கும் விஷயம் இது...அந்த குற்றம் நடந்தது ஒரு தனியார் பேருந்தில்.டில்லி அரசு தானே பேருந்து சேவையை நடத்த வக்கற்று உள்ளதா?தனியாரை ஊக்குவிப்பதற்கு இந்த துறைதான் கிடைத்ததா?ஒரு பேருந்தை சொந்தமா வச்சிருந்தா பேருந்து சேவை என்ற பெயரில் ரேப் கிட்னாப் என்று எது வேண்டுமானாலும் செய்யும் வாய்ப்பை அது ஏற்படுத்தாதா?சரி காங்கிரசு தனியாரின் கைக்கூலி..பிற காங்கிரசு அல்லாத மாநில அரசுகள் கஷ்டமோ நஷ்டமோ என அரசு பேருந்து சேவையை நடத்தி வருவதற்கும் மறைமுக முட்டுக்கட்டை போடும் விதமாக டீசல் விலையை பதினோரு ரூபாய் உயர்த்தி இருக்கிறீர்கள்...அப்போ பிறரும் இது போல தனியார் பேருந்து சேவையை அனுமதித்து குற்றங்களை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரசு அரசின் விருப்பமா?
***********************************************************************************
நோ கமண்ட்ஸ் 


Monday, 28 January 2013

1984(நாவல்)

                                             நாவலின் துவக்கமே இப்படி வின்ஸ்டன் ஸ்மித் என்பவன் விக்டரி மேன்ஷன் என்ற குடியிருப்பில் வசிக்கிறான்.மணி மதியம் ஒன்று என கடிகாரம் காட்டுகிறது தேதி பதினாலு ...தேதி உண்மையில் பதினாலுதானா? என்பதே அவனுக்கு சந்தேகமாக இருக்கிறது.ஏழாவது மாடியில் இருந்து கீழே இறங்குகிறான்..லிப்ட் என்றுமே உபயோகபடப்போவதில்லை என்று தெரிந்து ஆங்காங்கே இளைப்பாறி கொண்டு இறங்குகிறான்
அவன் இருப்பது ஒஷியானியா என்ற நாட்டில்
அங்கு அனைத்தும் பிக் பிரதர் தான்
என்கு பார்க்கினும் பிக் பிரதரின் போஸ்டர்கள் வானுயரத்துக்கு எந்த கோணத்தில் பார்த்தாலும் உங்களையே பார்ப்பது போல போஸ்டர்கள் நகரமெங்கும்.
BIG BROTHER IS WATCHING
YOU

கட்சியின்  கொள்கை
WAR IS PEACE
FREEDOM IS SLAVERY
IGNORANCE IS STRENGTH


அரசின் அதிகாரபூர்வ மொழி Newspeak(இது அவ்வப்போது மாற்றம் செய்யப்படும்.)
அரசில் நான்கு அமைச்சகம்
Ministry of Truth -Minitrue(Newspeak மொழியில்.இதில்தான் வின்ஸ்டன் வேலை செய்கிறான்)
Ministry of Plenty(Miniplenty)
Minstry of Love(Miniluv)
Minstry of Peace(Minipax)

மினிட்ரூவிற்கு செய்திகள் பொழுதுபோக்கு கல்வி கலை ஆகிய பொறுப்புகளை கவனிக்கும்
மினிப்லென்டி பொருளாதார விஷயங்கள்
மினிபேக்ஸ் போரை கவனிக்கும்
மினி லவ் சட்டம் ஒழுங்கு
இதென்னடா பேருக்கும் பொறுப்புக்கும் சம்மந்தம் இல்லைன்னு கேட்டா இது போல தான்அனைத்தும் ஓசியானியாவில் என்பதன் மூலம் பகடி செய்கிறார் ஆர்வெல்.
Thought police என்பவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள என்பதை டெலி ஸ்க்ரீன் அல்லது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மைக்ரோபொன் வழியாகவோ கண்டுபிடித்து அவர்கள் அரசுக்கு எதிராகவோ பிக் பிரதருக்கு எதிராகவோ மூச்சு விட்டாலும் காலி.அதன் பின் அவர்கள் என்னானார்கள் என்பது யாருக்கும் தெரியாது.மறைந்து போன அந்த நபரின் ஒரு சிறு தடயமோ நினைவு பொருளோ கூட மீதம் இருக்காது.அவன் எங்கே போனான்?என யாரேனும் கேட்டால் அவனும் காலி.ஆதலால் ஒருவனை ஒரு நாளில் காண வில்லை எனில் அந்த நாளில் மட்டும் லேசாக அது பற்றி பேசிவிட்டு மக்கள் மறந்து விட வேண்டும் அல்லது மறந்துவிட்டது போல நடித்ததாக வேண்டும்.

அவன் வசித்த பிளாட்டில் சுவரின் நான்கு பக்கமும் டெலி ஸ்க்ரீன்..அதாவது அது எப்படின்னா அது டிவி போல காட்சிகளை கட்டும் அதே நேரம் நீங்கள் என்ன செய்தாலும் அதுவும் பதிவாகும்(வெப் கேம் போல).நீங்கள் எழுப்பும் சிறு ஒலி கூட அதில் பதிவாகும்.அது கண்காணிக்கப்படும்.
தினமும் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் எழுப்பப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.வின்ஸ்டன் ஸ்மித் எழுந்து நிற்கிறான்..அம்மணமாக..காரணம் பைஜாமா ரேஷன்.தினம் காலையில் எழுந்த உடன் நுரையீரலையே பிழிந்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு இருமல்.
உடற்பயிற்சி சொல்லி கொடுப்பவர் எல்லாரும் குனிந்து தங்கள் பாதத்தை தொடுங்கள்..என்கிறார்.ஸ்மித்தால் முடியவில்லை....கமான் எனக்கு 39 வயது ஐம்பது வயதுக்குட்பட்ட அனைவரும் பாதத்தை தொடலாம்.ஆ!... அப்படிதான்..
பைஜாமா மட்டும் ரேஷன் அல்ல சக்கரை கிடையாது அதற்கு பதில் சேக்கரின்,காபி பொடி என்ற பெயரில் விக்டரி காப்பி என்ற ஒரு வஸ்து,சாக்லேட் ரேஷன்,என அனைத்துக்கும் கடுமையான ரேஷன்.
இதில் முக்கியமான விஷயம் Double think என்ற கோட்பாடு.
அது என்னவெனில் தேவைக்கேற்றார் போல பேச்சுகளை மாற்றி கொள்வது.மேலும் பெரியண்ணன் கொடுக்கும்குத்துமதிப்பான யூகங்கள் சரியாக இருந்தால் அவை பெரிதாக விளம்பரபடுத்தப்படும்(பெரியண்ணனின் தொலை நோக்குசிந்தனை பாரீர் என்பது போல) அதே அவரது யூகம் தவறாகவோ நேர்மாராகவோ போய்விட்டால் அவர் கொடுத்த யூகங்கள் அடங்கிய பத்திரிகை பத்திகள் தொலைக்காட்சி பேட்டிகள் வானொலி பேட்டிகள் அனைத்தும் சுவடில்லாமல் அழிக்கப்படும்.அதன்மூலம் பெரியண்ணன் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும் என்ற ஒரு மாயை உண்டாக்கப்பட்டு அதுவே நீடிக்கவைக்க படுகிறது.


 Hate speech என்று  தினம் இரண்டு நிமிடங்கள் காட்சிகள் காண்பிக்கப்படும்.அதில் துரோகிகள் எதிரிகள் ஆகியோர் கொல்லப்படுதல் மற்றும் மிக முக்கியமாக Emmanuel Goldstein என்ற நபர் பற்றி காண்பிக்கப்படும்.இவர் யார்?.இரண்டு நிமிட வெறுப்பு பேச்சுகளில் தவறாமல் இவர் பற்றி காண்பிக்கப்படும்.இந்த கோல்ட்ஸ்டீன் என்பவர் புரட்சி ஏற்படும் நாளில் இருந்தே கட்சியில் முக்கிய பங்காற்றியவர்.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரியண்ணனுக்கு  நிகரான செல்வாக்குடன் திகழ்ந்து பிறகு பெரியண்ணனுக்கு  எதிராக குரல் எழுப்பியதால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கோல்ட்ச்டீன் தலைமறைவாகிறார்(அல்லது அப்படி இருப்பதாக சொல்லபடுகிறது.)ஆனாலும் அவ்வப்போது துண்டு பிரசுரங்கள் புத்தகங்கள் வாயிலாக மக்கள் இடையே பெரியண்ணனுக்கு  எதிராக கலக்கம் செய்ய தூண்டியதாக கோல்ட்ச்டீன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கோல்ட்ச்டீன்  பேசுவதை கட்டும் போதே அனைவரும் நரம்பு புடைக்க வசை பாடுகிறார்கள்.அந்த கருப்பு முடி கொண்ட பெண்மணி ஒருபடி மேலே போய் புத்தகத்தை டெலிச்க்ரீன் மெல் வீசி எறிகிறார்,.
   கோல்ட்ஸ்டீனின் உருவம் விளக்கபடுகிறது.யூத முகம் உருண்டை கண்ணாடி ஆடு போன்ற தாடி மற்றும் ஆடு போன்ற குரல்...இந்த விளக்கம் யாரை குறிக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.Leon Trotsky தான் அவர்.

அந்த கருப்புமுடி கொண்ட பெண்ணை பார்க்கும் போதெல்லாம் ஸ்மித்துக்கு கடும் எரிச்சல் ஏற்படுகிறது.அவளை நிர்வாணமாக்கி உடலுறவு கொள்ளும்போது  climax இல்  கொன்று விட நினைக்கிறான்.
அப்புறம் ஒரு சமயத்தில் அவள் இவனிடம் ஒரு துண்டுசீட்டு கொடுக்க அதில் ஐ லவ் யூ என எழுதி இருக்கிறது.
பாழடைந்த ஒரு கடையின் மாடி பகுதியை ஸ்மித் வாடகைக்கு எடுக்கிறான்.அதில் அவனும் அவளும் குஷியாக இருக்கிறார்கள்.அவள் கடத்தப்பட்ட உண்மையான சர்க்ககரை காபி பொடி சாக்லேட்  என்று கொண்டு வந்து தருகிறாள்.இருவரும் அதை வாழ்நாளிலேயே காணாதது  போல அனைத்தையும்  சுவைக்கிரார்கள்.அந்த அறையில் டெலிச்க்ரீன் இல்லை என்ற குஷியில் நிம்மதியாக கிடைக்கும் நேரங்களில் வசிக்கிறார்கள்.
இப்படி செல்லும் போது திடீரென்றுஇருவரும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லபடுகிரார்கள்.கடுமையான சித்ரவதை உடல் ரீதியாக மற்றும்மன ரீதியாக.இது முழுமையாக முடிந்த பின் அவர்கள் வெளியே விடப்படுகிறார்கள்.பெரியண்ணன் பற்றிய துளி எதிர் சிந்தனை கூட அவர்கள் மனதில் எழாவண்ணம் இருக்கிறது அந்த ட்ரீட்மென்ட்.அப்படி ஏதேனும் ஒரு கணத்தில் அவர்கள் மனதில் அப்படி எதிர் சிந்தனை எழுமானால் அவர்கள் தலையில் பாய தயாராக இருக்கிறது குண்டு.


குழந்தைகள்  அனைவரும் பெற்றோரை கண்காணிப்பது அவர்கள் கடமை என சிறு வயதில் இருந்தே பயிற்றுவித்தது கட்சி.(கல்வி என்பதே பெரியண்ணன் சொல்வதை படிப்பது மட்டுமே. அவர் என்ன சொல்கிறாரோ அதுவே வரலாறு அதுவே பூகோளம்.உலகம் தட்டை என்றோ உலகில் ஓசியானியா மட்டுமே இருக்கிறது என்றோ சொன்னால் கூட அதை நம்பித்தான் ஆக வேண்டும்)
பெற்றோர் யாரேனும் பெரியண்ணனுக்கு எதிராக பேசினாலோ அல்லது கட்சிக்கு எதிராக சதி செய்ய முயல்வதாகவோ அவர்கள் பிள்ளைகளுக்கு தெரிய வந்தால் பிள்ளைகள் தயங்காமல் தாட் போலீசிடம் பிடித்து கொடுத்து விடுவார்கள்.அப்பால அந்த பெற்றோர்கள் evaporate ஆகி விடுவர்.



சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சி அல்ல
சர்வாதிகாரத்தை அடையவே புரட்சி


 ஸ்மித் சித்ரவதை செய்யப்படும் நேரத்தில் ஒ ப்ரைன் பேசும்  சில முக்கிய வசனங்கள்::
பாஸிச  ஜெர்மனி மற்றும் கம்யூனிச சோவியத்தில் துரோகிகள் புல்லுருவிகள் ஆகியோர் சித்ரவதை செய்யபட்டோ அல்லது சுடபட்டோ கொல்லப்பட்டனர்.ஆனால் அவர்கள் இறந்து சில வருடங்களில்அவர்களது சமாதி ஒரு நினைவிடமாகவும் அவர்கள் அமரராகவும் ஏன் தலைவனாகவும் போற்றப்படுவதேன்?
ஏனெனில் அவர்கள் சாகும் கடைசி நொடி வரையில் தாங்கள் முரண்பட்ட கட்சி கொள்கைகளை மனதளவில் சிந்தனை அளவில் ஆத்மாவின் அடி ஆழத்தின் வரை எதிர்த்தே செத்திருக்கிறார்கள்.
அவர்களை சித்ரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தும் பொய் என பிற்காலங்களில் மக்களுக்கு தெரிந்துவிடுவதற்கு இதுவும் ஒரு காரணம்,.
அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம்.இறந்தவர்கள் எங்கள் கட்சிக்கு எதிராக வர அனுமதிக்க மாட்டோம்.அதனால் தான் நாங்கள பின்பற்றும் முறை வேறானது.உடல் ரீதியான சித்ரவதைகளை கூட சில மனிதர்கள் பொறுத்து கொண்டிருக்கிறார்கள்..ஆனால் எங்கள் வழிமுறை அனைவரையும் மனதின் ஆத்மாவின் அடி ஆழம வரை சலவை செய்து எங்கள் கொள்கைகளை நிரப்பிய பிறகே அவர்களை கொள்கிறோம்.இதனால் அவர்கள் இறந்த பின் ஒருவரும் சீண்ட மாட்டர்.

மனிதன்  என்பவன் தனியாக இயங்கும் போது தோல்விகளுக்கு ஆட்படுகிறான்...அதே அவன் கட்சி என்னும் அமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும்போது என்றுமே அவனுக்கு வெற்றி


வின்ஸ்டன் ஸ்மித் கேட்கிறான் : மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகம் இருந்ததே?
ஓ ப்ரையன் : இந்த உலகின் இருப்பே மனித மனத்தின் உணர்வில்தானே? மனிதன் இல்லாத போது உலகம் இருந்தா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை

இது சோவியத்தை மட்டும் குறிப்பதல்ல...இரண்டாம் உலக போரால் சீரழிந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த ரேஷன் முறை இங்கிலாந்து அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இருந்தது.இவ்விருநாடுகளும் கூட இதே அளவு சீரழிந்து அழுக்கடைந்து இருந்தது.ஆர்வெல் இதை மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
மேலும் இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலக கட்டுப்பாடு காலம் காலமாக வைத்துகொண்டிருந்த இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்காவுக்கு மாறுகிறது..காரணம ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகள்.மேலும் பெரியண்ணன் மனப்பாங்கு என்ற சொல்லாடல் வந்ததே இந்த நாவலால்தான்.இப்படியாக செல்கிறது இந்த நாவல்.




Thursday, 18 October 2012

Godmother An Italian Mafioso ஒரு கற்பனை

இங்கு  எழுதப்பட்ட அனைத்தும் கற்பனையே.... வெறும் நகைச்சுவைக்காக...
 *******************************************************************************
இடம்: பானியா பூந்தி இல்லம்.
வெளியில் பண்ணா பசாரே பாந்தி பஜனை செய்து கொண்டே உண்ணா விரதம் இருக்க அதை கண்டுகொள்ளாமல் மக்கள் உள்ளும் வெளியும் வந்து செல்கிறார்கள்.
பானியா அலுவலக அறை
கபாமா: ஐ பிலீவ்ட் இன் போங்கிரஸ்.....கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு அனுமதிக்கப்படாமல் தடைபட்டபோது உண்மை குடிமகன் போல நீதிமன்றம் சென்றேன் ஒன்றும் நடக்கவில்லை.இனி நான் என்ன செய்வேன்...அழுகிறார்...
பானியா சைகை மூலம் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்க சொல்கிறார் 
தண்ணீரை விழுங்கி  விட்டு தொடர்கிறார்...
கபாமா: நானும் கல்லறை வரத்தகத்தில் இருக்கும் மொதலாளிகளிடம் கை நீட்டி கமிஷன் வாங்கிட்டேன்..இப்போ அவர்கள் என் கழுத்தில் துண்டை இறுக்குகிறார்கள்.நீங்கதான் உதவணும் மேம்...
பானியா: நீங்கள் முதலில் நீதிமன்றம் சென்றீர்கள் என்றால் இங்கு ஏன் வர வேண்டும்?
கபாமா: அது வந்து....(பானியா கையமர்த்துகிறார்)
பானியா: தவிர என்னை மேம் என்று அழைக்கிறீர்கள்...காட்மதர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம கூட உங்களுக்கு எழவில்லையே...
கபாமா: விழிக்கிறார்...சாரி மேம் ...ஓ...சாரி காட்மதர்.
பானியா: ம்....சரி நீங்க போங்க நான் பார்த்துகொள்கிறேன்
கபாமா வெளியேறுகிறார்....
பானியா தனது consigliere பகமது குட்டேலை அழைக்கிறார்...
பானியா: இந்த வேலையை சிவகங்கை சீமானிடம்....வேண்டாம் மைக் மோகனிடம் கொடுங்கள்.மைக் மோகன் எங்கே வர சொல்லுங்கள்...

********************************************************************************
இடம்: மைக் மோகன் ஒபீசு.
கபாமா அங்கு வர போவதாக தகவல் வந்ததும் பதட்டமடைகிறார் மைக்..
கபாமா உள்ளே வர மைக் மோகனை நாலு பேர் தூக்கி கொண்டு வருகிறார்கள்...
ஓ ஓம் நமோ கபாமாய நமஹ...
இந்தியாவை மட்டும் கண்டால் அமேரிக்கா தெரியாது 
அமெரிக்காவை மட்டும் கண்டால் உலகமே தெரியுது 
பஞ்ச அக்ஷரம் (Kabama) ஏற்கும் நெஞ்சம் 
வேறு எந்த அக்ஷரத்தையும் ஏற்காது.
கபாமா என்ட்ரி கபாமா: இன்னா  மேன் இது?
மைக்மோகன் :அடியேன் அமெரிக்கதாசன்.
மைக்:வாங்க எசமான்
கபாமா: இன்னா மேன் எதுக்கு இந்த அமர்க்களம்?
எசமான் வரதா இருந்தா என்ன வேணும்னா செய்ய தயார்.
கபாமா: கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு சம்மந்தமா உங்களை பார்க்க சொன்னார்கள் காட்மதர்.
மைக்: காட்மதர் சொன்னா மறு பேச்சு ஏது? நான் முடிச்சு கொடுக்கிறேன்.
சிலர் வீட்டு வெளியில் பண்ணிய முதலீட்டை தடை செய் என போராடுகின்றனர்.
கபாமா: இன்னா மேன் உங்க கூட்டணி வாபஸ் வாங்கிட்டா ஆட்சி கவுந்துடும்னு சொல்றாங்க.
மைக்: அதெல்லாம் இல்லை எசமான் பாயாவதி மற்றும் கலாயம் போன்ற அடிமைகள் சிக்கி இருக்கும் போது நமக்கென்ன கவலை?நீங்க போங்க நான் பார்த்துகிரேன்.
*********************************************************************************
இடம்: பானியா அலுவலகம்.
மைக் மோகனை வர சொல்லி இருக்கிறார் காட்மாதர்
குழந்தை கூகுள் கிலுகிலுப்பை வைத்துக்கொண்டு கீழே விளையாடி கொண்டிருக்கிறான்
மைக் மோகன அவசரமாக உள்ளே நுழைய முயலும் பொது கூகுள் மைக்கின் பேண்டை பிடித்து இழுக்கிறான்..

மைக்:அரே இன்னா சோட்டா காட்பாதர்?
கூகுள்:வெல்யாடு வெல்யாடு
மைக்: அரே விளையாட இது நேரமில்லே..
தரையில் உருண்டு அழுகிறான்
மைக்: இவனே நமக்கு உலை வச்சிடுவான் அது நிச்சயம்.விளையாடுகிறார்.
பத்து நிமிடங்கள் ஆகி விடுகிறது.
மைக்: அரே பத்து நிமிஷம் ஆகிபோச்சு..காட்மதர் லெப்ட் அண்ட் ரைட் வான்குவாங்கோ என ஓடுகிறார்
கூகுள் தரையில் உருண்டு சிரிக்கிறான் 
பானியா: இன்னா மேன் லேட
மைக்: அது வந்து கூகுள்..
பானியா: ஓ கமான் எதற்கெடுத்தாலும் கூகுளை குறை சொல்வது பழக்கமாகிடுச்சு. நல்லதுக்கில்ல.
சரி கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு அனுமதிக்கும் விஷயமா  கபாமா வந்தாரா?
மைக்: வந்தார் காட்மதர்.
பானியா: சரி ஆக வேண்டியது பாருங்க ஏதாவது உதவி வேணும்னா ககமது குட்டேலை கேளுங்க
மைக்: அது வந்து ஆதரவு வாபஸ்னு சாயாவதியும் கலாயமும் மிரட்டுறாங்க
பானியா: சரி அதுக்கு போங்க்ராஸ்  பீரோவை வச்சி பிரச்னையை முடிச்சிடலாம்.

குறுக்கே பல்மான் பர்ஷித் அரிவாளுடன் குறுக்கே மிரட்டியபடி செல்கிறார்...டாய்ய் கீஷிடுவேன் ....பஜ்ரிவால் பம்மிகொண்டே ஒளிந்து கொள்கிறார்.
பானியா: பல்மான் என்ன இதெல்லாம்?
பல்மான்:காட்மதர்.... அது.... வந்து.... ஒருத்தன் எனது  குடும்ப விவகாரங்களை அம்பலபடுத்துகிறான்.அதான்
பானியா: அதுக்கு இப்படிதான் பொது இடத்தில் நடந்து கொள்வீர்களா?சத்தமில்லாமல் பிரச்னையை முடிக்க என்னிக்குதான் கத்துக்க போறீங்களோ..
காபட் பதாரா வருகிறார் 
காபட் பதாரா:காட்மதர் பீ எல் எப் விவகாரம் பற்றி பஜ்ரிவால் பிரச்னையை கிளப்புகிறார்.
பானியா: தனது consigliere ககமதுவை பார்த்து யார்அந்த பஜ்ரிவால்?
ககமது: காட்மதர் அவர்தான் உங்களது  குடும்ப விவகாரங்களை தினம் ஒன்றாக நாறடிக்கிறார்.
பானியா: நல்லதுக்கில்ல.பக்விஜய் பங்கைவர சொல்லுங்கள்.
பக்விஜய் வருகிறார்.
பக்விஜய்: காட்மதர் அவர்களுக்கு எனதுவணக்கம்.
பானியா: இந்த  பஜ்ரிவால் ரொம்ப பிரச்சனை செய்கிறார்.
பக்விஜய்: கவலை படாதீங்க.சென்ற வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி லாண்டரி பில்லு பத்து ரூவா பாக்கி,1978 இல் ஒக்டோபர் ஐந்தில் ஒரு ரூபாய் டீ கடை பாக்கி, 1966 இல் ரயிலில் வித்தவுட்டில் வந்தபோது எடுத்த படம் எல்லாம் இன்னிக்கே ப்றேச்சுக்கு கொடுத்துடுரேன்.
பானியா: குட ஜாப் யூ கேன் கோ
பக்விஜய்: அச்சா காட்மதர்ஜி.

Thursday, 11 October 2012

தொடர் மின்வெட்டு நடிகர்களின் ரியாக்சன்(ஒரு கற்பனை)-பாகம் 2

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விடுபட்ட நடிகர்கள்இரண்டாம் பாகத்தில்.
முதலில் விஜய்:
நமது நிருபர் அவரை சந்திக்க செல்லும்போது ஐரோப்பாவில்  ஷூட்டிங்கில் இருக்கிறார்'நீ அடிச்சா அடி விழும் நான் அடிச்சா இடி விழும் என்று யாரையோ மிரட்டி கொண்டிருந்தார்...அருகில் சென்றோம்


"அண்ணா என்னங்க்னா?"
இந்த  மின்வெட்டு பத்தி உங்கள் கருத்து?
அண்ணா வேனாக்னா பன் பிக்சர்ஸ் மிரட்டியதால் சென்ற ஆட்சியில் எதிர் கட்சிக்காக சூலாயுதம் படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசிட்டேனுங்க்னா...இப்போ இவுன்களை எதிர்த்து பேச என்னால முடியாயதுங்கா நீங்க கெளம்புங்க...
என்று சொல்ல நமது நிருபரே எழுதிய வசனம் " மின்சாரத்தை நிருத்தனும்னு ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அவுங்க பேச்சை அவுங்களே கேக்க மாட்டாங்க"

விஜயகாந்த்:
இருளில் அவரது திருமண மண்டபம்.கேப்டன் பிரபாகரன் க்ளைமாக்ஸ் போல எல்லாரும் தலையில் ஒரு பிளாஷ் லைட் கட்டி கொண்டு நிற்க தனது உதவியாளர் ஒருவரை வெளுத்து கொண்டிருந்தார் "டேய்...ஒன்ன உள்ள தூக்கி போட்டு அடிச்சா  உடுமலைபேட்டைல இருந்து கூட போன் வராதுடா...ஆங்"
நமது நிருபர் உள்ளே நுழைய "டேய் யாருடா நீ?உளவு பாக்க வந்தியா" என நாக்கை மடித்து முஷ்டியை உயர்த்துகிறார்.
ஐயோ இல்ல சார் நான் நிருபர்
ம்...அதை மொதல்லையே சொல்ல கூடாதா அடி வாங்கியிருப்ப நீ...
சரி என்ன விஷயம்?
இந்த மின்வெட்டு பத்தி உங்கள் கருத்து?

டேய்...தமிழ்நாட்டுல மொத்தம் 39 மின் உற்பத்தி நிலையம் இருக்குடா அதில் 38 பல வருசமா பாழடைஞ்சு போய் சினிமா க்ளைமாக்ஸ் எடுத்துகினு இருக்காங்க.மீதி இருக்கும் ஒரு மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவாட் உற்பத்தி பண்ணுது.அதில் 299 மெகாவாட் சென்னைக்கு மீதி ஒரு மெகாவாட் பிற மாவட்டங்களுக்கு...தமிழ்நாட்டில் மொத்தம் 12587 டிரான்ஸ்பாமர் இருக்குடா அப்புறம் 65377 மின் கம்பங்கள் இருக்குடா அதில்...
நிருபர் தொடர் எண்ணிக்கை புள்ளி விவரங்களால் குழம்பி வெளியேறுகிறார்.

சரத்குமார்:
"டேய் என்றா பம்முற?விசயத்த சொல்லு"
அய்யா நிலத்துக்கு தண்ணி பாய்ச்ச பம்புசெட்டுக்கு கரண்டு வரலீங்கையா...
"என்றா அதுக்கு என்னடா பண்ண சொல்ற?ஒம்பாட்டன் முப்பாட்டன் எல்லாம் எந்த பம்பு செட்டடா நம்புனான்?எகத்தாளம் வேறையா?"


திடீரென்று செல்போன் ஒலிக்க பேசுகிறார்...
ஹலோ ஜீ நீங்களா?(இடுப்பில் துண்டை கட்டி கொண்டு பவ்யமாக பேச தொடர்கிறார்)
ஆமா ஜி சிலர் கேள்வி கேக்குறாங்க 
ஓகே ஜி 
இல்லை ஜி நானே சமாளிச்சுகுவேன்.முடியலைன்னா சொல்றேன் ஜி..
ஓகே ஜி 
என்றா எகத்தாளம் பேசுன அத்தன போரையும் ஊரை விட்டு தள்ளி வைக்குரேன் அவனுங்களுக்கு ஆரும் தண்ணி குடுக்க கூடாது ஆரும் செல்போன் சார்ஜ் பண்ணி தர கூடாது ஆரும் மின்சாரம் தர கூடாது
(மக்கள் முனுமுனுத்துகொண்டே இப்போ மட்டும் என்ன வாழுதாம்? என்று கலைகின்றனர்).

சந்தானம்:
ஊருக்குள்ள பத்து பதினஞ்சு இன்வர்டர் வச்சிருக்குறவனெல்லாம் நல்லா இருக்கான் ஆனா   ஒரே ஒரு இன்வர்டரை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே...அய்யூ...அய்யூ...அயூ


வடிவேல்:
பாவம்யா தமிழ்நாட்டு மக்க
எம்புட்டுஅடிச்சாலும் தான்குராய்ங்க இவிங்க ரொம்ப நல்லவங்கே...
ஆனா  என்னால எம்புட்டு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியுது?
என்ன உட்டுடுங்க சாமீ...என்று மூத்திர சந்துக்கு ஓடுகிறார்
ஹலோ போன வாரம் அடிக்க வரதா சொன்னீங்க...




Wednesday, 10 October 2012

தொடர் மின்வெட்டு நடிகர்களின் ரியாக்சன்(ஒரு கற்பனை)

ஒரு நாளைக்கு நாப்பத்தெட்டு மணி நேர மின்வெட்டு...பெட்ரோமாக்ஸ் லைட் வாங்கினால் இரண்டு தீப்பந்தங்கள் கொடுக்கும் காலம்.தொடர் மின்வெட்டினால் நடிகர்கள் என்னாகிறார்கள்?அவர்கள் ரியாக்சன் என்ன?ஒரு கற்பனை:
முதலில் ரஜினிகாந்த்:

கண்ணா இனி நீ ஒரு நாளைக்கு அம்பது மணி நேரம் கூட நிறுத்திக்க...எனக்கு கவலை இல்லை..ஆ...பாபாஜிகிட்ட போறேன் இமயமலைக்கு.... ஜென்மத்துக்கு இங்கே திரும்பி வர மாட்டேன்...ஆ...(துண்டை போர்த்தி கொண்டு போகிறார்...விடுகதையா இந்த வாழ்கை பாடல் பின்னணியில் ஒலிக்கிறது)
(மனதிற்குள் "ஆண்டவா தமிழ்நாட்டிடம் இருந்து உன்னை நீயே காப்பாற்றி கொள்")

கமல்ஹாசன்:
எல்லாம் மின்சார மாயம் என்று சொன்னீர்களே
ஆனால் என் வாழ்வில் எல்லாம் பயமயம்
மிக்சியில் துவையல் அரைக்கும் போது  மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
கிரைண்டரில் மாவாட்டும்போது மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
வாசிங் மிஷினில் துணி வெளுக்கும் போது மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
டிவியில் படம் பார்க்கலாம் என்றால் மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
எல்லாத்துக்கும் மேலாக கழுவ தண்ணீராவது வேண்டுமே
தண்ணீர் மோட்டார் போட்டால் மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
மின்சாரம்...மின்சாரம்...மின்சாரம் ரொம்ப அசிங்கம்...
அபிராமி தான் அழகு நான் போறேன் கொடைகானல் குகைக்கு


விக்ரம்:
வசனம் எதுவும் இல்லை ஒரு ரியாக்சன் கொடுத்து விட்டு சூரிய ஒளி பின்னணியில் மறைகிறார்

 பரத்:
ஞா ஞா ஞா ஞா ஞா....என்று தலையில் அடித்து கொண்டு ரோட்டில் திரிகிறார்
அஜித்:
அய்யா இது மொத்தமும் தமிழ்நாடு
ஏதோ சில கிறுக்கு பயபுள்ளைக ஏதோ அது பேரென்ன (பக்கத்தில் ஹாஜா செரிப் சொல்கிறார் "கரண்ட்") ஆ கரண்ட் அந்த கருமாந்திரம் எங்க ஊருக்கு வரும்னு சொல்லி பல கோடி ஒதுக்கி இந்த கம்பியெல்லாம் மேல கட்டுனாங்க..ஆனா வரலியே...வவுறு எரியுதுலே...


எம்  ஆர் ராதா :
 அமெரிக்காவுல ஐ பேட் கண்டுபிடிக்குறான்
ஜப்பானில் அசிமோ கண்டுபிடிக்குறான்
ரசியாகாரன் ராக்கெட் உடுறான்
சைனாகாரன் நீர்மூழ்கி கப்பல் உடுறான்
ஆனால் poor fellows தமிழ்நாட்டுக்காரன்
தீப்பந்ததுக்கு எண்ணை விடுறான்..
நீங்க திருந்த மாட்டீங்க
அடியே காந்தா உனக்கு ஒரு குட்பை தமிழ்நாட்டுக்கு ஒரு குட்பை
ஐ ஆம் கோயிங் டூ அமெரிக்கா..
டேய் யார் மேன் அங்க பெட்டி படுக்கையை எடுத்து வை


ரகுவரன்:
வீட்டிற்குள் வருகிறார்..வியர்க்க விறுவிறுக்க பேன் சுவிட்சை போடுகிறார் ....ஆனந்த்பாபு "கரண்ட் இல்லை " என்று சொல்கிறார் ...
டென்சன் ஆகி " ஐ நோ ஐநோ ஐநோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ" என மின்சார மீட்டரை பிடுங்கி எறிகிறார்..ஐ நோ ஐ நோ...(தொடர்கிறது)

தலைவர் கவுண்டர்:
அனைத்து மின்சாதனங்களையும் தெருவில் எறிகிறார் "இது ஒரு எழவு இந்த எழவாலதான் எல்லா எழவும்" நாராயணா என்னால முடியலடா...தன்ராஜ் கிட்ட சொல்லி சந்திர மண்டலத்துக்கு டிக்கட் போட சொல்லு...ஆள உடுங்கடா சாமீ

Monday, 17 September 2012

நிலக்கடலை ஊழல சில்லறை பிரச்சனை டீசல் விலை...மைக் மோகன் எக்ஸ்க்ளூசிவ்

இது முழுக்க முழுக்க கற்பனையே...எதனா எடக்கு மடக்கா உங்களுக்கு தோன்றியதென்றால் கம்பெனி பொறுப்பாகாது.
இடம் மைக் மோகன் அலுவலகம்....
இடம் பெறுவோர்...சிவகங்கை சீமான்,மைக் மோகன்,பானியா,பசில்குமார் பண்டே...மற்றும் நிருபர்கள்...
நிருபர் 1: நிலக்கடலை ஊழல குறித்து என்ன அய்யா சொல்கிறீர்கள்?
மைக் மோகன்: இன்னா மேன் நிலக்கடலை ஊழல?இன்னா சொல்லுது?
சிவகங்கை சீமான் குறுக்கிட்டு: நிலக்கடலையே முதலில் மண்ணில் இருந்து எடுக்கப்படவில்லை அப்புறம் எப்படி ஊழல?
நிருபர் 2: உங்க காலுக்கு கீழ நிலக்கடலை தோல் நிறைய கிடக்கிறதே?
சி.சீமான்: அது எதிர்கட்சிகள் செய்த சதி..இதற்கு முன்பே வந்து இங்கு தோல்களை உரித்து போட்டுவிட்டு சென்றிருக்கின்றன....
(திடீரென்று பானியா என்ட்ரி)
மைக்.மோகன்: ஆவோஜி ஆவோ..பைட்டியே...கிசு கிசு குரலில் பானியாஜி கேள்வி என்ற பேரில் என்னை குடைகிறார்கள் மேம சாப்..
பானியா: சமாளிங்க பின்ன எதுக்கு உங்களை இந்த பதவியில் உட்கார வைத்துள்ளோம்?
தனது மகன் கூகுளை பார்த்து செல்லம் இன்னொரு மிட்டாய் வேணுமா?உடம்புக்கு ஆவாது செல்லம..
கூகுள்: மம்மி என்கு மிட்டாய் வேணும்...என கதறி அழுகிறான்.
நிருபர் 3: சார் என் கேள்விக்கு பதில் சொல்லலியே....நிலக்கடலை ஊழல நடக்கவில்லை என்றால் ஏன் சில நிறுவனங்கள் ரெய்டு செய்யப்பட்டன?
மைக் மோகன்: இன்னா மேன் அதுல புதுசா இருக்குது?வழக்கமான ரெய்டுதான்...
நிருபர் 1: சில நிறுவனங்களின் உரிமை பரறிக்கப்பட்டுள்ளதே?
மைக் மோகன்: மனதிற்குள்...எந்த பால் போட்டாலும் கோல் போட்டுடுரானே...உஸ்...இப்பவே கண்ண கட்டுதே..அது அது அது வந்து...
பசில்குமார் குறுக்கிட்டு: இந்த ஊழலையும் காபர்ஸ் ஊழல மாதிரி மக்கள் மறந்து விடுவர்...
மக்கள்: உங்க கட்சியையும் மக்கள் சீக்கிரம் மறந்து விடுவார்கள்..பீ கேர்புல் நான் உங்களை  சொன்னேன்..
நிருபர் : டீசல் விலை உயர்வு குறித்து?
மைக் மோகன்: அது ஏத்தித்தான் ஆகணும் இந்தியா வளர்ச்சி அடிய வேண்டாமா?
நிருபர்: யாருடைய வளர்ச்சி?மக்களின் வளர்ச்சியா காற்பறேட்டுகளின் வளர்ச்சியா?
மைக் மோகன்: மக்கள் பத்தி யார் மேன் கவல படுது?என்கி காற்பறேட்டுகள்தான் முக்கியம்.
நிருபர்: மக்கள்தானே உங்களை இங்கே உட்கார வைத்துள்ளார்கள்??
மைக்: மக்கள் இல்லே மேன் போனியாஜிதான் என்னை உட்கார வச்சிருகாங்கோ..
திடீரென்று  குழந்தை கூகுள் அழ ஆரம்பிக்கிறான்..
மம்மி என்கு அந்த நாக்காலி வேணும்(மைக் மோகனின் சீட்டை காட்டுகிறான்)
பானியாஜி: அழாத செல்லம சீக்கிரமே அது உனக்கு வரும் என்று சொல்லிவிட்டு கிலு கிலுப்பையை கூகுள் கையில் கொடுக்கிறார்
மைக்: பீதியில் வேர்த்து விறுவிறுத்து ஒரு மிடறு தண்ணீரை விழுங்குகிறார்.
நிருபர்: சில்லறை விற்பனையை வெளிநாட்டுக்கு அனுமதிக்கிறீர்களே?இந்தியாவின் சுய மரியாதை என்னாவது?
மைக்: இன்னா மேன் சுயமர்வாதி?எசமான் அமேரிக்கா இன்னா சொல்தோ அதான் இங்க நட்க்கும்...கபாமா சில்லறை வியாபாரத்தை தொறந்து வுட்லேன்னு போனில் நைட்டு தினமும் டோஸ் விடுகிறார்.இன்னா மேன் நான் செய்யுது?
திடீர்ன்று  பாராயண சாமி  பாடன்குளத்தில் சீக்கிரமே மின் உற்பத்தி துவங்கும் என சொல்லிகொண்டே போகிறார்.
சி.சீமான்: The fiscal consolidation is below the threshold limit and  the fiscal deficit is above par ...என்று பழக்க தோஷத்தில் பேச ஆரம்பிக்க நிருபர்கள் ஓட்டமேடுக்கிறார்கள்
மைக் மோகன் மனதிற்குள்: இதை முதல்லியே இவர் பேசி இருக்கலாமே?நாம தப்பிச்சிருக்கலாம்..