Thursday, 15 September 2011

அண்ணாதுரையும் மருத்துவர் அய்யாவும்!!

அண்ணா(துரை)வின் பேட்டிகள் செம காமெடியா இருக்கும்!!ஐநா சபை போவோம் திராவிட நாடு பெறுவோம்!!நாலு படம் சென்சார் இல்லாம எடுக்க உடுங்க திராவிட நாடு பெற்று காட்டுகிறோம்!வடக்கே பகரா நங்கள்  தெற்கே சக்கரை பொங்கல்...யப்பா என்னால முடியல!இப்போ அண்ணாதுரை இருந்திருந்தா மருத்துவர் அய்யாவுக்கு செம போட்டியா இருந்திருப்பார்!!இவர்தான் 1967 இல ஆட்சிக்கு வந்தாரே.அப்போது சென்சார் இல்லாம நாலு படம் எடுத்து திராவிட நாடு வாங்கியிருகலாமே!!ஏன் செய்யவில்லை?
           இவரின் மேடை பேச்சுகளை படித்தால் நல்ல எதுகை மோனையுடன் நாலு பக்கங்கள் இருக்கும்.ஆனால் அதன் சாராம்சம் என்னான்னே யாருக்கும் விளங்காது!! ஐயோ ஐயோ!!

Saturday, 10 September 2011

நாகேஷும் தேசிய விருதும்

நாகேஷ் போன்ற ஒரு நடிகரை நாம் பார்க்க முடியாது!!ஆனால் அவருக்கு அரசு ஒரு அங்கீகாரமோ விருதோ கூட வழங்காமல் அவரை நோகடித்தே சாகடித்தது!!ஆனால் அரைவேக்காட்டு நடிகர்கள் தனுசு போன்றவர்களுக்கு உடனே தேசிய விருதுன்னா அந்த விருதின் நமபகதன்மையை குலைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!

Monday, 5 September 2011

அரசு கேபிளும் சமச்சீர் கல்வியும்

 அரசு கேபிளும் சமச்சீர் கல்வியும்---ரெண்டுத்துக்கும் என்னைய்யா சம்மந்தம்னு கேட்டீங்கன்னா ரெண்டும் ஒப்புக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதுதான்!!அரசு
அரசு கேபிள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமென்ன?நிதி சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன் செலுத்திய ஒற்றை ஆதிக்கம்.கேபிள் தொழில் செய்வோரை மிரட்டியது உள்ளிட்ட இன்ன பிற குற்றச்சாட்டுகள்.சரி அரசு கேபிள் ஆரம்பிச்சீங்க அது ஒழுங்கா இருக்கான்னா இதுக்கு பழைய கேபிளே  தேவல என புலம்பல் எழுந்ததுதான் மிச்சம்!!பின்ன ஜெயா+கலைஞர் குழும டி.விக்கள்  மட்டுமே தெரிகிறது(இதைதான் காமராஜர் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றாரோ?).ஆக என் முதுகை நீ சொறி உன் முதுகை நான் சொறிவேன் கதைதான்!!ஆட்சி மாறினால் நீ ஜெயா டி.வி குழுமத்தை நிறுத்தாதே வேறு எதை வேண்டுமானாலும் நிறுத்திகொள் என்பதுதான் இதில் சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி!!இதுதான் திராவிட அரசியல்!இதை நான் கண்டித்தால் உடனே மேலே ஏற வருகின்றனர்.
   மேலும் அரசு கேபிளின் நோக்கம் பொது எதிரி(மாறன் பிரதர்ஸ்) சன் குழுமத்தை ஒழிப்பதா என கேட்டால் அதையும் மறுக்க முடியாது!சன் குழுமம் இருட்டடிப்பு செய்யப்பட்டதில் ஜெயலிதா கருணாநிதி இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும் என்பதை மறுக்க இயலாது!மேலும் அரசின் நோக்கம் அரசுக்கு வருமானத்தை பெருக்குவதா அல்லது தனியார டிஷ் டி.வி(டி.டி.ஹெச்) வியாபாரத்தை பெருக்குவதற்கா  என சந்தேகம் எழுகிறது.ஏன்னா நாலு சேனல் மட்டுமே தெரியுது.இதுல 70   சேனல் தெரியுதுன்னு பத்திரிகைகள் எழுதுவது கேலிகூத்து!!இப்படி நாலு சேனலுக்கு 70     ரூவா வாங்குனா மக்கள் டிஷ டி.விக்கள்(இது பிராண்ட் நேம் இல்லை.பொதுவா டி.டி.ஹெச். ஐ சொல்றேன்) பக்கம் போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?அரசின் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தினால் நன்று!

Wednesday, 31 August 2011

பெரியாரின் கருப்பு சட்டை சீடர்களின் "மீசையில் மண் ஓட்டல" நாடகம்!!

கருப்பு சட்டைகள் சட்டமன்ற தீர்மானத்தை வரவேற்க கூட மனமில்லாது இதெல்லாம் மூழ்கி விடும் மண்குதிரை என உளறிகொண்டிருப்பது அவர்களின் பேதமையை காட்டுகிறதே ஒழிய யாரும் அதை கண்டுகொள்வதில்லை என்பது அவர்களுக்கு தெரிந்தாலும் அதை ஒத்துகொள்வதில்லை!!கீழ உழுந்தாலும் மீசையில் மண் ஓட்டல!!

Tuesday, 30 August 2011

தூக்கை ஆயுளாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்

பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனை தள்ளிவைப்பு.தூக்கை ஆயுளாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்(இந்த சுப.வீ கோஷ்டிய  காணோம்!!) சிதம்பரம் முகத்தில் கரி!!!சு.சாமி சோ வுக்கு இனிமேதான் இருக்கு(மர கழண்ட கேசுன்களை கொஞ்சம் நல்ல டாக்டராண்ட காட்டுன்கப்பா!!.ரெண்டு லூசும் அடிக்கும் லூட்டி தாங்கல!!)!!சிதம்பரம் மூலம் இந்த பிரச்னையை கொளுத்தி போட்டு ஆட்சியை கவிழ்க்க நினைத்த தமிலின தலிவருக்கு இப்படி ஓரு சறுக்கலா!!!!இது முடிவல்ல!!இனிமேல்தான் போராட்டத்தை மேற்கொண்டு முன்நகர்த்த வேண்டும்.
   சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்!!எப்படியோ நல்லது நடந்தால் சரி!

Monday, 29 August 2011

செங்கொடியின் தற்கொலை முட்டாள்தனமானது

யோவ மூணு பேரு உசுர காப்பது என்பதுதானே போராட்டத்துக்கான அச்சாணி?இப்படி மூணு பேரு உசுருக்கு பதில் ஓரு உசுரை குடுப்பது(செங்கொடியின் தற்கொலை) முட்டாள்தனமானது!!நேர்த்திகடன் என்று நாக்கை அறுத்து கொள்பவரை கண்டிக்கும் அதே "பகுத்தறிவு பேசும்"கட்சிகள்தான் இதை போஸ்டர் போட்டு ஆதரிக்கின்றனர்!!ஆராதிக்கின்றன!!எல்லா மனிதரும் சமம என்கிற தத்துவத்தையே உடைத்துபார்க்கிற விஷயம் இது!ஓரு உயிரை இன்னொரு உயிருக்கு மேலாக வைப்பதே அதீத உணர்ச்சியின்பால் வருவதுதான்!!இதை கண்டிக்கிறேன்!!எல்லாரும் கண்டிக்க வேண்டும்!!இல்லையெனில் இதை பின்பற்றி இன்னும் பலர் இதே வழியை பின்பற்றுவர்!

Tuesday, 9 August 2011

மன்மோகன் சிங்கம் !!