Saturday, 3 May 2025

ஊமை விழிகள்,உதயா & ஊடக அவியல் ஆளர்கள்!

 ஊமை விழிகள் படத்தை பார்த்த அந்த சிறுவன் மனதில் அப்படத்தின் ஒருவிஷயம் ஆழ்மனதில் பதிந்தது! பிற்காலத்தில் இயக்குனர் ஆன அந்த சிறுவன் அதை தன் படத்தில் அந்த விஷயத்தை மையமாக வைத்தான்! ( யோவ் கே.என்.சிவராமன் ஸ்டைல் எல்லாம் அவருக்குத்தான்.நீ சொந்த நடையில் எழுது - கும்மாங்கோ).

 எப்பேர்பட்ட பெரும்புள்ளியாக இருந்தாலும் அவர் செய்த தில்லாலங்கடி வேலையை அச்சு/காட்சி ஊடகம் மூலமாக அம்பலப்படுத்தினால் மக்கள் கொத்திதெழுந்து அந்த புள்ளியை சாய்ப்பார்கள்! 
 

 
 
இந்த utopian சிந்தனையைத்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அமல்படுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
  ஷைன் டாம் சாக்கோ கேரக்டர் நிஜத்தில் வாழ்ந்த ஒரு பெரும்புள்ளியை நினைவுபடுத்தும் விதத்தில் இருந்தாலும் அவரின்  விழுதுகள்  இதை எதிர்த்து போராடுகிறேன் பேர்வழி என்று  படத்திற்கு இலவச  பப்ளிசிட்டி கொடுக்காமல் விட்ட சாதுர்யத்தை வியக்கிறோம்!

 

இதுல தியேட்டரில் ஒரு duel வேறு! எழுபதுகளில் நடக்கும் கதை என்பதை உணர்த்த எல்லாருக்கும் பெரிய கிருதா ஒட்டப்பட்டுள்ளது! எஸ்ஜே.சூர்யா  கதைப்படி சத்யஜித்ரே உதவியாளர் என்று எங்கோ படித்த நியாபகம்.நல்லவேளை அந்த மகாகலைஞன் இந்தக்கொடுமைகளை பார்க்காமல் எப்போதோ போய்விட்டார்!
- அப்புறம் அந்த மக்களின் பெருங்கோபம் பற்றி ஒரு சம்பவம்:
 ஹைதராபாத்தில்  ஒரு பிரபல டிவி சீரியலில் நடித்தவர்கள் பங்குபெற்ற நிகழ்வு ஒன்று நடந்தபோது அந்த சீரியலில் வில்லனாக நடித்தவரை  அந்நிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பெண்மணி அவரை விடாது துரத்தி, அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் கிடைக்கும் தேடிப்பாருங்கள்! மக்களின் கோபம் எல்லாமே நியாயமானது& அது பெரும் சக்தி வாய்ந்தது(!)  என்ற வாதம் அங்கே அடிபட்டு போகிறது!மேலும் இத்தகைய மக்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளல் நன்று!
.
ஜிகர்தண்டா XX படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் தற்செயலாக டிவியில் பார்த்தபோது தோன்றியது! இதுல XXX வரும் என்று வேறு பீடிகை போட்டு பீதியை கிளப்பியுள்ளார்கள்!
(நல்லவேளை முழுப்படத்தையும் பார்த்திருந்தால் ரெண்டு வால்யூம் எழுதியிருப்ப! - கும்மாங்கோ)


*********************

இப்ப இதே வரிசையில் ஊடக அவியல் ஆளர்கள் எல்லாருமே அரசையே அசைத்துப்பார்க்க கூடியவர்கள் அது இதுவென்று ஏகப்பட்ட திரைப்படங்கள் உண்டு!இது எதுவுமே இல்லாமல் ஜாலியா எதார்த்தமாக ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் என்றால் அது உதயா(படத்த ரெண்டா நாளு பாத்து நொந்த கதையை சொல்லிடாத- கும்மாங்கோ) படத்தில் வரும் பிரமிட் நடராஜன் கேரக்டர் தான்!

 

   இதற்கு முன்பே கல்யாண வைபோகம் படத்தில் சுந்தரராஜன் இந்தமாதிரி ஒரு அஜால் குஜால் பத்திரிக்கையாளர் கேரக்டரில் உதவியாளர் படிக்கும் வாசகர் கேள்விகளுக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் காட்சி இருந்தாலும் அதைவிடவும் சிறந்தது இந்தப்படத்தின் காமெடி தான்!

    உதவியாளர் விவேக் வாசகர் கேள்விகளை ஒவ்வொன்றாக படிக்க கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நக்கலாக சிரித்தபடி பிரமிட் நடராஜன் பதிலளிக்கும் காட்சி அட்டகாசம்!

 
   உண்மையான ஊடக அவியல் ஆளர் சித்தரிப்பு என்றால் கண்டிப்பாக இந்த கேரக்டருக்கு விருது கொடுக்கலாம்!

No comments:

Post a Comment