ஊமை விழிகள் படத்தை பார்த்த அந்த சிறுவன் மனதில் அப்படத்தின் ஒருவிஷயம் ஆழ்மனதில் பதிந்தது! பிற்காலத்தில் இயக்குனர் ஆன அந்த சிறுவன் அதை தன் படத்தில் அந்த விஷயத்தை மையமாக வைத்தான்! ( யோவ் கே.என்.சிவராமன் ஸ்டைல் எல்லாம் அவருக்குத்தான்.நீ சொந்த நடையில் எழுது - கும்மாங்கோ).
இதுல தியேட்டரில் ஒரு duel வேறு! எழுபதுகளில் நடக்கும் கதை என்பதை உணர்த்த எல்லாருக்கும் பெரிய கிருதா ஒட்டப்பட்டுள்ளது! எஸ்ஜே.சூர்யா கதைப்படி சத்யஜித்ரே உதவியாளர் என்று எங்கோ படித்த நியாபகம்.நல்லவேளை அந்த மகாகலைஞன் இந்தக்கொடுமைகளை பார்க்காமல் எப்போதோ போய்விட்டார்!
- அப்புறம் அந்த மக்களின் பெருங்கோபம் பற்றி ஒரு சம்பவம்:
ஹைதராபாத்தில் ஒரு பிரபல டிவி சீரியலில் நடித்தவர்கள் பங்குபெற்ற நிகழ்வு ஒன்று நடந்தபோது அந்த சீரியலில் வில்லனாக நடித்தவரை அந்நிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பெண்மணி அவரை விடாது துரத்தி, அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் கிடைக்கும் தேடிப்பாருங்கள்! மக்களின் கோபம் எல்லாமே நியாயமானது& அது பெரும் சக்தி வாய்ந்தது(!) என்ற வாதம் அங்கே அடிபட்டு போகிறது!மேலும் இத்தகைய மக்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளல் நன்று!
.
ஜிகர்தண்டா XX படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் தற்செயலாக டிவியில் பார்த்தபோது தோன்றியது! இதுல XXX வரும் என்று வேறு பீடிகை போட்டு பீதியை கிளப்பியுள்ளார்கள்!
(நல்லவேளை முழுப்படத்தையும் பார்த்திருந்தால் ரெண்டு வால்யூம் எழுதியிருப்ப! - கும்மாங்கோ)
*********************
இதற்கு முன்பே கல்யாண வைபோகம் படத்தில் சுந்தரராஜன் இந்தமாதிரி ஒரு அஜால் குஜால் பத்திரிக்கையாளர் கேரக்டரில் உதவியாளர் படிக்கும் வாசகர் கேள்விகளுக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் காட்சி இருந்தாலும் அதைவிடவும் சிறந்தது இந்தப்படத்தின் காமெடி தான்!
No comments:
Post a Comment