Showing posts with label நடிகன். Show all posts
Showing posts with label நடிகன். Show all posts

Friday, 5 April 2019

அநீதிக்கதைகள்


                       படத்தில் மூன்று ட்ராக்கில்  மூன்று கதைகள்.படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மூன்றிலும் எதிர்பாராத திருப்பம்.ஆகா செம விறுவிறுப்பா போக போவுதுன்னு நினைச்சா அதற்குப்பின் நடப்பது வேறு.இந்த மாதிரி தொடர்ச்சியா மூன்று எதிர்பாராத ட்விஸ்ட் வச்சிட்டமே!தொடர்ந்து இந்தமாதிரி ட்விஸ்ட் வச்சா அப்புறம் பல்வேறு குறும்படங்களின் தொகுப்பாகிடும்.அதனால கொஞ்சம் இழுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரோ என்னவோ!

              அதற்கு பின் ஒவ்வொரு காட்சியையும் தேவைக்கும்  அதிகமான நீளத்திற்கு sustain பண்ணுகிறார்.அது எதுக்குன்னு புரியல!
               படம் நல்லாருக்கா இல்லையா? என்று பைனரியில் பதிலளிக்க முடியாத படங்களுள் இதுவும் ஒன்று.நன்றாக வந்திருக்கவேண்டிய படம் என்பதுமட்டும் உறுதியா சொல்லலாம்!.
    ஷில்பாவுக்கும் மகனுக்குமான அந்த பாச பிணைப்பு.”நானும் அம்மாவும் உன்னை ஏதாவது சொன்னமா?” என்று கேட்கும் அந்த சிறுவன்(ஆரண்ய காண்டத்திலும் இதுபோல ஒரு கெட்டிக்கார சிறுவன் உண்டு) தருணம்;அந்த சப்வேல ஷில்பாவும் (தான் இறைதூதர் என்ற நினைப்பில் வாழும்)அற்புதமும் தற்செயலா சந்தித்து பேசும் காட்சி என்று சில நல்ல தருணங்கள் நிச்சயம் உண்டு.

     ஆனால் இப்படி பல நல்ல தருணங்கள் நிரம்பிய படமாக  வந்திருக்க வேண்டியது. காட்சிகள் பல இழுவையாக இழுக்கப்பட்டதால் அதன் உன்னதத்தை வீரியத்தை இழந்து வெறுமனே பார்வையாளனால் கடந்துபோகும் தருணமாகிவிட்டது.உதாரணமாக முகிலன்-வேம்பு தொடர்பான காட்சிகளில் அவர்களுக்குள் நிகழும் மோதல் பிறகு  ஏற்படும் புரிதல் நன்றாக வந்திருக்க வேண்டியது!ஆனால் வரவில்லை!அந்த காட்சிகளை செல்வராகவன் பட பாணில எடுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரா அல்லது திரைக்கதை எழுதியவர்களுள் ஒருவர் நினைத்தாரா என்று தெரியல!

மிஸ்கின், நலன் குமாரசாமி, நீலன்.கே.சேகர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.இதில் மிஸ்கின் எழுதிய காட்சிகள் இவைதான் என்று சொல்ல முடியும்.உதாரணமாக அந்த சப்வே காட்சி,ஹாஸ்பிடலில் மனைவி  விடம் கடவுள் குறித்து பேசும் காட்சி சுனாமியில் தப்பித்தது(அவன் கடல்ல விழ போனான்.கடல் அவனை பின்தொடர்ந்தது), அந்த சிலை உடைப்பின் முடிவில் வரும் திருப்பம்  போன்றவைகளை சொல்லலாம்(இவை நானாக ஊகித்து சொல்பவை)!

            இதுல பிரச்சனை மிஸ்கின் படங்களுக்கே உரிய மனதை நெகிழ வைக்கும் அந்த உன்னத தருணங்கள் பல அவர் படங்களில் அற்புதமாக வெளிவந்திருக்கும்.இதுல என்ன நடந்துச்சோ அவர் எழுதியதை காட்சிப்படுத்தும்போது எங்கோ திசை மாறிட்டுதோ என்னவோ..அவை உன்னத தருணங்களாக மாறவில்லை(முன்பு குறிப்பிட்ட சப்வே காட்சி தவிர).
   இதுல முனியாண்டி இப்படத்தை 2006 ல இன்னாரித்து இயக்கத்தில் வந்த  Babel படத்தோடு ஒப்பிட்டிருந்தார்.அப்படமும் இதுபோல மூன்று வெவ்வேறு கதை மாந்தர்கள் விளக்கவியலா ஒரு மெல்லிய இணைப்பு சங்கிலியால் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும்.ஆனால் அப்படம் கன கச்சிதமான காட்சியமைப்பை  கொண்டிருந்தது. இப்படத்தில் அது மிஸ்ஸிங்.

    ஏற்கெனவே தசாவதாரம் படத்தில் இந்த பட்டர்ஃபளை எபெக்டை மையமா வச்சு கதை பண்ணுறேன்னு ஏதோ குழப்பியடித்திருப்பார் கமல்.இப்படத்தில் அவ்வளவு குழப்பங்கள் இல்லை.கடவுளின் இருப்பு தொடர்பான வசனங்கள் உண்டு.ஆனால் விவாதங்கள் இல்லை(தசா அசின் நியாபகம் உள்ளதா?).
   படத்தின் பிற்பகுதியில் வரும் இன்னும் இரு திருப்பங்கள்.ஒன்றை ஊகிக்க முடிந்தாலும் இன்னொன்று நிச்சயம் ஆச்சரியம்தான்(சேட்டு வீட்டில்).ஆனால் அந்த ஆச்சரிய தருணத்தை தாண்டி என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கமான கோடம்பாக்க பார்முலாபடி மொட்டைமாடிக்கு போய்ட்டார்.
     கடைசி சில காட்சிகளில் சுஜாதா எழுதிய கடவுள் புத்தகத்தை அப்படியே இரத்தின சுருக்கமா கேப்ஸ்யூல் வடிவில் கொடுக்கலாம்னு யாரோ ஐடியா கொடுத்திருக்காங்க போல!

          மாணிக்கம்  திருமணம் செய்து மனைவிக்கு  பிள்ளை உண்டானதும் தனது உடலில்  பெண் தன்மை அதிகரித்துக்கொண்டே செல்ல தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்படுது(சுனாமி-அற்புதம்-சிலை).இதுல ஷில்பாவின் மனைவியும் மகனுமே அவளை முழுமையாக ஏற்றுகொள்கின்றனர்.அந்த எஸ்ஐ பெர்லின்  (வாய்ப்பு கிடைக்குமானால் ஆண் பெண் திருநங்கை என யாரையும் விட்டுவைக்காத) அணுகும் விதமும், அந்த பள்ளி ஹெட் மாஸ்டர் அணுகும் விதமும் அதிகாரத்தின் அணுகுமுறை.அந்த பள்ளியில் பணியாற்றுவோர் மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் “ அச்சில் வார்த்தெடுக்கப்படும்”  மாணவர்களுமே ஷில்பாவை கேலி கிண்டல் செய்கின்றனர்.இழிவாக பேசுகின்றனர்.”வித்தியாசமான நபர்களை உலகம் கண்டு பயப்படும்” என்று ஷில்பா சொல்வதாக வருகிறது.

     இதுல குறிப்பிடவேண்டிய இன்னொரு கேரக்டர் முகிலன்.ஹீரோவாக ஆவதற்கு முன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுப்பவன்.அதோடு மட்டுமல்லாமல் திடீர் திடீரென்று சமூக கருத்துக்களை பேசுபவன்(தேசம்னா பக்தி-மொழின்னா பற்று.சாதின்னா மட்டும் வெறியா?).அதற்கும் அவன் காரணம் சொல்கிறான்.பெரிய ஸ்டார் ஆனதும் பேருக்கு முன்னாடி புரட்சி டேஷ்(தலைவலி?) முகிலன்னு போட்டுக்கிட்டு மேற்கூறியபடி  ஆவேச கருத்துக்களை பேசி அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பது(யப்பா!மூச்சு வாங்குது).இப்ப பிரபலமா இருக்கு பல ஹீரோக்களை  இந்த கேரக்டரோடு பொருத்தி பார்க்கமுடியும்.தமிழக அரசியல் வெற்றிடத்தில் பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட முடியும் என்று பல ஹீரோக்களின் கண்களில் ஆசை மின்னல் மின்னுகிறது.

    ஒருகாலத்தில்  பிட்டு படத்துல நடித்த நடிகை தாயானால் உண்டாகும் பிரச்சனை- சாதாரண நடிகை சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் புரிந்து  தாயானாலும் எதிர்கொள்ள நேரிடும்!பாலியல் உறவுகள் குறித்த அரைகுறை புரிதல்கள் நிரம்பிய சமூகத்தில் இந்தமாதிரியான குழப்பங்கள்(சன்னி லியோனுக்கு பிள்ளை பிறந்தால் அது என்ன மனநிலையில் இருக்கும்?) நேரிடுவது இயல்பே!இதை crisp ஆ சொல்லாம ஜவ்வா இழுத்து முடித்திருக்கிறார்கள். 

   சமூகத்தில் நிகழும் ஆனால் பலரும் விவாதிக்க விரும்பாத சம்பவங்களை படத்தில் காட்டியுள்ளார்கள்."இவையெல்லாம் இங்க நிகழவே இல்லை" என்று ஒருவர் சொன்னால் அவர் நிஜ உலகம் அறியாதவர் என்பதை தவிர சொல்றதுக்கு  வேறேதும் இல்லை!
 தேவையற்ற காட்சிகள் லாஜிக் ஓட்டைகளும் உண்டு. வீட்ல அறிமுகமில்லாத சிலர் உக்காந்திருக்கும் போதே பாடியை டிஸ்போஸ் செய்ய முயலும் காட்சி ஒரு உதாரணம்.
                         ஆரண்ய காண்டம் படத்தில் வந்த அந்த ஒலி வடிவமைப்பை இப்படத்திலும் கேட்க முடிந்தது.ஒரு அறையில் இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தெருவில் வெங்காயம் விற்பவனின் குரல்,ஏதேனும் ஸ்பீக்கரில் பாடல் ஓடிக்கொண்டிருந்தால் அடைத்த தொனியில் கேட்கும் பாடல்,வாகனம் செல்லும் சத்தம் etc..etc.. என்று அவ்வகையே இப்படத்திலும் துல்லியமாக  கேட்க முடியுது.

அப்புறம் இப்படம் குறித்த விமர்சனங்கள்.படம் சார்ந்தவை அல்ல.”இப்படிலாம் வசனம் காட்சிகள் வச்சு படமெடுத்தா சம்முவம் கெட்டுடாதா?” என்ற கலாச்சார காவலர்கள் கூச்சல்.இதுக்குமேலையுமா சம்முவத்தை கெடுக்க முடியும்?சிறுவர் சிறுமிகளின் மிக அபிமான ஸ்டார்கள் சிலர் தமிழில் உள்ளனர்.அவர்கள் படத்திற்கு குடும்பத்தோடு அவர்கள் செல்வர்.அப்படங்களில் வராத வக்கிரமா?ஆபாசமா?ஐட்டம் சாங்கா?இரட்டை அர்த்த வசனமா இதுல இருக்கு?இது வெளிப்படையா “ஆமா நாங்க இதைப்பத்தி பேசுறோம்” என்றுதான் எடுத்திருக்கிறார்கள்.

              வரிவிலக்கிற்காக பல படங்கள் யு சான்றிதழ் எப்படி பெற்றது என்பது நமக்கு தெரியும்!அப்படங்களில் உள்ள காட்சிகளில் இல்லாத வக்கிரமா?தவிர வக்கிரம் என்பது மறைமுகமா சக்கரை பூச்சோடு ஒன்றை சொல்லும்போதே கனத்து ஒலிக்கும்!நேரடியாக சொல்லும்போது அதன் போலி ஈர்ப்புகள் கவர்ச்சிகள் காணாமல் போகும்!
             விஜய் சேதுபதி வழக்கமான தேய்வழக்கு வசன உச்சரிப்பிலிருந்து முதன்முறையாக விலகி பேசியிருக்கிறார்.ஆனாலும் அப்பப்போ "என்னாச்சு?" ங்கிற நடுவுல கொஞ்சம்...பட perplexed முழிப்பை இதிலும் காண முடியுது!ஃபகத் ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் வேறு பரிமாணத்தை தொடுகிறார்!


யுவனின் பின்னணி பல இடங்களில் அற்புதமாக உள்ளது.வழக்கமா தற்போதைய "வடசென்னை மீட்பு" டிரென்ட்படி ஒரு கானா வச்சு கொல்லாமல் இருந்ததற்காகவே இயக்குனருக்கும் இசை அமைப்பாளருக்கும் நன்றி!



              அப்புறம் “ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டனும்”னு வசனம் பேசி படம் முழுக்க எப்படி ஃபிராடு வேலை செய்வதுன்னு டெமோ காட்டிட்டு கடைசில கிராமத்துல விவசாயம் பண்ண போறேன்னு நமக்கே அதிர்ச்சி கொடுத்த சதுரங்க வேட்டை  பட நடராஜ் படத்துக்கு எதிரா  ஓவரா கூவியிருக்கார்.”கில்மா கதை புத்தகத்துல எல்லாத்தையும் விளக்கிட்டு கடைசில இதையெல்லாம் செய்ய கூடாது தப்புன்னு சொல்ற அயோக்கியத்தனம்” என்று  படத்துலயே அவருக்கு பதிலிருக்கு!
       அப்புறம் ஷில்பா ஒரு திருநங்கை இல்லையாம் Transvestite(மாற்று பாலினத்தவரின் உடைகளை விரும்பி அணிபவர்) னு இன்னொரு ஒலக விமர்சகன் கூவுறான்.அஞ்சு ரூவாக்கி ஒரு ஜிபி டேட்டா குடுத்ததுல இந்தமேரி அரைவேக்காட்டுகள் அதிகம் உருவானதுதான் மிச்சம்.இதுக்குமேல இதுபத்தி எதுவும் சொல்ல விரும்பல!
.
             ஒரு மனிதனின் செயல் இன்னொரு மனிதனின் செயலில் வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும் என்கிறார்கள்.இப்படம் ஒரு மகத்தான படமா வந்திருக்க வேண்டியது.திரைக்கதைல ஏதோ ஒரு சிறு சறுக்கல் நிகழ அது இன்னொரு சறுக்கலை உண்டாக்கி அதனால் மற்றொரு சறுக்கல் என்று  மாபெரும்  பட்டர்ஃபளை எபெக்டை படத்திலும் காணமுடியுது!
.
டிஸ்கி 1: பொதுவா தியேட்டர்ல படம் ஆரம்பிச்சு அரை மணிநேரம் வரை எவனாவது வந்துகினே இருப்பான்.இந்த படம் சர்பிகேட் என்பதாலோ என்னவோ ஒரு மணி நேரம் வரை இருட்டில் ரகசியமா பலர் வந்து அமர்ந்தனர்.அவர்கள் வேறு ஏதோ எதிர்பார்ப்பில் வந்துவிட்டது மட்டும் உறுதி.
டிஸ்கி 2: இருக்குற ட்விஸ்ட்ல எல்லாம் பெரும் ட்விஸ்ட் கடைசில தியேட்டர்ல ஓடும்  பிட்டு படத்துல ஓணாண்டி புலவர் டாக்டர் கேரக்டர்ல வந்ததுதான்!செம ட்விஸ்ட் மாமு!
டிஸ்கி 3:  விஜய் சேதுபதிக்கு ரசிகைகள் நிறைய உண்டு போல!!ஆண் துணையோடோ தனியாகவோ வந்திருந்தனர்.அவர்களில் சிலர்  படம் முக்கால்வாசி நடந்துகொண்டிருக்கும் போதே வெளியேறியதை காண முடிந்தது.(நிச்சயம் இப்படம்  வணிக சினிமாவை எதிர்பார்த்து வந்தோருக்கு ஒருவித அசவுகரியத்தை தரும்!)
டிஸ்கி 4: படத்திற்கு இப்பதிவின் தலைப்பே முதலில் வைக்கப்பட்டிருந்தது.அதுவே சாலப்பொருத்தம் என்பது என் கருத்து.
     

Wednesday, 22 March 2017

கோலிவுட் ரவுண்டப்!

கோலிவுட்டில் இப்போது என்னென்ன படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஸ்டுடியோக்களை ஒரு ரவுண்டு வந்தோம்!அதில் கண்டவை கீழே...

Monday, 27 February 2017

தமிழக அரசியல் சூழலை கண்டித்து நடிகர்கள் உண்ணாவிரதம்

 மேடையில் நடிகர்கள் வரிசையாக அமர்ந்திருக்க மைக்குக்கு அருகே வழக்கம்போல counter அடிக்க கவுண்டர் உண்டு!
.
கித்தார்த் வருகிறார்....வரும்போதே பாடிக்கொண்டு வர்றார் ..
ஷூட் த குருவி ஷூட் த குருவி 
டவுசர் உருவி டவுசர் உருவி....
உடனே பின்னாடியே "எங்க டவுசர் உருவுறாங்க?எங்க டவுசர் உருவுறாங்க?எங்க டவுசர் உருவுறாங்க?" என்று கேட்டபடியே கிஸ்.ஜே.சூர்யா ஓடிவருகிறார்.
கவுண்டர்: டேய் டேய் பாரு!உச்சு உச்சுன்னு கூப்பிட்டா நாய் வர்றா மாதிரி 'டவுசர் உருவி'ன்னு நீ பாடுனதும்இவன் வந்துட்டான்!..டேய் போடா .உன்ன அப்புறம் கூப்பிடுவாங்க என்று கிஸ்ஜே.சூர்யாவை விரட்டுகிறார்.
கித்தார்த்: ஹாய் எவ்ரி ஒன்...ஹோப் எவ்ரிபடி இஸ் இர்ரிடேடட் லைக் மீ ரிகார்டிங் டமில்நாட் பாலிடிக்ஸ் ...
கவுண்டர்: டேய் டேய் ஃபேஸ்டைம்ல கடலை போடுறாமாதிரியே பேசாத மகனே!புரியுறா மாதிரி பேசு!
கித்தார்த்:நா என்ன சொல்றன்னா....
கவுண்டர்: இவன் என்ன கஜினிகாந்த் மாதிரி இழுக்குறான்?சொல்ல வேண்டியத சொல்றா!
கித்தார்த்:தமிழர்கள் இனிமே சோத்துல உப்பு அதிகமா போட்டு சாப்பிடணும்!
கவுண்டர்: ஆமா ஏற்கெனவே அவனுங்கள்ல முக்காவாசி பேருக்கு ரத்தக்கொதிப்பு இருக்கு!இன்னும் உப்ப அதிகமா போட்டா ஒரேடியா மேல போக வேண்டியதுதான்!
.
உடனே மேடையில் அமர்ந்திருக்கும் கீமான் முஷ்டியை உயர்த்தி கொந்தளித்தபடி கித்தார்த்தை ஏதோ திட்டுகிறார்!
கவுண்டர்: பாரு!சொல்லி முடிக்கல!அதுக்குள்ள!யப்பா கித்தார்த்து பேசுனது போதும் கெளம்பு!
.
அடுத்து ...அடுத்து....கர்ர்ர்...புர்ர்ர்...கர்ர்ர்....கொலபசியோட வந்திருக்கேன்....என்று உறுமல் சத்தம் எங்கிருந்தோ கேக்கிறது
கவுண்டர்: டேய் யாரங்க?தம்பிக்கு ஒரு பிரியாணி பொட்டலம் பார்சல்!
கூட்டத்திலிருந்து கூர்யா கொந்தளித்தபடி மேடையை நோக்கி பறந்து வருகிறார்!
கூர்யா: ஓங்கி கடிச்சா ஒன்ற டன் சத வரும் பாக்குறியா?பாக்குறியா?பாக்குறியா?
கவுண்டர் மேடைக்கு பின்னே ஒளிந்துகொண்டு : ஐயோ!என்னடா இது!ஜூவுல இருக்க வேண்டியதெல்லாம் வெளிய சுத்துது!
கூர்யா:  நிச்சயமா.....சத்தியமா....
கவுண்டர் நைசா வெளிய வந்து:க்கும்.எத பேசுனாலும் இப்படித்தான் ஆரம்பிப்பியா?மேட்டருக்கு வா!
கூர்யா: இத்தன நாளா...நாமதான் மிச்சர் சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கோம்!
கவுண்டர்:தம்பி கொலபசியோட இருக்கேன்னு சொல்லும்போதே நா டவுட் ஆனேன்!சரி.சரி.நிகழ்ச்சி முடிஞ்சதும் ஒரு கிலோ மிச்சர் வாங்கிட்டு போ!கெளம்பு!
.
அடுத்து
பீர்ஜே பாலாஜி வருகிறார்...
என்னாமச்சிஎல்லாரும்நல்லஇருக்கீங்களா?நாபீர்ஜேபாலாஜி89.9 லேர்ந்துடெல்லிலடெங்குஹைத்ராபாத்துலஹைட்டா....
கவுண்டர்: டேய் மூச்சு விட கொஞ்சம் நேரம் ஒதுக்குடா!ஒரேடியா வார்த்தைகள வாந்தி எடுக்காத!போ நிறுத்தி நிதானமா பேச கத்துகிட்டு வா!
.
கஜீத் வருகிறார்..
கவுண்டர்: ஹ்ம்ம்..இன்னிக்கி யார மாட்டிவிடப்போறாரோ!
கஜீத்:அய்யா மெரட்றாங்கய்யா...
கவுண்டர்: ஆரம்பிச்சிட்டாரு!
கஜீத்: சாரிண்ணே!போன டைம் பேசுறதுக்காக ஒரு டாமில் டீச்சர்கிட்ட எளுதி வாங்கி வந்தத திரும்பவும் படிச்சிட்டேன்...திடீரென்று பேட்டி கொடுக்கும் நினைப்பில்...... ஹேய் ஐ ஆம் கமிங் ஸ்டரைட் ஃபரம் பல்கேரியா.வீ ஆர் ஷூட்டிங் எ பைக் ரேஸ் ஓவர் தேர்!
கவுண்டர்: அது என்னங்கண்ணா எல்லா படத்துலயும் பைக்கை ஒத்த வீல்லையே ஓட்டுறீங்க?இன்னொரு வில் தேவையில்லன்னா அத மொத்தமா கழட்டிவச்சிட வேண்டியதுதான?
கஜீத்: அண்ணே கிண்டல் பன்னாதீங்கண்னே!
கவுண்டர்: சரி பேசுப்பா!
கஜீத் :ஐ ஹேவ் லாட்ஸ் அப் ரெஸ்பெக்ட் பார் ஆர் பார்மர் சிஎம்.பட நவ் ஐ பீல் வெரி சேட் ரிகார்டிங் கரண்ட் பொலிடிகல் சிட்டுவேஷன்..வாட் ஐ தின்க் இஸ்..
கவுண்டர்: அண்ணா கொஞ்சம் அப்பப்போ தமிழ்லையும் பேச டிரை பண்ணுங்க
கஜீத்:அண்ணே நா என்ன வச்சிகிட்டா வஞ்சன பண்றேன்?தவிர பல தவுசண்ட்ஸ் ஸ்பென்ட் பண்ணி ரெபிடெக்ஸ் கோர்ஸ் எடுத்ததை காட்டிக்க வேண்டாமாண்னே?
கவுண்டர்: க்கும்.இங்குலீசு தப்பில்லாம பேசணுமாம்!ஆனா இவங்க தமிழை மட்டும் கொத்து புரோட்டா போடுவாங்களாம்!ஏன் அதையும் ஒரு தமிழ் வாத்தியார் வச்சு கத்துக்க வேண்டியதுதான!இவுருன்னு இல்ல!சாமியார் வேஷம் போடுற டுபாக்கூருங்க வரைக்கும் இதேதான்!
கஜீத்: ஐ டோன்ட் லைக் பப்ளிசிட்டி!
கவுண்டர்: க்கும்!நடுராத்திரி பிளைட்டை பிடிச்சி சமாதி மாறி பம்ஜியார் சமாதி மேல தட்டி தட்டி அழுத மாதிரியா?
கஜீத்: அண்ணே மேடம் மேல எனக்கு நெறைய ரெஸ்பெக்ட் உண்டு!
கவுண்டர்: ஆமாமா!ஊழல் வழக்குல குற்றவாளின்னு அறிவிக்கப்பட்டவங்களாச்சே!
கஜீத் மைன்ட் வாய்ஸ்: என்ன சொன்னாலும் எதிரா பேசிகிட்டு இருக்காரு!இப்படியே முடிச்சிக்க வேண்டியதுதான்....வித் திஸ் ஐ கம்ப்ளீட் மை ஸ்பீச்!.
.
இவுரு வந்தா அண்ணாவும் வந்திருக்கணுமே!
வர்லாம் வா ...வர்லாம் வா..வர்லாம் வா....வர்லாம் வா 
என்று நாளா திசைகளிலும் எதிரொலிக்க சைக்கிளில் புறாவுக்கு பெல் அடித்தபடி அண்ணா வருகிறார்!
.
அதான் வந்துட்டாரில்ல!வர்லாம் வா'வ நிப்பாட்டுங்கடா!
அண்ணா: ண்ணா ....இப்பத்தான் பட்லி பட ஷூட்டிங்லேர்ந்து வரேன்
கவுண்டர்: எது?இந்த பழைய படத்தையெல்லாம் புதுசா கல்லுல போட்டு சுட்டு குடுப்பானே அவந்தான பட்லி?
அண்ணா: ண்ணா....ரசிகர்கள் அதத்தான் விரும்புறாங்க
கவுண்டர்: க்கும்!ஆடுங்க தங்களை ஆடுகள் என்று உணராதவரை.....
அண்ணா:கொலைவா படத்துல time to leadனு டேக்லைன் போட்டதுக்கு அந்த ஓட்டு ஓட்டுனாங்க
கவுண்டர்: புலம்ப ஆரம்பிச்சிட்டான்!
அண்ணா: ண்ணா...ஆனா இப்ப வர்லாம் வா'ன்னு வச்சதுக்கு எவனுமே கேக்கல!இனி படத்துல அரசியல் வசனம் தூக்கலா இருக்கும்!
உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்... என்று கூட்டத்திலிருந்து மிகச்சத்தமாக விசில்!

கவுண்டர்:ஆத்தா இருந்திருந்தா இதையெல்லாம் நடக்க விட்டிருக்குமா?
அண்ணா:ண்ணா ...அதான் இல்லையே!இப்ப என்ன பண்ணுவீங்க?
கவுண்டர்: என்ன பண்ண முடியும்?பேசாம பொத்திகிட்டு இருக்க வேண்டியதுதான்!
அண்ணா: அப்பாகூட பேசிகிட்டு இருந்தேன்!பேரவை கொடில அணில் போட்டோவ போடலாமா?ன்னு கேட்டாரு..வேண்டாம்னுட்டேன்!போன தேர்தல்ல ஊதிமுகவுக்கு அணிலா உதவி அவுங்க பின்னாடி அடிச்ச ஆப்பை நியாபகப்படுத்துது!அதனால Bi ரவா ன்னு ரெண்டு ரவா பாக்கெட்டை சின்னமா போடலாம்னு சொல்லிட்டேன்!
கவுண்டர்: ஐயோ...பேசியே கொல்றாரே!அண்ணா போதுங்ணா ...தலைப்புக்கு சம்மந்தமில்லாம பேசிட்டு இருக்கீங்க!
அண்ணா:தலைப்புக்கு சம்மந்தமா பேசுறத விட சம்மந்தமில்லாம பேசுனாத்தான் அல்லு தெறிக்கும்!
கவுண்டர்: ண்ணா ...பட்லி ஷூட்டிங்குக்கு கூப்பிடுறாரு!போய் செயின் சுத்துங்க!
கிளம்புகிறார் அண்ணா...
.
திடீரென்று கூட்டத்திற்கு மேலிருந்து ஒரு சுமோ பறந்து வருகிறது....விசில் சத்தம் போல நாலுபக்கமும் ஸ்பீக்கர் செட்டப்பில் கேட்கிறது.ஏர்ல இருக்கும் சுமோவிலிருந்து அப்படியே முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு மேடையில் தாவுகிறார் குஷால்.
கவுண்டர்: ஐயோ இவனா?கழுத்த சிலுப்பி சிலுப்பியே சாகடிப்பானே!
குஷால்: டேய்...நானும் மதுரக்காரன்தாண்டா!
கவுண்டர் குஷாலின் தலையை பிடித்து உலுக்கியபடியே...ஏண்டா நீ மதுரக்காரன்னா?நாங்கல்லாம் குண்டூர்காரங்களா?ஒழுங்கா தலைப்புக்கு சம்மந்தமா பேசுடா!
குஷால்: கடிகர் சங்க கட்டிடத்துலதான் என்னோட கல்யாணம் நடக்கும்!
கவுண்டர்: ஆண்டவா!அந்த கட்டிடமே வரக்கூடாது!
குஷால்: நடிகர் சங்கத்தில் புரட்சி பண்ணி முடிச்சிட்டேன்!அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புரட்சி பண்ண வேண்டியிருக்கு..
கவுண்டர்: புரட்சி தளபதின்னு எவனோ கொளுத்தி போட்டான்!இவன் இம்ச தாங்கல!
குஷால்: தயாரிப்பாளர் சங்கத்தில் புரட்சி முடிஞ்சதும்.....(கேப் விடுகிறார்)...சில விசிலடிச்சான்  குஞ்சுங்க தலைவாஆஆ என்று கொக்கரிக்கிறார்கள்!
கவுண்டர்: அதென்ன..கூட்டத்துல சொல்லி வச்சாப்ல நாலு பேரு மட்டும் கத்துறான்..
குஷால்:  ண்ணா அதெல்லாம் செட்டப்பு.கண்டுக்காதீங்க!
கவுண்டர்: ஓ இதுவும் புரட்சிதானா?சரி விடு!
குஷால்: கரத்குமார்,கோதாரவி ரெண்டு பேர் மேலையும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுப்பேன்!
கவுண்டர்: போதும்டா டேய்..சம்மந்தமில்லாம பேசுனது!கெளம்பு!
.
மொட்ட கிவா கெட்ட கிவாடா.....என்று எதிரொலிக்க ..

கோரன்ஸ் கழுத்து பட்டை அணிந்துகொண்டு தரையில் படுத்தும் படுக்காமல் அப்படியே ஆடியபடி வருகிறார்!
கவுண்டர்: ஆமா!இப்படி ஆடி ஆடித்தான் கழுத்து நரம்பு கட்டாகியிருக்கு இனியாவது இதை நிப்பாட்டுடா!எந்திரி...

மைக்கின் முன் நின்று பேச முயன்று பேசமுடியாமல் ஒரு கிளாஸ் தண்ணி குடித்துவிட்டு மெல்லிய குரலில் "நா இந்த உண்ணாவிரதத்திற்கான சாப்பாட்டு செலவுக்கு ஒரு கோடி கொடுத்தேன்" என்று சொல்லிமுடிப்பதற்குள் மேடையில் இருந்த கீமான் முஷ்டியை உயர்த்தியபடி "டேய் ஒரு கோடி எங்கடா கொடுத்த?காசோலை ரசீது இருக்கா?தலப்பாக்கட்டி பிரியாணி வாங்குன காலி கைச்சாப்பாடு பெட்டி இருக்கா ?வரைவோலை எடுத்தியா?மின்னணு முறையில் அனுப்புனீயா?எங்கடா ஒரு கோடி?" என்றபடி காரன்ஸ் மேல் பாய திரை விழுகிறது!
கவுண்டர்: ஆகமொத்தம் ஒருபயலும் தமிழக அரசியல் சூழல் பத்தி பேசல!நல்லா இருக்குடா உங்க போராட்டம் !விமலகாசன் டுவிட்டர்லையே புரட்சி பண்ணிக்கிறேன் என்று சொன்னதாலும்  கஜினிகாந்த் முன்னூறு கோடி படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும்   ரெண்டு பெரும் வரலியாம்!

Saturday, 28 January 2017

The Young lions(1958)

                     போர் பின்னணி கொண்ட  படங்களில் ஒரு  டெம்ப்ளேட் இருக்கும்.உதாரணமாக  இரண்டாம்  உலகப்போர் பின்னணி  என்றால்  ஜெர்மானியர்கள்  அனைவரும் கெட்டவர்கள்
 என்பதுபோலவும்  அமெரிக்கர்கள் அல்லது பிரித்தானியர்கள்   வந்து  அந்நாட்டிற்கு  பாவ விமோசனம் கொடுப்பதாகவும் சித்தரித்திருப்பார்கள்.ஹிட்லர்  எழுச்சி பெற்ற காலத்தில்  அவரை அமேரிக்கா  உள்ளிட்ட  நாடுகள்  ஆதரித்ததை பற்றி எவரும் பேசுவதில்லை.
            போர்  சார்ந்த  படங்களில் மற்றொன்று-  மிகையான  தேசபக்தி என்ற  பேரில்  அமெரிக்க வீரர்கள்  அனைவரும் அண்ணன் தம்பி போல  பழகுவதாகவும் ஒற்றை  எதிரி  ஜெர்மானிதான்  என்பதுபோன்ற    சித்தரிப்புகளை கொண்ட  படங்களும்  உண்டு.
டீன் மார்டின்

          ஆனால்  இப்படம்  அப்படியல்ல.வெவ்வேறு பின்னணியில் வந்த இரண்டு  இளைஞர்கள் அமெரிக்க ராணுவத்தில்  சேர்கிறார்கள்.நோஞ்சான் போல  இருக்கும்   யூதர்   மான்ட்காமரி க்ளிப்ட்(Montgomery Clift),வசதியான  பின்னணியில் வந்த  டீன்  மார்ட்டின்(Dean Martin) இருவரும்  ராணுவத்தில்  நட்பு  பாராட்டுகிறார்கள்.அது  ஒருபுறம்  இருந்தாலும்  நோஞ்சான் ஆக்கேர்மேன்(மாண்ட்காமரி) தொடர்ந்து சக  ராணுவ  வீரர்களால்  தொடர்ந்து கேலிக்கும்  கிண்டலுக்கும்  அடி   உதைக்கும்  ஆட்படுத்தப்படுகிறார்.ஆனாலும்  அவர் அதைக்கண்டு  அஞ்சாமல் அவர்களை  எதிர்கொள்கிறார்.நான்கு பேரோடு தினம்  ஒருவராய்  சண்டை போடும் காட்சியை சொல்லலாம்.மூன்று பேரிடம்  செம அடி வாங்கி விடுகிறார்.நான்காவது ஆளை திரும்ப  அடித்து வெல்கிறார்.
ஆக்கேர்மேன்

                        சுற்றி இருப்பவர்கள் stay down man என  சொன்னாலும் கேட்காமல்   ஆக்கேர்மேன் அடி    வாங்குவதை  பார்க்கும்போது  Cool Hand Luke படத்தில்  வரும்  லூக் நினைவுக்கு வராமல்  இல்லை.இதைப்பார்த்து  அந்த  கதாபாத்திரத்தை  உருவாக்கினரா  என்பது  தெரியவில்லை.
       இது ஒருபுறம்  இருக்க  மற்றொரு  கதைக்களனாய்  ஜெர்மனியர்கள்.ஜெர்மனியரான கிறிஸ்டியன்  டீஸ்டேல்(மார்லன் பிராண்டோ) பனிச்சறுக்கு பயிற்றுவிப்பராய் உள்ளவர்.ஹிட்லரின் பேச்சுக்களால்  கவரப்படுகிறார்.தொடர்ந்து நசுக்கப்படும் ஜெர்மனியை மீட்டெடுக்கும்  மீட்பராய்  அவரைக்காண்கிறார்.இது குறித்து  அவருக்கும்  அவரது காதலிக்கும்  இடையே நடக்கும் விவாதம்  மிக  நுட்பமாய் கயிற்றின் மேல்  நடப்பது போல எழுதப்பட்டுள்ளது.
 And with political discussions we go round and round and nothing is ever settled!
             
                               இரண்டாம்  உலகப்போர்  துவங்கியவுடன் ஆவலோடு படையில்  இணைகிறார் கிறிஸ்டியன்.ஆனால்  அதற்குப்பின்  நடக்கும்  எதுவுமே  அவருக்கு  உடன்பட்டதாய் இல்லை.வறுபுறுத்தி ஜெர்மானியர்களை வீடு  வீடாய் தேடிப்பிடித்து  ராணுவத்தில்  சேர்க்கும்  பணியில் இருக்கும்போதும்  சரி,உயரதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பக்கத்து  அறையில் கெஸ்தாபோ யூதர்களை  அடித்து நொறுக்கும்  சத்தம் கேட்டு பொறுக்காமல் அதை  தடுக்க முற்படுவதாய் இருக்கட்டும்,பிறகு  முற்றிலும்  ஹிட்லரின் கொள்கைகளில்  செயல்பாடுகளில்  போரில் நம்பிக்கை இழந்தவராய் கடமைக்கு ராணுவத்தில் இருப்பதாய்  இருக்கட்டும் .ஹிட்லரின் படையில் இருப்பவர்  என்பதாலேயே  அவர்  ஹாஹா  என  சிரித்தபடி  அனைவரையும்  கொடுமைப்படுத்தும்  கதாபாத்திரமாக  வடிவமைக்காமல்  இப்படி மனிதத்தன்மையுள்ள ஒருவராய்  கிறிஸ்டியன் கதாபாத்திரம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.அப்படி  வடிவமைத்தது பெரிதல்ல!அதை நம்பகத்தன்மையோடு திரையில் நடிக்க  ஒரு  நடிகர் வேண்டும்!

                         

                   அமெரிக்க  படைகள்  நடத்திய  தாக்குதலில் தப்பித்து  இரண்டு  நாட்கள்  சோறு  தண்ணி  உறக்கம்  இல்லாமல் ஒரு  ஜெர்மானிய ராணுவ முகாமுக்கு வந்து சேரும்  பிராண்டோவின் முகத்தை உடல்மொழியை கவனித்தால்  இவர்  நிஜமாகவே இரண்டு  நாட்கள்  உண்ணாமல்  உறங்காமல்  கடும்  மன  உளைச்சலில்  இருந்தபடியே நடித்திருப்பார்  என்றுதான் தோன்றுகிறது!அவர்  அப்படி  செய்யக்கூடிய  ஆள்தான்!இவரின்  நடிப்பை  பார்த்துவிட்டு  கொஞ்சநாளக்கி வேற  யார்  நடிச்ச  படத்தையும்  பார்க்கமுடிவதில்லை!

என்னைப்பொறுத்தளவில்  போர் என்ற விஷயத்திலேயே உடன்பாடு இருந்ததில்லை!வெறுமனே தேசபக்தியை கிளறிவிட்டு மக்களை உணர்ச்சியின் உச்சத்தில் நிறுத்தி சண்டை போடவைத்து அவர்கள் உயிரை எடுப்பது அர்த்தமற்றது!மேலும் போரில் தோற்றதாக சொல்லப்படும் நாடு மட்டுமல்ல வென்றதாக சொல்லப்படும் நாட்டின் பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லாமே அதலபாதாளத்திற்கு செல்லும்!
              முதல் உலகப்போரில் ஜெர்மனி நசுக்கப்பட்டதன் விளைவாகவே ஹிட்லர் எழுச்சி பெற்றார்!அதனால் இரண்டாம் உலகப்போர்!அத்தோடு  உலகம் திருந்தியதா  என்றால் இல்லை!வியட்நாம் ,ஈராக்,ஆப்கன் சிரியா என்று கொலைவெறி யுத்தங்கள் இன்றும் தொடர்கதையே!அதன் எதிர்வினையாக இன்று மூலைக்கு மூலை பல்வேறு தீவிரவாத இயக்கங்கள்!அதற்கும் காரணம் வல்லரசு நாடுகளின் போர் வெறியே!
              நாஸி படையை சேர்ந்தவர்/அல்லது ஜெர்மானியர் என்பதாலேயே ஒருவர் தீயவர் என்ற பொதுபுத்தியில் காட்டாமல் ,நாஸி அரசு என்ற ஈவிரக்கமில்லா எந்திரத்தின் கட்டாயத்தாலேயே படையில் சேர்ந்தோர் பலர்.அல்லது ஹிட்லரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு படையில் சேர்ந்து பிறகு disillusion ஆகி வெளியேறவும் முடியாமல் எதிர்ப்பை தெரிவிக்கவும் முடியாமல் நடைபிணமானோர்களில் ஒருவராக பிராண்டோ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
            இப்படம் வெறுமனே இருபக்கமும் இருநாடுகள் நின்று சண்டை போடுவதை வீர சாகசமாக காட்டாமல் போரில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவ வீரர்களின்/பொதுமக்களின் மனஓட்டத்தை விரக்தி நிலையை,இழப்புகளை கண்ணீரை சொல்வதாக உள்ளது!
              

Sunday, 20 April 2014

பவரின் அரசியல் நிலைப்பாடு என்ன?

அன்புள்ள வ.ரா,
                               நலமா?(இல்லன்னா என்ன பண்ண போற?-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை?ஒருவேளை வாய்ஸ் கொடுத்தும்  அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமா?உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவரு?நன்றி.                                                                                                                                                                                                                                         -திண்டுக்கல் சகாயம்.

********************************************************************************************
 Hello V.R,
                  Just dropped in to enquire about your beloved and over-rated balloon Powerstar.Why cant he guide people in this election?Is he afraid?
                                                                                                                        -Raj.
***********************************************************************************

Adios amigo VR,
                     Amanecía en el naranjel.Abejitas de oro buscaban la miel.
¿Dónde estará powero star
la miel? -                                                                                    -Juan Miguel
.
***********************************************************************************



அன்பு சகாயம் & ராஜ்&Miguel,
                                                          பவர் மீது கட்டமைக்கப்படும் விஷம பிரசாரங்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அவரின் வளர்ச்சி,பல நூற்றாண்டு காலமாக அவர் உலக மக்கள் நலனுக்கு ஆற்றி வந்த பெரும்பணி இவற்றை எல்லாம் எப்படியாவது மறைத்து விட வேண்டும் என்று சிலர் அலைவது தெரியும்.பவருக்கு தேச நலனில் அக்கறை இல்லாதிருந்திருந்தால் ஏன் அவர் சிப்பாய் கலகம்,தண்டி யாத்திரை,ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றிருக்க போகிறார்?

இவ்வளவு ஏன் அமெரிக்க சுதந்திர போரிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் பவர்.அவருக்கு இந்த தேசம், அந்த தேசம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்க தெரியாது.மக்களின் அன்பு என்ற மகத்தான சக்தி   தேச வரைபடங்களில் சிக்கிவிட கூடாது என்பதே அவர் எண்ணம்.
                         சென்ற தேர்தல் முடிந்த போதே பல அரசியல் கட்சிகள் பவரிடம் "அடுத்த தேர்தலில் எங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது எத்தனை பேருக்கு தெரியும்?(அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?இல்லை சும்மா அடிச்சி விடுறியா என்று கேட்பவர்களுக்கு இதோ புகைப்பட ஆதாரங்கள்)....


 
அப்படி இருக்கையில் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.அவர் இந்தியா என்ற வட்டத்துக்குள் மட்டும் இருக்க விரும்பாமல் உலக மக்கள் அமைதி பெற்று வாழ தேவையானவற்றை செய்ய இப்போது நார்வே சென்றுள்ளார்."உலக சமாதானம் என்று வெற்றி பெறுகிறதோ அன்றுதான் நான் பிறந்தநாள் கொண்டாடுவேன்" என்று சூளுரைத்தது பல பேருக்கு தெரியாது.ஆகையால் வெறும் பத்திரிகை ஊடக விஷம பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உண்மையில் அவர் என்ன பணி ஆற்றியுள்ளார் என்பதை வரலாற்று புத்தகங்கள் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.இனி தொடர்ந்து இது போன்ற பொய் கட்டமைப்புகளை உடைக்கும் வண்ணம் பவரின் சிஷ்யர்கள் செயல்படுவார்கள்.

Saturday, 3 December 2011

துடி துடித்த நடிகர் பிங்கி ராஜா!மனித நேயத்தின் மொத்த சொரூபம்!

நடிகர் பிங்கி ராஜாவிடம் தயங்கி நின்றிருக்கிறார் ஒருவர்!அவுரு புள்ளைக்கு சரக்கடிச்சி கீழ உழுந்து காலு ஓடைஞ்சி போச்சாம்!"யோவ கதை சொல்ல வந்தேன்னு நெனச்சேன் இதை மொதல்லையே சொல்ல கூடாதா"ன்னு சொல்லி 65 ஓவா கொடுத்து "இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்னு நான் சொன்னேன்னு நீ இதை வெளியில்(பேஸ்புக் உட்பட) லீக் பண்ணி விடு!அப்புறம் பாரு!மனித நேய மாணிக்கம் பட்டம் எனக்குதான்"!அப்படின்னு சொன்னாராம் பிங்கி ராஜா!
சாரி  பிங்கி ராஜா!நீங்க நடிப்பதுக்கு சம்பளம் வாங்குறீங்க இல்ல?அதுல எம்புட்டு கருப்பு எம்புட்டு வெள்ளையில் வாங்குறீங்க?எம்புட்டு வரி காட்டுறீங்க?நீங்க க்யூவில் நின்னு ஒட்டு போட்டதாக ஒரு பழைய ஸ்டில்லை வைத்துக்கொண்டு "ஆஹா!இவர்தான் உண்மையான குடிமகன்"னு இந்த இளிச்சவாய மக்கள் நெகிழ்ந்து போறாங்க!அவங்களுக்கு தெரியுமா நீங்க உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு போடவே இல்லைன்னு!
பிரியாணி போட்டா மனித நேய பண்பாளர் ஒட்டு போட க்யூவில் நின்னு அதை தனது போட்டோக்ராபர் மூலம் போட்டோ எடுத்து இன்டர்நெட்டில் விட்டு "ஆஹா!இவரல்லவோ உண்மை மனிதன்" அப்படின்னு உங்கள் அல்லகைகளை விட்டே செய்தி பரப்புரீங்க!ஹ்ம்ம்...ஏமார்றவன் இருக்குற வரை ஏமாற்றுகிரவன் இருப்பான்! தமிழன்னா  கேட்கவும் வேணுமா?எங்கிருந்தோ பிற மாநிலத்துல இருந்து வந்த பிங்கி ராஜாவுக்கு தமிழே ஒழுங்கா பேச வராது!அதுவும் பேட்டிகளில் 90% English 10% தமிழ் இப்படிதான் பேசுவாரு அந்த மனித குல மாணிக்கம்!ஆனாலும் முட்டாள் தமிழன் அவர் பின்னாடி ஓடுறான்!ஒடுங்க ராசா!ஒடுங்க!