Showing posts with label கெடாவெட்டு. Show all posts
Showing posts with label கெடாவெட்டு. Show all posts

Sunday, 9 January 2022

கோலிவுட் ரவுண்டப்-6.0

பிவகுமார் வீட்டுக்கு முன்ஜாக்கிரதையாக ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சென்றோம்!வழக்கம்போல "செல்போனை குடுத்துட்டு போ ராஜா..ஆ." ஒரு குரல் கேட்க பம்மியபடி அவர் கையில் மொபைலை கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாதை மூன்றாக பிரிய எந்த வழியில் போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது கிலோ கணக்கில் பழைய பேப்பர்களை சுமந்தபடி பத்து பணியாட்கள் செல்ல நாமும் ஆர்வத்தோடு அவர்களை பின்தொடர்ந்தோம். "...ம்ம்...ஹூம்..வேணாம்!..இன்னும் நல்ல ஹெவி சம்பவமா எடு!" "ஐயோ!அவங்க பீரியட்ல நடந்ததா?அப்போ வேணாம்...இவிங்க பீரியடை மட்டும் தேடுங்க போதும்" என்று குரலை பின்தொடர்ந்தால் அங்கே கூர்யா நின்றபடி தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்! "ண்ணா வணக்கமுங்க" என்று பம்மியபடி வணங்கி ஒரு மூலையில் சென்று நின்றோம். "நல்லா முற்போக்கு புரட்சி பொதுவுடைமைன்னு கேமராவ பாத்து ஆவேசமா பேசுறாப்ல சப்ஜக்ட் இருக்கணும்!அதுக்கு தகுந்தமாதிரி செய்தியை தேடி எடுங்க"
நாம் அமைதிகாக்க கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா ஒரு சந்தேகம்" "ம்.நானே பிஸியா இருக்கேன்.சரி கேளுங்க" "படத்துல பொதுவுடமை கார்ப்பரேட் ஒழிப்புன்னு பேசுறீங்க.ஆனா அந்த படத்தையே நீங்க பொதிகை டிவிக்கு குடுக்காம எதுக்கு தனியார் சேனலுக்கும் தனியார் பெருநிறுவனத்துக்கும் கொடுக்குறீங்க?" "இவனுங்க இம்சை தாங்கல" என்ற மைன்ட் வாய்ஸ் நமக்கு சத்தமாகவே கேட்டாலும் ஒன்றும் கேட்காதபடி முகத்தை வைத்துக்கொண்டு அவரையே பார்க்க "து....வந்து.....அது .....நிச்சயமா....சத்தியமா..." "அண்ணா கேள்விக்கு பதிலை சொல்லுங்கன்னா உங்க டிரேட்மார்க் வசனத்தை சொல்லி பம்முரீங்களே!" "வந்துடுச்சு" இது உதவியாளர் "டேய் வந்துடுச்சுன்னா வெளிய போயிட்டு வா.பழைய பேப்பர் நினைப்புல இங்கையே ....கூர்யா கவுண்டரை பார்த்து முறைக்க .......இல்ல..இங்கையே படிச்சத சொல்லுன்னு சொல்ல வந்தேன்" "***2 ல ஒரு சம்பவம் நடந்திருக்கு...என்று பேப்பரை காட்ட "ம் என்றபடி கூர்யா அதை படித்துக்கொண்டிருக்க கவுண்டர் சும்மா இல்லாமல் மீண்டும் "அண்ணா இன்னொரு சந்தேகம்" "படத்துக்கு துளு மொழில தலைப்பு வக்குறீங்க.ஆனா படத்துல யாராவது துளு மொழில பேசுனா பளார்னு அறை உடுறீங்க!இது எப்படிங் " "அதுவா! அவன்கிட்ட ஏன் கேக்குற?என்னை கேளு" என்றபடி பிவகுமார் வேகமாக வர "ஐயோ சாமீ!எஸ்கேப்" என்றபடி கவுண்டர் ஜூட் விட நாமும் பின்னாலேயே அப்பீட் ஆனோம்! ******************************************************************************* அடுத்து அஜய் கேதுபதி!அவர் ஒரே நாளில் நூறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதை அறிந்து எங்கு சென்று அவரை சந்திப்பது என்ற குழப்பத்தில் நடந்துகொண்டிருந்தபோது "ஐயோ!" "கலத்கா மத் கர்" "சம்பேஸ்தானு" "எள்ளி நோடுத்தர" என்ற அதட்டல் குரல்கள் கேட்க செட்டுக்குள் நுழைந்தால் நெற்றிமாறன் இயக்கம் கிடுதலை ஸ்பாட்.வழக்கம்போல நாலு ஜிம்பாய்ஸ் நடுவில் ஜட்டியுடன் தலைகீழாக தொங்கி கொடிருக்கும் ஆசாமியை வெளுத்துக்கொண்டிருக்க பக்கத்தில் கூரி "Dhis ish dhe dreatmend par nad delling dhe drudh" என்று பேசியபடி நடுநாயகமாக தடியுடன் அஜய் கேதுபதியை வெளுக்க
நெற்றிமாறன் வழக்கம்போல "அப்படித்தான்!நெஞ்சுல மிதிலே!விலாவுல குத்துலே!போன தடவையும் ஆஸ்கர் மிஸ்ஸாகிட்டு!இந்த தபா உடமாட்டேன்" என்று கத்த நடுவில் யார் தொங்குவது என்று கூர்ந்து நோக்கினால் அஜய் கேதுபதி!ப்பா!என்றபடி நாம் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்! ******************************************************************************** நூறு பைக்குகள் குறுக்கும் மறுக்குமாக போய்க்கொண்டிருக்க நடுநாயகமாக "படம் ரிலீஸாகும் வரை ஒற்றை டயரில் பைக்கை இடைவிடாமல் ஓட்டி பெட்ரோலை காலி செய்யும் போராட்டம்" என்று சிலர் கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்!புரிந்தபடி நாம் வெளியேறினோம்!( கவுந்தியடிகள் மேற்கோள் எதுவும் அங்கே இல்லையா?- கும்மாங்கோ) ******************************************************************************** அடுத்து குஜை நடிக்கும் "ஃபீஸ்ட்". டேபிள் நிறைய சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க அதை தொடாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி அரை இட்லியை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார் குஜை.பக்கத்தில் இயக்குனர் பல்சன்."அண்ணா ஒப்பனிங் சீனே நீங்க அப்படியே பத்து ஃபுல் அடிச்சிட்டு டேபிள் முழுக்க இருந்த ஐட்டங்களை முழுங்கிட்டு அப்படியே காஜ்பிரண் கணக்கா ரத்தம் சொட்டும் ஆட்டுத்தொடை எலும்பை வாயில் கவ்வியபடி ஆவேசமாக கேமராவை பாக்குறீங்க.பக்கத்தில் நூறு அடியாளுங்க அடிவாங்கி மயக்கத்தில் இருக்க "ஐ ஆம் கமிங்" என்று ஃபேஸ்டைமில் வில்லனுக்கு சவால் விடுறீங்க.அங்க டைட்டில் போடுறோம்! "ஃபீஸ்ட்"... ..."ம்ம்....சூப்பர்!அப்படியே டாப் கியர்ல போட்டு தூக்கு" "வில்லன் க்ரூப் காலேஜ் பசங்களுக்கு ட்ரக் சப்ளை பண்ணுது.நீங்கள் காலேஜ் ப்ரொபசர்.ஆனா லுங்கி கட் பனியனோடுதான் காலேஜ் போறீங்க!" "யோவ் போன படத்தையே திரும்ப சொல்லாத!வேற வேற!" "வில்லன் க்ரூப் ஒரு மெடிக்கல் மாபியா...நீங்க ஒரு..." "கம்பவுண்டரா??யோவ் முன்னாடி என்னோட முந்தைய படத்த சொன்ன!இப்ப உன்னோட முந்தைய படமா?...வேற..வேற..."
"வில்லன் க்ரூப் விக்குக்குள்ள போதைப்பொருள் வச்சி கடத்துறாங்க...நீங்க ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்!ஒரு நாளைக்கு ஒரு விஐபி கஸ்டமருக்கு ஹேர் ஸ்டைலிங் பண்றப்போ அந்த விக்குல கொஞ்சம் போதைப்பொருள் இருப்பதை ஸ்மெல் பண்றீங்க.அப்படியே அதோட பின்னணியை ஆராய ஒரு விக் விக்கும் கடைக்கு போறீங்க.அங்க உள்ள தடியனுங்க எக்குதப்பா பதில் சொல்ல வில்லன் க்ரூப்புக்கும் உங்களுக்கும் மோதல்.அப்புறம் நான் சொன்ன அந்த ஒப்பனிங் ஸீன்.." "ம்ம்...ஓகே.மேல போ" ******************************************************************************** அடுத்து கோயஸ் பார்டன் சென்றோம்!மகா அமைதி நிலவ கேட்டை திறந்து உள்ளே சென்றால் நான்கு இயக்குனர்கள், ஒரு போஸ்ட்மேன், ஒரு வாட்ச்மேன் கதை சொல்ல வரிசையில் காத்திருந்தனர்."ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆவாது" என்றபடி நாமும் சோபாவில் ஒரு ஓரத்தில் அமர்ந்தோம்! கஜினி வந்தார்."அட என்னப்பா நீ?கைய வேற கால வேற தனித்தனியா தூக்கிட்டு இருப்பியா?" என்று கவுன்டர் அடிக்க கஜினி அவரை கண்டுகொள்ளாமல் "ம்ம்....கடைசி .....ம்ம்...எத்தனை படமோ!எல்லாம் பப்படம்!கதை சும்மா நச்சுன்னு இருக்கணும்.நீ சொல்லு" இயக்குனர் பிவா " ஸார் ஓப்பன் பண்ணா கொல்கத்தா!அங்க நீங்க கையில வெட்டருவாவோட ஆவேசமா நிக்குறீங்க!பக்கத்துல உங்க தங்காச்சி" கஜினி பெரிய கும்பிடு போட்டபடி "நீ கிளம்பு ராசா" என்று அடுத்து போஸ்ட்மேனை அழைக்க... "தலைவா ஓப்பன் பண்ணா நீங்க ஸ்கூல் வாசல்ல நிக்குறீங்க .அப்படியே உங்க மகள் கேரக்டர் ஓடிவந்து "டாடீ" என்று கட்டியணைக்க வர உங்கள் மனைவி கேரக்டரான டென்தாரா மகளை புடிச்சி இழுத்துட்டு போக நீங்க கண்ணீர் தளும்ப உங்க மகளை பாக்க ...." "இது அந்த பிவா உன்னை சொல்ல சொல்லி குடுத்த கதைதான?" என்று கஜினி கேட்க... "து....அது...வந்து.." "கிளம்புங்க!நெக்ஸ்ட்"
"ஓப்பன் பண்ணா உங்களுக்கு ஒரு பேத்தி...அவ மேல உயிரா இருக்கீங்க.." "அவுட்!பொண்டாட்டி தங்காச்சி பொண்ணு பேத்தின்னு யாராவது சொல்றதா இருந்தா இப்பவே கிளம்புங்க" என்று கும்பிட அனைவரும் அப்ஸ்காண்ட்! கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா! அல்லக்கைங்கல நாலு அப்பு அப்புங்க!எப்ப பாத்தாலும் "'எங்கேயோ கேட்ட ஓலம் ,கள்ளும் மலரும்' படங்கள்ல ஒரு மகாநடிகன் தெரியுறான்"னு உசுப்பிவிட்டத நம்பி நீங்களும் செண்டிமெண்ட் படமா நடிச்சி தள்ளுறீங்க!இதுல சில ஒலக விமர்சகனுங்க சமிதாப் ரேஞ்சுக்கு நீங்களும் நடிக்கணும்னு சொல்லிட்டு திரியுறான்!அப்படி சொல்றவன் ஒருத்தனை புடிச்சி படம் எடுக்க சொன்னீங்கன்னா அதுக்கப்புறம் ஒருபய இப்படி உசுப்பேத்த மாட்டான்!வரட்டுங்களா!" என்றபடி வெளியேற நாமும் வெளியேறினோம்! ************************************************************************** அடுத்து லோகநாயக்கடு நடிக்கும் பிக்ரம் பட ஸ்பாட்.கும்மிருட்டில் கம்பேனி ஆர்டிஸ்ட் சூழ லோகநாயக்கடு நின்று கொண்டிருக்க அருகில் போகேஷ்."ஆண்டவரே அப்படியே டபார் டபார்னு எதிரி க்ரூப் ஷூட் பண்ணிகிட்டே முன்னேறி வரான்.உங்க சைடு ஆளுங்களால கண்ட்ரோல் பண்ண முடியல!என்னடா பண்ண போறோம் என்று அங்கலாய்க்க அப்படியே நீங்க என்ட்ரி குடுக்குறீங்க.கைல வெறும் தகடை புடிச்சிகிட்டு முன்னேற எதிரிகள் சுட குண்டுகள் அப்படியே தெறிச்சி விழ...பிக்ராம் என்று உங்களின் பின்னணி குரலில் அப்படியே என்ட்ரி குடுத்து தகட்டை தூக்கி போட்டுட்டு எதிரிகளை நோக்கி சுடுறீங்க. கவுண்டர் வழக்கம்போல "அண்ணா ஒரு சந்தேகம்" "வெல் இவுரா?யாருப்பா உள்ள உட்டது" என்ற முகபாவத்தை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்துகொண்டு "ம்ம்..கேளுங்க" "சுடுறவன் தகட்டு மேலேயேதான் சுடுவானா?ரெண்டு இன்ச் கீழ சுட்டா முட்டிக்கால் தெரிச்சிடுமே.அப்புறம் கபாலம்!" "அதெல்லாம் தெரிஞ்சவன எங்க படத்துல வில்லனா இருக்க உட மாட்டோமில்ல" என்றால் பிமல். "ஆமா!படம் முழுக்க உங்க புகழ் பாடுறா மாதிரி தான கேரக்டரை செட் பண்ணுவீங்க!" "அப்புறம் அந்த கிண்டியன் படம் என்னங்க ஆச்சு?" "வெல்!ஆ!கிண்டியன் வருமா வராதா?என்ற கேள்விக்கு வரும் வராது என்று பைனரியில் சொல்ல இயலாது.வரலாம்!வந்தும் வராமல் போகலாம்!வராமலும் வரலாம்!அப்படியே வந்தாலும்..." "பப்படம் ஆகலாம்!" என்று கவுன்டர் அடிக்க பிமல் முறைக்க நாம் எஸ்கேப்!

Saturday, 27 February 2021

கொலைவெறி குறுங்கதைகள்-சுராத்து

இடி மின்னல் கடும் மழை.......... கும்மிருட்டு.....பல்வேறு தெருக்களில் இருந்து தினுசு தினுசாக எழும் நாய் குரைப்புகள்-ஓலங்கள்...... ......... அந்த இருட்டில் சாலையோரத்தில் ஒரு சில்லவுட்......தலையில் சாக்கு மாட்டியபடி குத்தவச்சி உக்காந்திருக்கு..... தமிழ் சினிமாவில் கிராமத்து ஏழ்மையை பறைசாற்றும் அந்த பின்னணி இசை ஒலிக்கிறது... ஏ.....ஆயி....ஈ...ஈ....என்ற கிழவியின் குரல்.... . அந்த வார்த்தைகள் உண்டாக்கியோ எபெக்டோ என்னவோ....சுராத்துக்கு அடிவயிற்றில் ஒரு கடமுடா...... .....நல்லவேளையாக எதிரிலேயே கட்டண கழிப்பிடம்.... ....அவசரமாக உள்ளே ஓட முயற்சித்த சுராத்தை ஒரு முரட்டுக்கரம் தடுத்து நிறுத்தி....காசு.....
எவ்வளவு?
எதுக்கு?
***ரெண்டு விரல்***சிக்னல் காட்ட...
பத்து ரூவா....
பாக்கெட்டில் இருப்பதோ ஐநூறு ரூபாய் மட்டும்...அதை தயக்கத்தோடு நீட்ட..
சில்ற இல்ல என்றது முரட்டுக்குரல்...
என்கிட்டயும் இல்ல.ஆனா அவசரமா வருதே...
பரவால்ல!மிச்சம் நானூத்தி தொண்ணூறுக்கும் போய்க்கோ....
***மண்டைக்குள் இடிச்சத்தம்****** .......டக்...டக்....டக்....மிழ்நாடே......டக்...டக்...வதை ....டக்....டக்...முகாம்....போல....டக்க்க்....உள்ளது... கேரளாவில்....சுண்டு..விரல்....தட்டினால்...சொர்க்கம்....க்ரக்க்....கக்கக்......கக்க....டக்....நிசப்தம்.... ...ஏய்ய்ய் என் தலைவன் லுமும்பா நாட்லேர்ந்து அனுப்புற தந்தி ஏண்டா பாதில நின்னு போச்சு?சொல்றா என்று சுராத்து தந்தி ஆபிசரின் சட்டையை உலுக்க.....யோவ்...இன்னிக்கி நைட் பன்னெண்டு மணியோட தந்தி சேவைக்கு மொத்தமா மங்கலம் பாடுறாங்க.இது தெரியாம வந்துட்ட...ஓடிடு...என்று மிரட்ட வெளியே தெறித்து ஓடுகிறான்.... ********************************************************************** *********
*தில்லி சர்வதேச எழுத்தாளர் மாநாடு
... . சூர்யாவுக்கு யாரும் அழைப்பிதழ் கொடுக்காவிட்டாலும் சுராத்து சூர்யா ஓணான்டிப்புலவர் மற்றும் உத்தமமேகன் நால்வரும் வாண்டனா டில்லிக்கு ரயில் பிடித்து சென்று எப்படியோ அங்கே நுழைந்துவிட்டனர்.(நான்கு நாள் மாநாடு என்பதால் அங்கேயே தங்கும் வசதி உணவு ஏற்பாடு வாட்டர் சர்வீஸ்... எல்லாம் உண்டு என்பதை கேள்விப்பட்டுத்தான் அவர்கள் அங்கே சென்றார்கள் என்பதை தனியா வேற சொல்லணுமா?-கும்மாங்கோ)... . ஈகிள் டிவியின் அசல் தொகுப்பாளர் மாணிக் தனது தம்பியின் காதில் மாட்டிய இயர்பீஸ் மூலம் சூர்யாவை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்து ஒருவரமே ஆகியிருந்த நேரம்.... . இது குறித்து சூர்யாவுக்கு தன்னையறியாமல் கடும் கோபம் ஏற்பட்டு அவ்வப்போது கை முஷ்டியை முறுக்குதல்,டேய்ய்ய்ய் என்று தன்னையறியாமல் கத்துதல்(ஒருமுறை சினிமா தேட்டரில் படத்துக்கு நடுவே சூர்யா ஆவேசமாக டேய்ய்ய் என்று கத்தியதும் அதே தருணத்தில் ஹீரோவை வில்லன் திட்டியதால் ஹீரோவின் ரசிகர்கள் தேட்டரில் பதிலுக்கு கத்தியதும் சின்க் ஆக தப்பித்தான் சூர்யா-கும்மாங்கோ) என்று நிகழ்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல்(உண்மையில் இப்படியெல்லாம் நிகழ்வது சூர்யாவுக்கே தெரியாது என்பது மற்றொரு காமெடி) தில்லிக்கு சப்ஜாடா கிளம்பி சென்றுவிட்டனர்.எப்படியோ அழைப்பிதழ் இல்லாமலேயே உள்ளே புகுந்து ஒரு டார்மெட்டரியில் இடமும் பிடித்துவிட்டனர். இவர்கள் நான்கு பேர்.அந்தப்பக்கம் ஒரு மலையாள சாகித்யக்காரன்,அவர் பக்கத்தில் ஒரு பஞ்சாபி எழுத்தாளர்.இந்தப்பக்கம் ஒரு ஹிந்தி எழுத்தாளரும் ஒரு எஸ்பன்யோல் எழுத்தாளரும் தங்கியிருந்தனர். . நள்ளிரவு நேரம்...எல்லாரும் மட்டையாகிக்கிடக்க.... ஆரம்பித்தது கூத்து..... ஆழ்ந்த உறக்கத்தில்(உபயம்:கெமி மார்டின்+சுண்டக்கஞ்சி ) இருந்த சூர்யாவின் மண்டைக்குள் சிரிப்பு சத்தங்களும் கிண்டல் குரல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக "மன்னிப்பு கேள்" என்ற குரலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது..... . மன்னிப்பு கேள்ள்...
அந்த மண்டைக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா பாயிலிருந்து எழுந்தமர்ந்து கேக்க முடியாதுடா....என்று எதிரில் யாருமே இல்லாவிட்டாலும் ஆள்காட்டி விரல்காட்டி ஆவேசமாக கத்தினான்... . பிறகு தூக்கம்.... . அரைமணிநேரம் கழித்து..... மன்னிப்பு கேள்ள்..... கைகளை பவ்யமாக கட்டியபடி "கேக்குறேன் கேக்குறேன் கேக்குறேன்"....என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சூர்யா தூங்கிவிட... .
ஒருமணிநேரம் கழித்து மீண்டும்.....மன்னிப்பு கேள்.... டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று ஆவேசமாக சூர்யா கத்த சுற்றி இருந்தவர்கள் எழுந்தமர்ந்து இதை தமாஷாக கவனிக்க ஆரம்பித்தனர்...பகூத் மஜா ஆ ரஹா ஹே..என்றபடி ஹிந்தி எழுத்தாளர் ரசிக்க ஆரம்பித்தார்... . மன்னிப்பு கேள்.... .போடாங்...... . மன்னிப்பு கேள்..... கேட்டுடுடுறேன்..... . மன்னிப்பு கேள்...... பூத்தா மா** என்று சூர்யாவுக்கு தெரிந்த ஒரே எஸ்பன்யோல் வசைமொழியில் திட்ட எஸ்பன்யோல் எழுத்தாளர் சூர்யாவை ஆச்சரியமாக பார்க்கிறார். . சுராத்து வழக்கம்போல இரவு நேரங்களில் நாய்ஸ் கேன்சலிங் இயர்போன் மாட்டியபடி கில்மா படங்களில் வரும் பின்னணி ஒலிகளை மட்டும் தனி ஆடியோவாக மொபைலில் போட்டு கேட்டபடி ரசித்து மகிழ்ந்தபடியே உன்மத்த நிலையில் தூங்குவது வழக்கமென்பதால் வெகுநேரம் சுற்றி நடப்பவை குறித்து தெரியாமல் இருந்தவன் திடீரென்று இருட்டில் ஒரு உருவம் காற்றில் பாக்ஸிங் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்து விழிக்கிறான்.
சூர்யாவின் மன்னிப்பு கேட்கும் படலத்தை கண்டவன் உடனே போன் செய்து "ஆங்.....ஒரு லொபோடமி கேஸ் இருக்கு.சீக்கிரம் வாங்க" என்று துண்டிக்கிறான். இதைக்கேட்ட சூர்யா "எனக்கா லொபோட்டமி?இருடி!உனக்கு வாசெக்டமிக்கு ஏற்பாடு பண்றேன்" என்று யோசித்தபடி போன் செய்து "ஆங்.....ஒரு அரிசி ஆப்பரேஷன் பார்ஸல்.ஆமா!தில்லி எழுத்தாளர் மாநாடு.டார்மிட்டரி நாலு..வாசப்படிலேர்ந்து நாலாவது ஆசாமி.அள்ளிட்டு போங்க" என்று துண்டித்துவிட்டு சுற்றி இருந்தவர்களை பார்த்து "நத்திங்...நத்திங்" என்றபடி படுக்கையில் பம்முகிறான். ****************************************************************************** இன்றைக்கு ஈகிள் டிவியில் நரியா?நாயா? நிகழ்ச்சியில் அடியேன் கலந்துகொள்ள உள்ளேன்.டிவி ஸ்டேஷனுக்கு செல்லும் ஆட்டோ செலவு ரிட்டர்ன் செலவு+சோலா ஷெரட்டன் டின்னர் செலவு என்று வாசகர்கள் எனக்கு தாரளமாக அனுப்பலாம்.குறைந்தபட்ச தொகையாக நூறு டாலர் அனுப்பவும். ****************************************************************************** சுராத்து எழுதிய ஸ்டெப்னி நாவல் சேல்ஸ் பிய்த்துக்கொண்டு போக அதன் தொடர்ச்சியாக "தொப்புளில் ஊசி போடுவது எப்படி?" என்ற மகாமகோ காவியமும் விற்றுத்தீர(எதுதான் விக்குமென்று எவனுக்கு தெரியுது!-கும்மாங்கோ) சூர்யா கடும் வயிற்றெரிச்சலில் இருந்தான்.அவனுக்கு ஆப்படிக்கனுமே!என்றபடி க்விட்டரை ஒப்பன் செய்து "சுராத்து லமுதிகவில் சேரப்போகிறாராம்!கேள்விப்பட்டேன்" என்று ஒரு கீச்சை தட்டிவிட்டுவிட்டு..."இருடி இன்னக்கி நைட்டு உனக்கிருக்கு பூஜை!" என்று அகமகிழ்ந்து தூங்க சென்றான். ****************************************************************************** இருட்டுல யாரு அரிசி ஆப்பரேஷன் ஆசாமின்னு தெரியலையேடா!என்று இரு ஊழியர்கள் குழம்பியபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சூர்யா சுராத்து இருவரும் உச்சா போய்விட்டு மப்பில் வந்து படுக்கும்போது இடம்மாறிவிட்டதால் இந்த குழப்பம்.சரி ரெண்டையும் அள்ளிப்போடு!நமக்கும் எக்ஸ்ட்ரா இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்று சு,சூ ரெண்டையும் மயக்க மருந்து உதவியுடன் ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்து முடித்தார்கள்.அரிசி ஹார்லிக்ஸ் சாத்துக்குடி சுபம். நோ....ஓ...ஓ....ஓ......என்று சூர்யா கதற சுராத்தோ சேதுவாகி விட்டத்தை வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான். ************************************************************************* நாயர் கட இட்லி மட்டும்தான் சென்னைல சிறந்தது என்று தப்பா சொன்னதுக்கு மன்னிப்பு கேள்!
...இது மாணிக் தம்பி பாபி. .................................ஈகிள் டிவி ஸ்டுடியோ........................................... . ஆடியன்ஸ் புடைசூழ. ..நாயா?நரியா? ப்ரோக்ராம். . . . . . சார்...அதுவந்து.... . வந்து போயிலாம் அப்புறம்!மொதல்ல பொய் சொன்னதுக்கும் உங்களோட வாசகர்களை ஏமாத்துனதுக்கும் மன்னிப்பு கேள்.... . என்ன நடந்ததுன்னா... . மன்னிப்பு கேள்...அப்புறம்தான் எல்லாம்... . டேய்ய்ய்ய்...என்று கூட்டத்தில் இருந்து சுராத்து பொங்கி எழ..உடனே இரண்டு பவுன்சர்களின் கவனிப்பில் கப்சிப் ஆகிறான்... . சரி....ன்னிச்சிடுங்க... . இல்லையே...சரியா கேக்கல!சத்தமா என்று தும்பி பட ஆதவன் போல பாபி கேட்க..
மன்னிச்சிடுங்க!மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க!
...சரி...சரி....போதும்.இத்துடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் பாபி சூர்யாவுக்கு கொடுத்த விருந்தை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவன் பிறகுதான் தன்னை பாபியும் மாணிக்கும் வச்சி செஞ்சது மண்டையில் உறைக்க...அப்போதிலிருந்து "மன்னிப்பு-கேள்-கேக்க முடியாதுடா..." ரீல் ஓடிக்கொண்டிருக்கிறது.சூர்யாவின் தளத்திலும் முன்னூற்றி இருபத்தாறு பாகங்களாக மன்னிப்பு கேள் வந்தது. ****************************************************************************** ட்ரிங்...ட்ரிங்....மகா காவிய படமொன்றை ம்யூட்டில் வைத்து ரசித்துக்கொண்டிருந்த சுராத்து போனை எடுக்கிறான்.."யாரு?" டேய் என்னமோ கட்சில செரப்போறியாமே? அண்ணா அது நா இல்லீங்ணா! பின்ன சூர்யா கவீட் பண்ணி இருக்கான்.அது பொய்யா? பொய் தானுங்க! என்னடா நீ டெராபைட் கணக்கா சேத்து வச்சிருக்கும் கில்மா படங்களை இங்கிருந்தபடியே ஒரே செகண்ட்ல டெலீட் பண்ணி காட்டவா? பேயறைந்த மாதிரி அதிர்ந்த சுராத்து அண்ணா அந்த மாதிரி ஆசைலாம் எனக்கு இல்லீங்ணா!என்று கெஞ்சி சமாதானப்படுத்தி போனை வைத்ததுமே அடுத்த ரிங்....இப்படி விடிய விடிய... ******************************************************************************
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
...நள்ளிரவு நேரம். பேகம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் அரிஸ்டாட்டில் சூர்யாவை வச்சு செஞ்சது நினைவுக்கு வர...சூர்யா கத்தியபடி வழக்கம்போல் ஆவேசமாக இருட்டில் பாக்ஸிங் போடுகிறான்.
"பேகம் ஒரு வனஜாதேவி புத்தகம்!"
வ ன ஜா தே வி பு.....த்.. . த...க.....ம்......வனஜாதேவி.....ஜா...ன...வ....வி....தே...... உடனே ஆவேசமாக லேப்டாப்பை ஆன் செய்து அரிஸ்டாட்டிலுக்கு முன்னூற்றியாறு கண்டன கடிதங்களை எழுதி வலையேற்றம் செய்கிறான் சூர்யா. ....அதில் இருந்து சில வரிகள்... . இந்த அரிஸ்டாட்டிலுக்கு தான் பெரிய கஷிமோட்டோ சுகிமோட்டோ என்று நினைப்பு.எடுத்தது வெறும் இரண்டு படங்கள்.முழுக்க அபத்தம்.அவரது படங்களில் க்ராப்ட் இல்லை(காதி கிராப்ட் கடையில் கேட்டிருந்தா கிடைச்சிருக்குமே?-கும்மாங்கோ).வெறும் வெற்று உலக சினிமா பாவனைகளும் அப்பட்டமான காப்பி அடித்தல்களுமே அவரது படங்கள்.... ***************************** அரிஸ்டாட்டில் என்னை அழைத்திருந்தார்.வரமுடியாது என்றேன்.சுண்டக்கஞ்சியும் கருவாடும் வாங்கி வைத்திருப்பதாக சொல்லி முடிப்பதற்குள் அங்கே ஆஜரானேன். காதில் ஹெட்போன் மாட்டிவிட்டு இந்த பின்னணி இசையில் எப்போது சகீலா அறைக்குள் நுழைகிறார் என்று சரியாக சமிக்ஞை செய்யுமாறு சொல்லிவிட்டு ஆடியோவை ஆன் செய்ய ....நான் கண்மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவன் இந்த இடமா என்று ஒரு தருணத்தை குறிப்பிட ஆமாம் என்று பாராட்டினார்!(அப்போ பேகம் நாவலை வனஜாதேவி புத்தகம் என்று சொன்னதற்கு அரிஸ்டாட்டிலை நேற்றுதானே திட்டினார்!இப்போ எப்படி பம்முறார்? என்று கேட்கும் லீனியர் பிலிஸ்டைன் குஞ்சுகள் உத்தமமேகனின் ரசவடை கதைகளை படித்தே சாகுங்கள்-எண்பதாம் நூற்றாண்டின் செத்த மூளை)... .
சரி...வந்தவேலையை செய் என்று சொல்லிவிட்டு குப்புற படுத்துக்கொள்ள நான் அவருக்கு மாலீஷ் செய்துவிட்டேன்-குயில புடிச்சி கூண்டிலடைச்சி கூவ சொல்லுகிற.....ஏய்....ஸ்டாப்....ஜப்பானிய பாடல் பாடு... .....கவாசாகி மியாசகி.....மியாசாகி ஹஷிமோட்டோ......ஹ்ம்ம்...நாலாம் சீலேவுல.... ....ஏய் மூடிட்டு மசாஜ் பண்ணு..ம்...அப்படித்தான்.... **************************************************************************************************************************************************** அடுத்தநாள் இரவு... எழுத்தாளர்கள் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க இப்போது சில சத்தங்கள்.சூர்யா இல்லை.அவன் சப்தநாடியும் ஒடுங்கியவனாக அசைய முடியாது படுத்துக்கிடக்க...பக்கத்தில் ஓணாண்டிப்புலவர் தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தபடி ... என்னமாதிரியான எண்ணையில் சமோசா போடுகிறோம்? என்னமாதிரியான சிமண்டில் பில்டிங் கட்டுகிறோம்? என்னமாதிரியான அரிசி ஆப்பரேஷன்களை செய்கிறோம்? என்னமாதிரியான கட்சிக்கு ஜால்ரா தட்டுகிறோம்? ....இப்படியாக விடாது தலையை சிலுப்பியபடி ஆவேசமாக இருட்டோடு பாக்ஸிங் போட்டுக்கொண்டிருக்க..
பக்கத்தில் உத்தமமேகன் மொபைலில் அந்த அரசியல் வாரிசு கல்லூரி மாணவிகளின் எல்கேஜி கேள்விகளுக்கு ப்ரீகேஜி லெவலில் பதில் அளிக்கும் வீடியோவை அகமகிழ்ந்து பார்த்தபடி...ஆகா!என்ன தேஜஸ்!என்ன ஒரு ஆற்றல்!சிரிக்கும்போது விழும் கன்னக்குழி இருக்கே!இதுக்கே இவரை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கலாம்!என்னன்னே தெரியல !இந்த மனுசனை ரொம்ப புடிக்குதே!ஆகா ஓகோ!
சரி!இந்த டாப்பிக்கை வச்சிக்கிட்டு ஒரு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு பத்தி எழுதி நம்ம சைட்ல போடுவோம்!சடலூர் பீனு இதை சிலாகிச்சி ரெண்டு கோடி வார்த்தைகளில் ஒரு சிறு கடிதம் அனுப்புவான்!நமக்கும் பொழுது போவும்...என்றபடி டைப் செய்யத்துவங்க... இதை ஓரக்கண்ணால் பார்த்த சூர்யா "ஆகா டாபிக் கிடைக்காம ஏதேதோ பெனாத்திட்டு இருக்குறதுக்கு இதே டாபிக்கை நாமும் யூஸ் பண்ணிக்கலாமே!"என்றபடி அந்த அரசியல் வாரிசு போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும்.நாட்டின் எஸ்டிடி பற்றி ஆனா ஆவன்னா தெரியாட்டியும் பரவால்ல!எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்று கடித்ததில் குடித்தது என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதி வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்.(இப்பவாச்சும் வாரிசின் கட்சியில் உள்ள எண்ணற்ற கோஷ்டிகளில் ஒரு கோஷ்டியின் கடைக்கண் பார்வை நம்ம மேல பட்டா ரெமி செலவுக்கு ஆகும் என்ற நப்பாசைதான் என்பதை சொல்லவும் வேண்டுமா?-கும்மாங்கோ)... . அமலாதித்த பல்லவன் எழுந்து அமர்ந்து "ஐயோ!இதுங்க மத்தில மாட்டிகிட்டு நா படுற பாடு போதும்டா!" என்றபடி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். . . ******************************************************************************************************************************* சூர்யா எழுதிய ஒரு பதிவு: .
**ஒரு கிரிமினலின் கடிதம்**
எனக்கு தினமும் ஆயிரம் ஆபாச கடிதங்கள் வருகிறது(எடைக்கு போடலாம்னு பாத்தா எல்லாம் ஈமெயில்!-கும்மாங்கோ)..ங்கோ என்று நேரடியாக திட்டும் கடிதங்கள் எவ்வளவோ மேல்.ஆனால் இதுபோன்ற கடிதங்கள்தான் இந்த பிலிஸ்டைன் சமூகத்தின் புண்ணை படம் போட்டு காட்டுகிறது.இதோ கடிதம். .
எடே சாரு, எப்போ பாத்தாலும் சூபிக்கள் ரூமி என்று ஜல்லி அடிக்கிற.ஆனா அதே ரூமி எழுதுன மஸ்னவி தொகுப்பில் இனவெறியும் கொலைவெறியும் இருப்பது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?இதோ ஆதாரத்தை அட்டாச்மென்டில் கொடுத்துள்ளேன்.
BTW மன்னிப்பு கேள் எபிஸோட் நடந்து 11 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
-இப்படிக்கு பறிக்கி.
. * சூபிக்கள் என்று நான் சிலாகிப்பதே ஒரு பக்கெட் பிரியாணிக்குதான்.தவிர நான் வரலாறு என்று எழுதுவதெல்லாம் எனக்கு தோன்றுவது மட்டுமே.அதை நிஜத்தோடு ஒப்பிடுவது என்னை வன்கலவி செய்வதற்கு சமம்.இந்த கடிதத்தை பாலிஸ்தான்தாசன்- பனடா பிரதமர் புருடோவுக்கு அனுப்பியுள்ளேன்.அவர் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.டேய் பறிக்கி குஞ்சு உனக்கு இருக்குடா ஆப்பு! . ********************************************************************************************************************************
சீச்சீ....துத்தூ....பொப்போ......
சுராத்துவின் இந்த ஸ்டேட்டசுக்கு ரெண்டாயிரம் லைக் மற்றும் ஆயிரம் ஷேர்.

Friday, 15 January 2021

கோலிவுட் ரவுண்டப் 5.0

 Pituitary warning: சிகரெட் பிடித்தல் உயிரை கொல்லும்.புடிக்காம இருந்தாலும் வேற எதாச்சும் காற்றில் பரவி கொல்லும்!

.
டுமீல்.....டிஷ்.......டமால்.....dispararle a la muerte...

 டப்.....டுப்....

...............

.Shoot...Shoot.....
.
அமேசான் அடர்ந்த காட்டின் நடுவே...
மம்பு  ஓடிக்கொண்டிருக்க பின்னால் அமேசான் வன பாதுகாப்புப்படை....
.
ஐயோ!இந்த குகீந்திரன் பேச்சை கேட்டது தப்பா போச்சே...
.
டுமீல்...
..பின்னாலிருந்து வந்த புல்லட் ஒன்று மம்புவின் முன் மண்டையின் கற்றை முடியை கழட்டிக்கொண்டு போகிறது....
.
போச்சா!இனி "அவரு" மாதிரி பேட்ச் விக் வச்சித்தான் நடிச்சாகணும்!ஏற்கெனவே அக்ரமை போட்டு  காஜராட்டைன்னு வச்சு செஞ்சதை பாத்தப்பவே நா உசார் ஆகியிருக்கணும்!இப்ப பாரு முன்னாடி க்ளார் அடிக்கும்படி ஆகிப்போச்சே.....
.
லோக்கல்ல அழகா என்னோட வீட்டு பாத்ரூம்ல  டீசருக்கான சீனை எடுக்கலாம்னு சொன்னதை வேணாம்னுட்டு அமேசான் காட்டில் அனகோண்டாவை உசுரோட கையில புடிக்குறமாதிரி காட்டுனாத்தான் த்ரில்லுன்னு சொன்ன அந்த டைரக்டர் எங்கடா....என்றபடி புதருக்குள் மறைந்து ஓடுகிறார்....
.
நாம் அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆனோம்.
.
******************************************************************************
அடுத்து அடுத்து சென்றது பல்பேட்டா ஷூட்டிங் ஸ்பாட்.... கொருக்குபேட்டை ஜிம்...

.
பஞ்சித்: ம்...அப்டிதான் மாம்ஸ்....உன்னும் வெறும் ஆயிரம் ஸ்குவாட்தான் மிச்சம்.....
.
 கார்யா: .....நுரை தள்ளியபடி......  "அய்யய்யோ.......ஜாலியா நொந்தானத்தோட காலேஜ் வாசல்ல கிரவுண்ட்நட்  போட்டுக்கிட்டு இருந்தவனை  இப்படி பெண்டு நிமித்துறியே மச்சி...இது நாயமா?


.
பஞ்சித்: இன்னா தல மெர்சல் ஆவாத பண்ணு.நெக்ஷ்ட்  இயர் கீட் எக்ஜாம்ல "நீ எத்தினி வாட்டி தண்டால் எட்த்த" ....அத்தான் கொஷின் ஆ வரப்போவுது...
.
கார்யா: ஆமா ஒரு சிங்கிள் க்வெஸ்டின்....அதுக்காக மொத்தமா ஆல்  பாடி பார்ட்ஸும் டேமேஜ் ஆகிடும் போலயே!....அய்யய்யோ என்று அலறியபடி மீண்டும் ஸ்க்வாட்ஸ்!
.


***********************************************************************************************************
அடுத்து நாம் சென்ற இடத்தில் தேய்ந்து போன ரெகார்டாக ஒரு வருடமாக  ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..

 

..லை....ப்.....இ....கர்ர்...ர்ர்ர்ரர்.....ஸ்....வெ....கர்ர்ர்ர்.....ரி....ஷா....ர்ர்ர்...ட்....ந....கர்ர்ர்ர்....ண்பா..........
.
கவுண்டர்: எந்த நேரத்துல வாய வச்சாங்களோ!ஒலகத்துல பாதி பேர் மேல டிக்கட் வாங்கிட்டான்....சரி இங்கேர்ந்து மொதல்ல ஜூட் விடுவோம்...
.
********************************************************************அடுத்து அஜய் கேதுபதி வீடு...கணசிங்கம் என்ற கிங்கள பெயர் தலைப்பை மாற்றக்கோரி வீட்டின் முன்பு நூறு பேர் மல்லாக்க படுத்து மறியல் செய்துகொண்டிருக்க இடையில் இருந்த கேப்பில் கால் வைத்து ஜம்ப் பண்ணி நாம் உள்ளே சென்றோம்....
.
அஜய் கேதுபதி முகமூடி அணிந்து நம்மை வரவேற்கிறார்...
.
கவுண்டர்: ...ண்ணா ......ஒரு டவுட்டு...
.
அ.கே: சொல்லுங்கஜி..
.
கவுண்டர்: போன வருசம் பாஸ்டர் ஆடியோ ரிலீஸ் பங்க்சன்ல ஒண்ணு சொன்னீங்களே நியாபகம் இருக்கா?
.
அ.கே:ஜி....சாரிஜி.....நியாபகமில்ல...
.
கவுண்டர் :(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒரு வாரத்துக்கு பத்து படம்னு கால்ஷீட் குடுத்துட்டு இருந்தா எப்படி நியாபகம் இருக்கும்....ஆ...அது வந்துங்ணா...."நம்ம மனசு சுத்தமா இருந்தா எதுக்கும் நாம பயப்பட வேண்டியதில்லைன்னு சொன்னீங்க.ஆனா நீங்க ஏனுங்ணா முகமூடி போட்டிருக்கீங்க?உங்க மனசு சுத்தமில்லையா?
.
அ.கே:...து...அது...வந்துஜி......
.
கவுண்டர்:க்கும்...தமிழ்நாட்ல மைக்கும் மேடையும் கெடச்சிட கூடாது!சகட்டுமேனிக்கு அடிச்சி விடவேண்டியது...என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டா பம்ம வேண்டியது!அவனவனுக்கு தெரிஞ்சத செய்ங்க!உனக்கு என்ன தெரியும்?
.
அ.கே:து....வந்து......
.
கவுண்டர்: கேக்கக்கூடாத கேள்விய கேட்டுட்டேன் போல!சரிங்ணா நீங்க வழக்கம் போல மேடைல மைக்க புடிச்சு ஆட்டையாம்பட்டி அரசியல்லேர்ந்து ஆப்ரிக்க அரசியல் வரைக்கும் சகட்டுமேனிக்கு அடிச்சி உடுங்க!இப்ப என்ன ஆளை உடுங்க!
.

*******************************************************************************
அடுத்து கலிமை ஷூட்டிங் ஸ்பாட்....
.
எந்த வருசம் ஷூட்டிங் ஆரம்பித்தது என்பதையே மறந்துபோய் காலமற்ற ஒரு வெளியை உள்ளே செல்லும்போதே நாம் உணர்ந்தோம்.
.
நுழைவாயிலில் ஒருவர் தலையை பிய்த்துக்கொண்டு உக்காந்திருக்க...என்ன என்று கேட்டதில் தான் கன்டின்யுவிட்டி பாக்கும் ஆசாமி என்றுசொல்ல விவரம் புரிந்து உள்ளே சென்றோம்.
.
பத்து பைக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக பாய்ந்துகொண்டிருக்க நமக்கு எந்த சேதாரமும் வந்துடக்கூடாது என்ற சுயநலத்தில் எஸ்கேப் ஆனோம்!
.

**********************************************************************************
அடுத்து ரெண்டாயிரத்தில் ஒருவன்  பட ஸ்பாட்.

வழிநெடுக கும்மிருட்டு.ஆங்காங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் தொங்க ரத்தவாடை....


யார்னா இருக்கீங்களா?


ஊ ஊ ஊ என்று ஊதக்காத்து......

 
யார்லாம் இருக்கீங்க?
கும்மிருட்டில் இரண்டு கண்கள் மட்டும்.....
நெல்லாடிய நிலமெங்கே .....
கவுண்டர்: அதெல்லாம் பிளாட்டு போட்டு வித்தாச்சுங்ணா
சொல்லாடிய அவையெங்கே?
கவுண்டர்: அதெல்லாம் ஷாப்பிங் மால் ஆகிடுச்சு!
வில்லாடிய களமெங்கே?
கவுண்டர்:கேட்டட் கம்யூனிட்டி!ஆ நெக்ஸ்ட்...
கல்லாடிய சிலையெங்கே
கவுண்டர்: இதுக்கு கவுன்டர் அடிச்சா வீண் வம்பு!கப்சிப்!
தாய் தின்ற மண்ணே.. தாய் தின்ற மண்ணே....
கவுண்டர்:(கனுசுவின் தலையை பிடித்து ஆட்டியபடி) ஏன்டா பெத்த தாய்க்கு சோறுபோடாம மண்ணை திங்க வச்சிட்டு பெருமையா பாட்டு வேறையா?
. தா தீம்த.. திகு தக..
தா.. திரனன தா.. ஜிகு தக தா..

.
கவுண்டர்: ஓ!தமிழ்ல பாடுனா கலாய்க்கிறோம்னுட்டு துளு மொழில அளக்குறான்.....அடங்கப்பா முடியலடா!எஸ்கேப்!
.

*********************************************************************************
அடுத்து கூர்யா எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்...எது டிராப் ஆச்சு என்று எதுவுமே புரியாதநிலையில் அவர் வீட்டுக்கே சென்றோம்.வாசலில் பிவக்குமார் " செல்போனை எங்கிட்டே குடுத்துட்டு உள்ள போ ராஜா..ஆ ஆ " என்றுசொல்ல  கீழே விழுந்தால் பிக்ஸல் தெரிச்சிடும் என்ற முன்யோசனை பயத்தில் பவ்யமாக அவரிடம் மொபைலை குடுத்துவிட்டு உள்ளே செல்கிறோம்..நூறு காலர் வச்ச ரவிக்கையும் நூறு காட்டன் புடவையும் பண்டலாக வந்து இறங்க...ஓ!ககுந்தலா தேவி ரீமேக் என்று புரிந்து அதை கடந்து சென்றோம்

தகச்சிக்கு தகச்சின் ....தகச்சிக்கு தகச்சின்....தகச்சிக்கு தகச்சின்....ரட்டட்ட....தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...ரட்டட்டட்

.
என்னாதிது?போதிகாதான் சோலோ படத்துல மட்டும்தான நடிக்கிறாங்க?அப்புறம் எப்படி புஷி பாட்டு?என்று குழம்பியபடி உள்ளே சென்றால் அங்கே பட்டாபட்டியோடு கூர்யா சேறுபூசியபடி நிற்க ரெண்டு பக்கமும் ரெண்டு அல்லக்கைகள் பயர் எஞ்சின் ஹோஸ் வைத்து தண்ணீரை பீய்த்து அடித்துக்கொண்டிருந்தார்கள்...


.
கூர்யா:...ம்...அப்படித்தான்!நல்லா வேகமா அடிங்க!காடிவாசல் படத்துக்காக மெனக்கெட்டு ரெண்டு மாசமா சேத்துளையும் வெயில்லயும் நின்னு ரெடியானா படம் ட்ராப்புன்னுட்டாங்க!அடுத்து சிட்டி சப்ஜக்ட்!பழையபடி ஜூஸ் குடிச்சு தெளியவச்சிட்டுதான் நடிக்க போகணும்!ம்....அப்படித்தான் அப்படியே ரெண்டு இன்ச் வலது இடுப்புல ஃபோர்சா அடி....அப்பாடா...
.
கவுண்டர்: ஏனுங்கணா எதுக்கு அப்படி செய்ய சொல்றீங்க?
.
கூர்யா:காடிவாசல் கேரக்டரோட முகபாவம் எப்பவும் கல்லடைப்பு வந்தவன் மாதிரி இருக்கணும்னு டைரக்டர் சொன்னாரு!அதான் நெஜமாவே....
.
கவுண்டர்: ஆங்!புரியுதுங்!டேய் அல்லக்கை...போய் அண்ணனுக்கு பழம் வாங்கிட்டு வா!ஒண்ணு இங்க இருக்கு!இன்னொன்னு இதான்னு சொன்னான்னா நடக்குறதே வேற!ஓடு!
.
பிவக்குமார்: என்ன இங்க சத்தம்?
.
கவுண்டர்: பம்மியபடி...ஒண்ணுமில்லீங்!என்றபடி வெளியேற நாமும் அவரோடு எஸ்கேப்!
.




********************************************************************************
அடுத்து செக்கந்தராபாத்தில்  ஒரு ஷூட்டிங்  ஸ்பாட்.நுழைவாயிலில்  பெரிய பலகையில்...

ஷூட்டிங் நேற்று நடந்தது.....இன்னக்கி நடக்கல...நாளைக்கி....!!!!!

 

 

என்று எழுதியிருக்க...

.
கவுண்டர்: இஹாஹாஹா என்று நக்கலாக சிரித்தபடி கடந்துசெல்ல நாமும் பின்னால் பம்மினோம்.

**********************************************************************************

அடுத்து காசர் எழுந்தருளும் பாழ்வார்பேட்டை சென்றோம்.....

வழிநெடுக பேனர் கட்டவுட் தோரணங்கள் துண்டுசீட்டு..இத்யாதி...இத்யாதி....

.

அல்லக்கைகளை தாண்டி உள்ளே செல்லவே மூன்று மணி நேரமாகிவிட்டது!உள்ளேயும் பெருங்கூட்டம்.கூட்டத்தின் இடையே லேசாக கிடைத்த இடைவெளியில் எட்டி பார்த்ததில் காசர் டாஸ் போட்டுக்கொண்டிருந்தார்...

...கிண்டியன் 2 ஷூட்டிங் போகணுமா?இல்லாட்டி அக்ரம் ஷூட்டிங்கா?

.


 

டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......

 

நாணயம் காசரின் பேச்சு போல மையமாக நிற்க.....சிறிதுநேர அமைதிக்கு பிறகு...பிரச்சாரம்!ஆரம்பிக்கலாங்களா? என்று கூறியபடி அடிப்பொடிகள் சூழ வெளியேறுகிறார்.

Sunday, 1 March 2020

கோலிவுட் ரவுண்டப் 3.0


முதலில் நாம் சென்றது நெற்றிமாறன் இயக்கி கூர்யா நடிக்கும் வாடியவாசல் பட ஸ்பாட்டுக்கு.
.
நெற்றி: சேறும் சகதியுமாய் ஒரு குட்டையில் இருந்து எழுந்து வரீங்க!அப்படியே டைட் க்ளோசப்பில் கேமராவை பார்த்து “படிய்யா!படிடா டேய்!படிச்சு தொலைடா எருமை!” ன்னு ஆவசேமா அனல் தெறிக்க பேசுறீங்க!
.
கூர்யா: க்கும்!படம் பாக்க தியேட்டருக்கு வரவனே ஸ்கூல் காலேஜ் பசங்கதான்!நாம படிடா!கடிடா!ன்னு கடிச்சிட்டு இருந்தா எந்திரிச்சு ஓடிடுவான்!

நெற்றி: ஓடட்டும்லா!படம் ஓடாட்டி எனக்கென்ன?எசகுபிசகா எதையாவது ஒரு படம் எடுத்துட்டு கடைசில இப்படி ஒரு அட்வைஸ் பண்ணாத்தான் ஒலக விமர்சகன் படத்தை ஒலகசினிமாம்பான்!எனக்கும் மாசிய விருது கிடைக்கும்!

கூர்யா: அப்போ எனக்கு?

.
நெற்றி: இந்தாங்க சங்கு!டைட் க்ளோசப்பில் அட்வைஸ் பண்ணிட்டு அப்படியே இந்த சங்கை ஊதிய மேனிக்கு அப்படியே மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் ஒரு புள்ளியா மறைஞ்சு போகுற வரைக்கும் காட்டி எண்டு கார்ட் போடுறோம்!
.
கூர்யா (மைன்ட் வாய்ஸ்): க்கும்!ஏற்கெனவே என்னோட மார்க்கெட் அந்த நிலைமைலதான் இருக்கு!இதை இவன் நேரடியாவே சீனா எடுக்க போறானாம்!யப்பா மிடில!
************************************************************************************************************************.
அடுத்து கங்கட் கிரபு இயக்கி மம்பு நடிக்கும் மான்ஆடு பட ஸ்பாட்!
மாலை 6 மணி.
கங்கட் கிரபு: யப்பா ஒருவழியா தெளிஞ்சி கிளிஞ்சி நாமதான் கடைசியா ஸ்பாட்டுக்கு வந்தோம்னு நினைச்சா மம்பு நமக்கு மேல இருக்கான்!சரி அட்ஜஸ்ட் பண்ணுவோம்! டேய் மேக்கப்பு! அந்த தொப்பையும் தொந்தியுமா இருக்குற எக்ஸ்ட்ராவை புடிச்சு பெருசா தாடி ஒட்டி குல்லா மாட்டி கூட்டியா!லாங் ஷாட்ல எடுத்து மம்புன்னு ஒப்பேத்துவோம்!
.
எக்ஸ்ட்ரா வந்ததும்
கங்கட் கிரபு: ம்ம்...ஓகே!அப்படியே மேரா நாம் அப்துல் ரகுமான்!மேரா நாம் அப்துல் ரகுமான்னு பாடிகிட்டே விரலை நல்லா வளைச்சு நெளிச்சு அபிநயம் பண்ணு!
எக்ஸ்ட்ரா: மேரா நாம் அப்துல் ரகுமான்!! மேரா நாம் ஏ.ஆர்.ரகுமான்!! மேரா நாம் ஏ.ஆர்.முருகதாஸ் !!!!!
அசிஸ்டன்ட்:சார் லிப் சிங்க் ஆகல!
.
கங்கட் கிரபு:ஆகாட்டி போகட்டும்!எடுத்தவரைக்கும் எடிட்டிங் கொண்டுவா!அங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்!என்று சொல்லிவிட்டு மம்புவுக்கு போன் செய்கிறார்.யாரு மம்புவா?
.
மம்பு: ஏய்ய்ய் மம்பு இல்ல!எம்டிஆர் னு சொல்லு!
.
கங்கட் கிரபு:ஓ எம்டிஆரா?எரடு மசாலா  தோசா த்வரிதா  தரலு!
மம்பு: என்னையே கலாய்க்கிறானுங்களா!இரு வச்சிக்கிறேன்....ஹலோ கங்கட்ஜியா?நா இப்ப வெயிட் ரிடக்ஷன் ப்ரோக்ராமுக்கு மலேசியா வந்திருக்கேன்!இங்க பாத்ரூம்ல க்ரீன் மேட் தொங்கவிட்டு அப்படியே நா செல்பி கேமராவுல வசனத்த பேசிடுறேன்!நீங்க  அந்த பக்கம் பேஸ்டைம்ல அதை அப்படியே ரெகார்ட் பண்ணி யூஸ் பண்ணிக்குங்க.
.
கங்கட்: இங்க எக்ஸ்ட்ரா வாயசைச்சத லிப் சிங்க் பண்ணனும்!அதுக்கு மம்பு பாத்ரூம்ல டப்பிங் பேசி அனுப்புன ஆடியோவை அதுல ஒட்ட வக்கணும்!அது பத்தாதுன்னு க்ளோசப் ஷாட் எல்லாம் பேஸ் டைம் ரெகார்டிங் வச்சி முடிக்கணும்!ஸ்ஸ்ஸ்ஸ்....சப்பா!இன்னக்கி பேக்கப்!வழக்கம் போல மில்லி ஊத்துனாத்தான் சரியா வரும்!

கிரேம்ஜி:ஆடியன்சை எவ்வளவோ டார்ச்சர்  பண்ணிட்டோம்!இதை பண்ண மாட்டமா?


.
தயாரிப்பாளர்: (தலையில் துண்டோடு) அடேய் அவன் என்னடான்னா ஸ்பாட்டுக்கே வர மாட்றான்!இவன் என்னடான்னா ஆறு மணிக்கு வந்துட்டு ஏழு  மணிக்கு ஜூட் விட்டுட்டான்!அப்போ சாமிப்படம் முன்னாடி சத்தியம் காண்டிராக்ட் பேப்பர்ல கையெழுத்து எல்லாம் சும்மாவாச்சுகுமா!
.
*********************************************************************************
 அடுத்து பஞ்சித் இயக்கி கார்யா நடிக்கும் படத்தின் ஸ்பாட்....
.
பஞ்சித்: நீங்க இப்ப இன்னா பண்றீங்கன்னா.....
கார்யா:அன்னா மச்சி?இப்ப நா நார்த் மட்ராஸ் ஏரியாவுல வாழுற கேரக்டர்.பாக்ஸர்.லேண்ட் இஸ் அவர்ஸ்...க்ளைமேக்ஸ்ல ஒரு டுப்பாக்கி குண்டு!கரக்ட்?
.
கஞ்சித்: அதானுங்க!இன்னா நா சொல்றதுக்கு மின்னாடியே கரீட்டா சொல்றீங்கோ!அசிஸ்டன்ட் யார்னா கத சொன்னாங்களா?
.
கார்யா: இல்ல மச்சி!உன்கிட்ட இருக்குற ஒரே கத அதான?
.
கஞ்சித்: இன்னாதிது!நம்ம தொழில் ரகசியத்த அக்கூரேட்டா புரிஞ்சி வச்சிகிறாரு?இவராண்ட இனிமே உசாரா இருக்கோணும்! 
.
*******************************************************************************************************************

அடுத்து பெயரிடப்படாத ஒரு படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றோம்!
 .
இருளோ என்று இருக்க அறையின் மூலையில் ஒரு  கேமரா ஓடிக்கொண்டிருக்க லைட்பாய், கேமராமேன், டைரக்டர், நடிகர் என்று எவரையும் காணாததால் சற்று பீதியடைந்து அங்கிருந்து ஜூட் விட எத்தனித்த நிலையில் கூரையில் இருந்து ஒரு குரல்!

ஆஸ்கர்!ஆஸ்கர்!ஆஸ்கர்!

ஓ!விவரம் புரிந்தவாறு நாம் அண்ணாந்து பார்க்க அங்கு கம்பிகள் உதவியோடு மூர்த்திபன் தொங்கியபடி இன்னொரு கேமராவை கீழ்நோக்கி போகஸ் செய்தவாறு கையசைக்கிறார்!
மூர்த்திபன் :இந்த முறை என்ன வித்தியாசம்னா....
உதயா: நீங்க சொல்லாமலே தெரியுது!எந்த நடிகர் நடிகையுமே இல்லாம ஒரு படம்!
மூர்த்திபன் :அதே!ஆஸ்கர் நிச்சயம்!தங்க கரடி லட்சியம்! என்றவாறு போகசை அட்ஜஸ்ட் பண்ண நாம் வெளியேறுகிறோம்!

*************************************************************************************************************************கடைசியாக போகேஷ் ஜனகராஜ் இயக்கி அண்ணா நடிக்கும் பாஸ்டர் பட ஸ்பாட்!
அண்ணா
இன்னா நீ சொல்லு
 நா வந்தா தில்லு
காலுல முள்ளு
போவாத நீ தள்ளு
என்று முனகியபடி இருக்க...
போகேஷ்: அப்படியே உங்க மகன்..
அண்ணா: மகன் வேண்டாம்!மள்னு வய்யி!அப்பத்தான் செண்டிமெண்ட் பலமா ஒர்க்கவுட் ஆகும்!
போகேஷ்: சரிங்ணா!உங்க மகளை நீங்க பாத்து பத்து வருஷம் ஆகுது!இந்த பத்து வருஷம் நீங்க கஞ்சா கடத்தியதால் உள்ள போயிட்டீங்க!
அண்ணா: அட என்னைய்யா!சும்மா ஜெயிலு விலங்கு நொய்யின்னிட்டு!!வேணாம்!காலேஜ் அட்மாஸ்பியர் போ!
போகேஷ்:ஆங்!சரிங்!நீங்க காலேஜ் ப்ரொபசர்!ஆனா டை கட்டி ஷூ போட்ட ப்ரொபசர் இல்ல!அழுக்கா கருப்பா கலீஜா வந்து...... அப்படி டெரரா நிக்குற ப்ரொபசர்!
அண்ணா:ஆங்!இது ஓகே!அப்படியே மேல போ!

போகேஷ்: நீங்க தினம் புல்லா ஏத்திகிட்டு கிளாஸ்ல குட்டி கத சொல்றது வழக்கம்!அதுக்கு பயந்துகிட்டே எவனும் க்ளாஸுக்கு வர மாட்றான்!
அண்ணா: ஆங்!இங்க ஒரு சாங்!அது எல்லாருக்கும் தெரியும்!மேல போ!
போகேஷ்: இதனால காலேஜ் நிர்வாகம் உங்கள சஸ்பென்ட் பண்ணுது!இது தெரிஞ்சி காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கொதிச்சி எழுறாங்க!
அண்ணா: அதான் நா கிளாசே எடுக்காம அறுக்குறேன்!அப்புறம் எதுக்கு இவனுங்க கூவுறாங்க?
போகேஷ்: நீங்க கிளாசே எடுக்காம அறுக்குரதால தான் அவங்க அந்த நேரத்துல ஜாலியா கேண்டீன்ல அரட்டை இன்னும் ரெண்டு அவர் கட் பண்ணிட்டு சினிமானு  இருக்காங்க!வேற வாத்தியார் வந்து கிளாசை ஒழுங்கா எடுத்தா இதெல்லாம் முடியுமா?
அண்ணா: ஆங்!பாயின்ட்!இப்ப ஒரு பெரிய உள்ளிருப்பு போராட்டம்!எனக்காக மாணவர் தலைமையில்!இல்லையா?
போகேஷ்:ஆமாங்ணா!
அண்ணா: அப்படியே பாகிஸ்தான்ல இருக்குற நாப்பதாயிரம் தீவிரவாத முகாமில் இருக்கும் எல்லா அப்பாவிக்கும் இங்க க்ரீன் கார்டு கொடுக்கணும்னு குரல் கொடுக்குறேன்!கொடுத்த மேனிக்கு...
இருவிரல் கிருஷ்ணாராவ்!
ஆகிடுச்சே நாடு (இ)ராவ்!
உட்டுகினேன் நா ராவ்!
ப்ரோபசரில் நான் வாவ்!
இப்படி ஒரு பாட்டு அப்படியே மழை எபெக்ட்ல!ஈரோயினிக்கு வேற எந்த சீனும் இல்ல!அதனால இந்த பாட்டுல கூட ஆடுறாப்ல!
போகேஷ்: சரிங்ணா!
அண்ணா: அப்படியே அடுத்த சீன்ல டெல்லிக்கு போறோம்!அங்க நான்!எதிர்ல க்ரம்ப்!
போகேஷ்: அவரு எப்படி?
அண்ணா: அது அப்படித்தான்!ரெண்டே நிமிஷம் பேசுறேன்!க்ரீன் கார்ட் இல்ல ரேஷன் கார்ட் கூட கிடையாது  என்கிறார் க்ரம்ப்!!எல்லாரும் என்னை அமெரிக்க அதிபர் தேர்தல்ல க்ரம்ப்க்கு எதிரா  போட்டியிட சொல்றாங்க!நா மறுத்து “க்ரீன் கார்ட் கண்டிப்பா கொடுப்பேன்!தீவிரவாதிகளுக்கு மூணு வேலை பிரியாணி போட்டு கைகால் அமுக்குவேன்” என்று உறுதியளிக்கும் பர்னி பாண்டரஸ்க்கு வாய்ஸ் கொடுக்குறேன்!அவர் ஜெயிக்கிறார்!அமெரிக்காவே என்னை தலைல வச்சிக்கிட்டு கொண்டாட திரும்ப நான் கிளாஸ்ல குட்டி கத சொல்ல ஆரம்பிக்க..... அப்படியே ஃப்ரீஸ் பண்ணி முடிக்கிறோம்!




Thursday, 3 January 2019

கோலிவுட் ரவுண்டப் 3.0


முதலில் நாம் சென்றது பன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சேட்ட படப்பிடிப்பு தளத்திற்கு.
வழியில் இரண்டு பவுன்சர்கள் வழிமறித்து "சேட்ட கராக்!!!" என்று சத்தமாக மூன்று முறை சொல்லவைத்து அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் உடனே அப்லோட் செய்தனர்.பணியாற்றும் தொழிலாளர்கள் டெக்னீசியன்கள் எல்லார் தலையிலும் சேட்ட கராக் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.இதையெல்லாம் ஒருவாறு தாண்டி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றோம்.
மூர்த்தி குப்புராசு கஜினியிடம் காட்சியை விவரித்து கொண்டிருந்தார்.

மூர்த்தி குப்புராசு: தலைவா இந்த படத்துல நீங்க செம கெத்தான டான்.ஊரே உங்களை பாத்து நடுங்குது.ஆனா வார்டன் ரோல்ல அமைதியா இருக்கீங்க.அப்புறம்...
கஜினி இடைமறித்து: அஜய் கேதுபதி ஒரு காலேஜ் ஸ்டூடன்ட். தான் ஒரு வளர்ந்துவரும் உதவி டைரக்டர் என்றும் அடுத்து தானே ஒரு பயங்கர தாதாவின் கதையை படமா எடுக்க போறதாவும் கேரக்டர் ஸ்டடி பண்ணுறதுக்காக எங்கூட இருக்க பர்மிஷன் கேக்குறா மாதிரி சீன்!அதான?
மூர்த்தி: நம்மகிட்ட இருக்குற ஒரே கதை அதான்.இப்படி அதையும் மைன்ட் வாய்ஸ்ல கண்டுபிடிச்சிட்டாரே! சார் இல்ல அதுவந்து...
கஜினி: இரு கண்ணா...இன்னும் இருக்கு...அவன் கேடக்டர் ஸ்டடி பண்ணுறேன்னுட்டு கெத்தா ஒரு வார்டனா இருக்கும் என்ன கிமிரு பட வெடிவேலு மாதிரி டம்மி வார்டனாக்கிடுறான்.  
மூர்த்தி: எந்த பால் போட்டாலும் கோல் போட்டுடுறாரே!
கஜினி: பால் போட்டா எப்படிடா கோல் போட முடியும்?சிக்ஸ் அடிக்குறேன்னு சொல்லு!
மூர்த்தி: மைன்ட் வாய்ஸ் அவ்வளவு சத்தமாவா கேக்குது?
கஜினி: இஹா ஹா ஹா ஹா நீ சத்தாமாதாண்டா இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த வெண்ண!ஆளாளுக்கு என்ன கெத்து டானா காட்டுறேன்னுட்ட்டு கோமாளியாக்கிட்டு இருக்கீங்க.இப்படித்தான் இதுக்கு முன்னாடி பஞ்சித் ரெண்டு படத்துலயும் கெத்து டான்னு சொல்லிட்டு கடைசில ஏதோ ஒரு நாய் வந்து என்ன சுட்டு கொல்லுறாப்ல டம்மி பண்ணான்.ஏண்டா உங்ககிட்ட வேற எந்த கதையுமே இல்லையா?அசிஸ்டன்ட் டைரக்டரா இல்லாம நேரா குறும்படம் எடுத்துட்டு வந்தா இப்படித்தான் சரக்கு சீக்கிரம் காலியாகிடும்.நீ ரீ.காஜேந்தர் கிட்ட கடைசி அசிஸ்டன்ட்டா சேரு போ!
.
அடுத்து பசுவாசம் படப்பிடிப்பு.
பெருத்த கிவா: கல நீங்க பல  வருசமா போலீஸ்-தாதா  ரோல்கள மட்டும்தான் மாத்தி மாத்தி பண்ணிட்டு இருக்கீங்க.போன படத்துல நீங்க போலீஸ்.அதனால இந்த படத்துல நீங்க தாதா!
கஜீத்: யு மீன் லைக் பில்லா?
கிவா: இல்ல தல.அது சிட்டி கெட்டப் இது கிராமத்து கெட்டப்.
கஜீத்: லைக் இன் வேலர்?
கிவா: ஆமா தல கீரம் படத்தையே புதுசா அவன்ல சுட்டு குடுக்க போறோம்
கஜீத்: சோ நோ பைக் ஸ்டான்ட்ஸ்?
கிவா: அது இல்லாம எப்படி கல?வழக்கமா பேக் வீல்ல வண்டிய ஓட்டுவீங்க..இந்த படத்துல ஹீரோயினை வில்லன் கார்ல  கடத்திட்டு போயிடுறான்.நீங்க பரபரன்னு சுத்தி முத்தி பாக்குறீங்க.ஒரு மெக்கானிக் ஷாப்ல மெக்கானிக் ஒரு பைக்கை சர்வீஸ் பண்ணிட்டு இருக்கான்.பேக் விலை கழட்டி ட்யூப் செக் பண்ணிட்டு இருக்கான்.நீங்க உடனே அந்த பைக்க பிரண்ட் விலை மட்டும் ரோட்டுல பதிச்சு வேகமா போய் வில்லனை மறிச்சு துவைக்குரீங்க.
கஜீத்: ஹவ் இட்ஸ் பாசிபிள் யா?எஞ்சின் இஸ் அட்டாச்ட் டு பேக் வில் ஒன்லி.
கிவா: அதெல்லாம் நம்புவாங்க கல.க்ரீன் மேட் போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.எதாச்சும் புதுசா பண்ணாட்டி ஜனங்க மறந்துடுவாங்க
.
அடுத்து இதயநிதி தயாரித்து நடிக்கும் புஷ்கின் இயக்கம் பொய்க்கோ ஷூட்டிங் ஸ்பாட்.
இதயநிதி வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி கட்டி மேலே ஒரு துண்டு.
புஷ்கின்: துண்டை நல்லா பின்னாடி இழுத்து விடு.டிக்கி கிட்ட வரைக்கும் வரணும்....ம்ம்..அப்படித்தான்.
இதயநிதி: ஐ ஆப் தி லவ் ஆப் தி பாலிங் ஆப் தி...
புஷ்கின்: ஆக்சுவலி நீ என்ன வேணும்னாலும் உளறிக்க.நா காலுக்குத்தான் ஷாட் வைக்க போறேன்.
இதயநிதி: ஜி இந்த படத்துல எனக்கு ஜோடி யாருஜி?
புஷ்கின்: ஜோடியா?நீயே ஒரு பொய்க்கோ கேரக்டர்!கடைசி வரைக்கும் தனியாத்தான் நிக்கணும்!
இதயநிதி: மைன்ட் வாய்ஸ் : ப்ச்...டென்தாரா பன்சிகா கஜீனான்னு மஜாவா நடிச்சிட்டு இருந்தேன். இப்ப இப்படி காய உடுறாரு!தகப்பருக்கு ஒரு மைக்கோனா எனக்கொரு பொய்க்கோ!வந்து வாய்க்குதுங்க!
புஷ்கின்: கைல வயலினை புடி...தலைய கவுரு...ம்...அப்படியே லைட்டா கைய மேலையும் கீழையும் அசை...ம்..அப்படிதான்...
....நாம் எஸ்கேப் ஆனோம்!
.
அடுத்து பஞ்சித் இயக்கத்தில் டென்தாரா நடிக்கும் நீலா.
படப்பிடிப்பு தளமே முழுக்க நீல பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது.பணியாளர்கள் எல்லாரும் நீல பேண்டு சட்டை போட்டிருந்தனர்.
கதுல் புல்கர்னி : நீலா!கைசா நாம் ஹே ரே?
பமுத்திரகனி: நீலான்னா நீலம்.கிஸ்ஜே கூர்யாவுக்கு புடிச்ச கலர்.
அப்போது திடீர்னு தளத்தில் ஒரு பரபரப்பு.கூட்டத்தில் இருந்து கிஸ்ஜே கூர்யா பரபரப்பாக உள்ளே வந்து “நீலப்படம் எடுக்குறாங்கன்னு சொன்னாங்க..எங்க நீலப்படம்?எங்க நீலப்படம்?” என்று ஆர்வமாக சுத்தியும் பார்க்கிறார்.
கவுன்டர்: டேய் அது நீலப்படம் இல்லடா!நீலா படம்!போ போய் ஒரு ஓரமா ஒக்காரு!

டென்தாரா:டைரக்டர் இந்த படத்துல எனக்கு  பாமசாமி பேத்தி கேரக்டர்தான?
பஞ்சித்: ஆமா மேம்.முற்போக்கான புரச்சி கேரக்டர்.
டென்: அப்போ பேதி பாபு, பாளி கங்கட், குத்தார்த் கிபின், கூஜகுமாரன் இந்தமாதிரி நாலஞ்சு டம்மி பீஸ்களை என்ன ஒன்சைட் லவ் பண்ணிகிட்டே  என்னோட வீட்டை சுத்திலும் பொட்டி கடை வச்சிருக்குற கேரக்டரா போட்டுடுங்க.அஜய் கேதுபதிக்கு பிரதான டம்மி கேரக்டர் குடுத்துடுங்க.
கஞ்சித்: ஒகே மேம்.
டென்: அஜய் கேதுபதி வேலை வெட்டி இல்லாம வீட்ல சமைச்சி போட்டுட்டு துணி துவைச்சிகிட்டு பாத்திரம் விளக்கிட்டு இருக்குற கேரக்டரா இருக்கணும்.அஜய் கேதுபதி அழுதுகிட்டே “கீயும் சாவியும் அன்பே கண்கள் பூட்டிக்கொண்டு ஒன்றாக வாழலாம்... இஹு..இஹு”ன்னு அழுதுகினே பாடுறாப்ல பிதின் ராஜை அழவிடுறோம்!அதையும் இந்த ஜனங்க “ஆகா இதாண்டா பாட்டு”ன்னு பாராட்டுவான்!
கஞ்சித்: அதோட கூனா கோலாவையும் கத்த விடுறோம்!
”என்னடி நினைச்ச?
எங்க நீலா பத்தி
”அட்ச்சா  மூஞ்சி பேந்துடும்..
மஞ்சாசோறு வெளிய உழும்.”
டங்குடக்கர டார டக்கர....
டென்:அது முக்கியம்!இந்த கல்லிக்கட்டு பாமசாமி  சமத்துவம் பொதுவுடைமை  சாதி மத ஒழிப்புன்னு நடுநடுவுல வரிய போட்டுடுங்க.
கஞ்சித்: ஒகே மேம்.
டென்: எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம்.நா தூங்குற சீன்லேயும் கரோஜா கேவி மாதிரி புல் மேக்கப்ல  தான் நடிப்பேன்.மேக்கப் போட்டதும் அடுத்த ஒன் அவருக்குதான் நடிப்பேன்.அப்புறம் பேக்கப்.
கஞ்சித்: ம்ம்ம்..கஜினியவே வச்சி கோமாளி மாதிரி ஆட்டி வச்ச என்னைய இப்படி கண்ல விரல விட்டு ஆட்டுறா!பாமசாமி பேத்தின்னா சும்மாவா!
.


அடுத்து பங்கர் இயக்கம் கிண்டியன் 2.
கிண்டியன் யூனிபார்மில் விமலகாசன் நிக்குறாப்ல ஆயிரம் பேனர்கள் ஆயிரம் அடி உயரத்தில் படப்பிடிப்பு தளம் முழுக்க வைக்கப்பட்டிருந்தது.வெண்ணை மாநகரத்தை முழுக்க செட் போட்டிருந்தார்கள்.
பங்கர்: ஜி நீங்க பஸ்ல ஏறி கொருக்குபேட்டை டு வண்டலூர் போறீங்க.அப்போ டிக்கட் காசு குடுத்ததும் மிச்சம் சில்ற ரெண்டு ரூவா கேக்குறீங்க.கண்டக்டர் “டேய் அதெல்லாம் குடுக்க முடியாதுடா.ஆனத்த பாத்துக்க”ன்னு சொல்ல கர்மக்கலை பயன்படுத்தி கண்டக்டர் பேகை பிடுங்கி அதுல இருக்குற நோட்டுகளை எல்லாம் பஸ்ல வீசி எறிஞ்சிட்டு இறங்கி நடக்குறா மாதிரி.
விமலகாசன்: வெல் வெறுமனே நடக்குறா மாதிரி இல்லாம விசில் அடிச்சிகிட்டே நடக்குறேன்.பின்னாடி ஒரு பேனர்ல கய்யம் விசில் ஆப் டவுன்லோட் பண்ணுங்க விளம்பரம் இருக்குறாமாதிரி பாத்துக்குங்க.
பங்கர்:க்கும்.இவரு கட்சி ஆரம்பிச்சதுக்கு ப்ரொட்யூசர் காசுல விளம்பரமா?அதுசரி நாம பண்ணாத அலப்பறையா?
விமல்:அப்புறம் நம்ம கம்பனி ஆர்டிஸ்ட் எல்லாரும் இதுலயும் இருக்கணும்.பாண்ட்ரியா,கூஜா புமார்,கரவிந்த் கமேஷ்,பூகி கேது,பம்.எஸ்.காஸ்கர்  எல்லாரும் இருக்கணும்.ம்யூசிக் ககமது பிப்ரானை போட்டுடுங்க..அப்புறம்.....
பங்கர்: ஸ்..ஸ்...சப்பா!மிடில!பல வருசமா டம்மி டைரக்டர போட்டு இவரே டைரக்ட் பண்ணி நடிச்சிட்டதால இவரை கட்டி மேய்க்கிறது ரொம்ப கஷ்டம் போலிருக்கே!பேசாம குஜய வச்சே படத்த எடுத்திருக்கலாம் போல!
.
கங்கட் கிரபு இயக்கம் பாட்டி பட ஷூட்டிங் ஸ்பாட்.பத்து மணி ஷூட்டிங் என்று சொன்னாலும் மதியம் மூணு மணிக்குதான் டைரக்டருக்கு ஹேங்ஓவர் தெளிஞ்சிது. தயாரிப்பாளர் எலுமிச்சை சாறு குடுத்து மூஞ்சில ஐஸ் வாட்டர் ஊத்தி ஒரு மாதிரி தெளிய வச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டி வந்திருந்த நேரம்...
பழைய நாடக நடிகர்கள் எல்லாரும் எண்பதுகள் கெட்டப்பில் டிஸ்கோ ஆடிக்கொண்டிருந்தனர்.
கங்கட் கிரபு:என்னாதிது?இந்த ஷாட் நா எப்ப வச்சேன்னு எனக்கே நியாபகம் வரலியே!சரி விடு!இதுக்கு ஆடியன்ஸ் எப்படி விழுந்து விழுந்து சிரிக்க போறான் பாரு!
கவுன்டர்: ஆடியன்ஸ் சிரிக்கிறானோ இல்லையோ. ப்ரொட்யூசர் தெருவுல சந்திசிரிக்க போறான் .அது நிச்சயம்! 
கங்கட்: வழக்கம் போல சொந்தமா எந்த வசனமும் எழுதாம...
கவுன்டர்: டேய் நிப்பாட்டு..உனக்கு எழுத தெரிஞ்சா எழுத மாட்டியாடா?எப்பவும் போல எவனாச்சும் எழுதி பேமஸ் ஆன வசனத்த சுட்டு போடு!
கங்கட்:மைன்ட் வாய்ஸ் நம்ம தொழில் ரகசியம் பூரா இவருக்கு தெரிஞ்சிருக்கே!
கவுன்டர்: ஆமா இவுரு பெரிய அம்பானி.அப்படியே தொழில் ரகசியத்த தெரிஞ்சிகிட்டாலும்...ஊசிப்போன ஊத்தப்பத்த சுடவச்சு குடுக்குறவன்தான நீயி?
கங்கட்: ஒகே!வழக்கம் போல என்னோட தம்பி கேம்ஜி இதுல காமெடி பன்னவச்சு  ஆடியன்சை கதற விடுறோம்! நீ அடிச்சா பீசு!நா அடிச்சா ப்யூசு!
கத்யராஜ்: பாஸ் இந்த விக் ரொம்ப அரிக்குது.அது தவிர டைட்டா போட்ட பேண்ட் வேற கவ்வுது.சீக்கிரம் ஷூட் பண்ணிட்டா நா கிளம்பிடுவேன்!
கங்கட்: இருங்க சார்.கம்யா ப்ரிஷ்ணன் மேக்கப் போட்டுட்டு வர எப்படியும் நைட்டு ஒன்பதாகிடும்.அதுவரைக்கும் இப்படிதான் இருக்கணும்!
கத்யராஜ்:மைன்ட் வாய்ஸ்: யூத் வேஷம் போட ஆசைப்பட்டு இவன் படத்துல நடிக்க ஒத்துகிட்டது தப்பா போச்சு.பேசாம பிவமூர்த்திகேயன் எடுக்கும் பனா படத்துல பெரியார் பேத்திக்கு அப்பாவா நடிச்சிட்டு போயிருக்கலாம்!கெரகம்!
.
.
அடுத்து பட்லி இயக்கி குஜய் நடிக்கும்  கண்ணாமலை பட உல்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும் அளவு திராணி இல்லாததால் இத்தோட முடிச்சிகினோம்!