ஆனால் அதன்பிறகு இந்த அதியற்புத ஸ்டைலான குரலை முழுப்பாடலுக்கு பெரும்பாலும் யாரும் பயன்படுத்தவில்லை.
பெரும்பாலும் ஹம்மிங் கோரஸ் போன்றவற்றில் மட்டுமே அவர் பெயரை காண முடிந்தது.குறிப்பாக ஏ.ஆர்.ஆர் அதிகமாக இவர் குரலை அவ்வாறு பயன்படுத்தினார்.
Dil Se படத்தில் Dil Se Re பாடலின் இறுதியில் அனுபமா(கொஞ்சம் நிலவு புகழ்) & அனுராதா ஶ்ரீராம் பாடி இருப்பார்கள்.அதுவே தமிழில் சந்தோஷ கண்ணீரே பாடலின் இறுதியில் அனுராதா ஶ்ரீராம் மற்றும் ஃபெபி மணி ஆகியோர் பாடி இருப்பார்கள்."பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே" என்று தொடங்கி இரண்டே இரண்டு வரிகள்.
ஹாரிஸ் மாம்ஸ் இவருக்கு சில பாடல்களை பாட கொடுத்தார்.
பிறகு ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஜித்தன் படத்தில் "கோயமுத்தூர் பொண்ணு நீயா" பாடலை ஶ்ரீகாந்துடன் பாடியிருப்பார்.ஆனால் அந்தப்பாடல் அவரது comfort zone க்கு வெளியே வரும் பாடல் என்பதால் அவரது குரல் மிகச்சுமாராக ஒலித்திருக்கும்.
ஶ்ரீகாந்த் தேவாவை மணமுடித்த கையோடு பாடுவதை நிறுத்திக்கொண்டார்.அவர் பாடுவதை நிறுத்தியது அப்போது வருத்தமாக தெரியாமல் அதன்பிறகு வேறு சில பாடல்களை கேட்கும்போது "இந்தப்பாடலை ஃபெபி பாடியிருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்" என்று தோன்றியது மூன்று பாடல்களை கேட்டபோது.
1. கஜினி படத்தில் ரஹத்துள்ள பாடல்
2.அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதை அவர் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றும்.
3. அயன் படத்தில் ஹனி ஹனி பாடல்
***************************
தன்வி ஷா :
அதற்கு முன்பே ஆய்த எழுத்து படத்தில் யாக்கை திரி பாடலில் "ஜென்மம் விதை காதல் பழம்" என்று இடையில் பாடி இருப்பார்.
என் காதல் சொல்ல நேரமில்லை என்று யுவன் பாடிய பாடலின் இடையே "இவரைத்தவிற எவரும் இந்த மாதிரி ஹம்மிங் கொடுத்திருக்க முடியாது" என்கிற அளவில் பாடியிருப்பார்.
இறகைப்போலே அலைகிறேனே பாடலிலும் பின்னணி ஹம்மிங் தான்.
ஆனால் தனிப்பாடல்கள் என்றால் க்ளீஷே என்று சொல்லத்தக்க வண்ணம் ஒருமாதிரி ஆங்கிலத்தனமாக மட்டுமே பாட வைத்து (ஜில்லென்று ஒரு காதல் படத்தில் அதே வரிகளில் ,சிவாஜி படத்தில் ஸ்டைல், சரோஜாவில் My Life) அவரது குரலின் வேறு பரிணாமங்கள் வெளிப்பட வாய்ப்பில்லாமல் செய்தனர்.
புதுப்பேட்டை படத்தில் புல் பேசும் பாடல் கொஞ்சம் அந்த சட்டகத்தில் இருந்து வெளியே வந்த பாடல்.தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் அதே வரிகளில் ஆண்ட்ரியாவுடன் பாடியிருப்பார்.ஏற்கெனவே ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தனமான பாடல்களை பாடி வந்ததால்( கண்ணும் கண்ணும் நோக்கியா மாதிரி) அந்த இடத்தில் தன்வியின் தனித்தன்மை அடிபட்டு போனது.
நாம் விரும்பியது என் காதல் சொல்ல பாடலின் இடையில் அவர் ஹம்மிங் செய்யும் அந்த தொனியில் ஒரு முழுப்பாடல்.அது நடக்கவில்லை.
ஆனால் ஹிந்தியில் Pappu can't dance Saala (Jaane Tu ya jaane naa) உள்ளிட்ட பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.ஆனால் பதிவின் தலைப்பில் சொல்லப்பட்ட அந்த கருத்துக்கு வெளியே அது சென்று விடும் என்பதால் அதைப்பற்றி எழுதவில்லை.
மேலும் தலைப்பை இருவிதமாக அர்த்தம் கொள்ளலாம்.
- தமிழில் இந்த இரு குரல்களையும் இப்போது கேட்க முடியாது.
- பெரும்பாலும் இருவரும் பின்னணியில் ஹம்மிங் கோரஸ் இடைநிரவல் என்றே குறுகிய வட்டத்திற்குள் வைக்கப்பட்டுவிட்டனர்.
No comments:
Post a Comment